Category: உலக செய்திகள்

  • நியூயோர்க்கில் 10 நிமிட கெடுவுடன் கூடிய அதிநவீன இலவச பொதுக் கழிப்பறைகள் அறிமுகம்!

    அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பொதுமக்களின் வசதிக்காக 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 அதிநவீன இலவச பொதுக் கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் இந்த கழிப்பறைகளை யார் வேண்டுமானாலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் எளிதாகக் கண்டறியும் வகையில் பிரத்யேக மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே நேர வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் உள்ளே சென்றதும் ‘கவுண்ட் டவுன்’ நேரக் கணிப்பு…

  • அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்: வைரலாகும் வீடியோ

    அமேசான் மழைக்காடுகளின் மையப்பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியின கிராமம் ஒன்றை, விமானத்தில் பயணித்த நபர் ஒருவர் படம்பிடித்துள்ள வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அமேசான் காடுகளின் பிரமாண்டம் தென் அமெரிக்க கண்டத்தின் வடபகுதியில் சுமார் 70 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள அமேசன், உலகின் மிகப்பெரிய மழைக்காடாகும். பிரேசில், பெரு, கொலம்பியா, பொலிவியா உள்ளிட்ட 9 நாடுகளில் பரவியுள்ள இக்காடுகளில் 3,900 கோடி மரங்களும், 16,000-க்கும் மேற்பட்ட உயிரின வகைகளும் வாழ்கின்றன.…

  • நோபல் பரிசுக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

    நோபல் பரிசுக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. நோபல் அறக்கட்டளை, நோபல் பரிசுக்கான பரிசுத்தொகையை உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றவர்கள் பெயர்கள், அக்டோபர் மாதம் 5 முதல் 12ஆம் திகதிக்குள்ளான காலகட்டத்தில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நோபல் பரிசை வழங்கும் நோபல் அறக்கட்டளை, நோபல் பரிசுக்கான பரிசுத்தொகையை உயர்த்தியுள்ளது. ஆம், இதற்கு முன் நோபல் பரிசு வென்றவர்களுக்கு 11 மில்லியன் குரோனர் (kronor) வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நோபல் பரிசு வெல்பவர்களுக்கு 12 மில்லியன் குரோனர்…

  • பொலிவியாவின் அடர்ந்த காடுகளில் மிகவும் சிறிய வடிவிலான புதிய விலங்கினம் கண்டுபிடிப்பு

    பொலிவியாவின் அடர்ந்த காடுகளில் மிகவும் சிறிய வடிவிலான புதிய காட்டுப்பூனை இனம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் முறைப்படி கண்டறிந்து பெயரிட்டுள்ளனர். கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலான காலத்தில், புதிய உயிருள்ள பூனை இனம் ஒன்று முறைப்படி கண்டறியப்பட்டு பெயரிடப்படுவது இதுவே முதல்முறையாகும். உள்ளூர் மக்களால் ‘டில்காயோ’ என அழைக்கப்படும் இப்பூனைக்கு ‘லியோபார்டஸ் டில்காயோ’ (Leopardus tilcayo) என ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானப் பெயரிட்டுள்ளனர். பொலிவியாவின் மேக மூட்டம் நிறைந்த யுங்காஸ் காட்டுப் பகுதியில் வாழும் இது, சாதாரண வீட்டுப் பூனையை…

  • காசாவில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்: கல்வி அமைச்சு அவசர கோரிக்கை

    காசாவில் புதிய கல்வி ஆண்டிற்காகப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அங்குள்ள கல்வி நிறுவனங்களையும் கல்விச் சமூகத்தையும் பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் காசா கல்வி அமைச்சு அவசர கோரிக்கை விடுத்துள்ளது. காசா மீதான போரை உடனடியாக நிறுத்துவதற்கும், பாடசாலைகள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு இந்த கோரிக்கையின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் இன்று (19.9) ஆரம்பமாகியுள்ள நிலையில், சுமார் ஐந்து இலட்சம் மாணவர்கள்…

  • எரித்திரியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

    செங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிராந்திய நலன்களை முன்னெடுக்கும் நோக்கில் எரித்திரியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தினால் எரித்திரியாவின் ஆளும் கட்சி மற்றும் இராணுவத்தைக் இலக்குவைத்து இந்தத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. எத்தியோப்பியாவின் திக்ரே (Tigray) பிராந்திய மோதலின் போது எரித்திரியப் படைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டே இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. செங்கடல்…

  • ரஷ்யாவில் சூடுபிடித்த தேர்தல்.. கட்சிகளுக்குத் தடை.. புதின் ஆதிக்கம் தொடருமா?

    உக்ரைன் மீதான போர் தொடங்கப்பட்டதற்குப் பிறகு, ரஷ்யாவில் நாடாளுமன்றத் தேர்தல் மூன்று நாட்கள் வாக்குப்பதிவுடன் தொடங்கியுள்ளது. ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாடிமிர் புடின் ஆதரவு பெற்ற ஆளும் ‘யுனைடெட் ரஷ்யா’ (United Russia) கட்சிக்கு வெற்றி வாய்ப்பும் பெரும்பான்மை ஆதரவும் அதிகமாக இருப்பதாகக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. நேட்டோ நாடுகளில் இணையக்கூடாது என்பதற்காக உக்ரைன் மீது ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் போர் தொடுத்தது. அது 4 ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை நடைபெற்று…

  • சிறுமி முதல் மூதாட்டி வரை.. உக்ரைன் போரில் 1,004 பாலியல் வன்முறைகள்.. ரஷ்யா மீது UN குற்றச்சாட்டு!

    நேட்டோ நாடுகளில் இணையக்கூடாது என்பதற்காக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் போரில் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பான அறிக்கை வெளியாகி உள்ளது. இதில், 89% பாலியல் வன்முறையை ரஷ்யா அரங்கேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேட்டோ நாடுகளில் இணையக்கூடாது என்பதற்காக உக்ரைன் மீது ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் போர் தொடுத்தது. அது 4 ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனும்…

  • ஈரான் போர்| அமெரிக்க பலி எண்ணிக்கை.. வெளியான புதிய தகவலால் பரபரப்பு!

    அமெரிக்கா–ஈரான் போரில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை தொடர்பாக The Washington Post வெளியிட்ட செய்தி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பென்டகன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள எண்ணிக்கையை விட அதிகமான அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த செய்தி கூறிய நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்சத் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். Washington Post வெளியிட்ட தகவலின்படி, ஈரான் போரின் தொடக்கம் முதல் குறைந்தது 22 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

  • 6 லட்சம் பேர்.. கையில் AK-47.. வீதியில் இறங்கிய பெண்கள்! ஈரானில் திடீர் பரபரப்பு!

    அமெரிக்கா–இஸ்ரேல் உடனான போர்ச் சூழல் நீடித்து வரும் நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஆயுதம் ஏந்திய பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றுள்ளது. ‘Janfada-ye Iran’ ‘ஈரானுக்காக தியாகம் செய்பவர்கள் என்ற பெயரில் நடைபெற்ற இந்த அரசாங்க ஆதரவு பேரணி, போர் தொடங்கிய பின்னர் நடைபெற்ற மிகப்பெரிய பேரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த பேரணியில் ராணுவ உடை அணிந்தவர்கள் ஈரான் கொடிகளை ஏந்தியபடி ஈரான் நகரின் முக்கிய சாலைகளில் அணிவகுத்துச் சென்றனர்.…