Category: இந்திய செய்திகள்

  • மீண்டும் பரவும் கொவிட்- நான்கு பேர் உயிரிழப்பு

    இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில், சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த நான்கு பேரும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் பிற நீண்டகால உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 26 ஆம் திகதி…

  • இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை ஹரியானாவில் தொடக்கி வைத்தார் மோடி

    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலின் சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையிலான ரயில் என்ஜினை தயாரிக்கும் முயற்சிகள் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கியது. வடக்கு மண்டல ரயில்வேயிற்காக 140 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் தொடங்கிய நிலையில், சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு வந்தன. இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை அடுத்து, ரயில்…

  • இந்தியாவுடன் எதுவித வர்த்தகப் பேச்சுவார்த்தையும் இல்லை – ட்ரம்ப்!

    இந்தியாவுடன் எதுவித வர்த்தகப் பேச்சுவார்த்தையும் இல்லை – ட்ரம்ப்!

    பிரச்சினைகள்  தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 30 அன்று, டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்தார். மேலும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்களை இறக்குமதி செய்தால் கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். அதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதல் வரிகளை விதிக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதன்மூலம்,…

  • அணு ஆயுத அச்சுறுத்தல்களை பொறுத்துக் கொள்ள முடியாது; ஜெய்சங்கர் திட்டவட்டம்

    அணு ஆயுத அச்சுறுத்தல்களை பொறுத்துக் கொள்ள முடியாது; ஜெய்சங்கர் திட்டவட்டம்

    ‘எந்தவித அணு ஆயுத அச்சுறுத்தல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாது’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டில்லியில் தே.ஜ., கூட்டணி பார்லி., குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று நிறைவேற்றப்பட்ட தேஜ கூட்டணி பார்லிமென்ட் குழு கூட்டம் தீர்மானம், அமைதிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும்…

  • உலகின் பெரிய விமான போக்குவரத்து சந்தையில் இந்தியா 5வது இடம்!

    உலகின் பெரிய விமான போக்குவரத்து சந்தையில் இந்தியா 5வது இடம்!

    உலகின் 5வது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக இந்தியா உயர்ந்துள்ளது என, ஐஏடிஏ எனப்படும் பன்னாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 350 விமான நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச விமான நிலைய போக்குவரத்து அமைப்பு , 2024ம் ஆண்டிற்கான உலக விமானப் போக்குவரத்து புள்ளிவிவரங்களின் சமீபத்திய அறிக்கையை இன்று வெளியிட்டது. மேலும் அவ்வறிக்கையில் ,மும்பை-டில்லி விமானச் சேவை 2024-ல் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலைய வழித்தடமாக இடம்பிடித்துள்ளது.  கடந்த ஆண்டு இந்தியா 21 கோடியே…

  • உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

    உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

    உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாகி இருப்பது சிறப்பான ஒன்று என்று இந்திய முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சார்பில் 15வது உடலுறுப்பு தானம் தின நிகழ்ச்சியில், உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் ஜேபி நட்டா விருது வழங்கி கௌரவித்தார். இந்த நிலையில், உடலுறுப்பு தானம் செய்து பலரின் உயிர்களை வாழ வைத்தவர்களை நினைவு கூர்ந்து, எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  • சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார்

    சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார்

    தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த மதன் பாப் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 71. மதன் பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இசையமைப்பாளராக தனது திரைவாழ்க்கையை தொடங்கிய இவர், ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நீங்கள் கேட்டவை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மதன் பாப், பல மொழிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தேவர்மகன், சதி லீலாவதி, துள்ளாத மனமும்…

  • 146 பயணிகளுடன் புறப்படவிருந்த விமானத்தில் தவிர்க்கப்பட்ட மற்றுமொரு பாரிய விபத்து!

    146 பயணிகளுடன் புறப்படவிருந்த விமானத்தில் தவிர்க்கப்பட்ட மற்றுமொரு பாரிய விபத்து!

    சென்னையில் இருந்து தாய்லாந்து நோக்கிப் புறப்படவிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டதால் குறித்த விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பேங்கொக் நோக்கி 146 பயணிகளுடன், தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் புறப்பட ஆயத்தமாகிய நிலையில் விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையை விமானி கண்டறிந்ததால் குறித்த விமானம் இரத்து செய்யப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சினையை சரி…

  • பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்!

    பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்!

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 4 பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பக்துன்க்வா மாகாணத்திற்கு சுற்றுலா வந்த குழுவின் ஒரு பகுதியினர் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர்), ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன்படி கனமழை காரணமாக வெள்ளம்…

  • மாந்திரீக தடை சட்டத்தை அமல்படுத்த ஐகோர்ட்டில் கேரள அரசு மறுப்பு

    மாந்திரீக தடை சட்டத்தை அமல்படுத்த ஐகோர்ட்டில் கேரள அரசு மறுப்பு

    கொச்சி : ‘கேரளாவில், மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற நடவடிக்கைகளை தடைசெய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்த போவதில்லை’ என, உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில், மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற நடவடிக்கைகளால் தொடர் உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதை தடுக்கும் நோக்கில், ‘மாந்திரீகம், பில்லி, சூனியம் தடுப்பு மற்றும் ஒழிப்பு மசோதா’வை, சட்ட சீர்திருத்த கமிஷன், 2022ல் பரிந்துரைத்தது. இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது என கேரள அரசு பின்வாங்கியது. இது தொடர்பாக, யுக்திவாடி…