Category: உலக செய்திகள்
-
அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே பாதுகாப்பான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!.
அரிக்காவும், சவூதி அரேபியாவும் அமைதியான குடிமக்கள் பயன்பாட்டிற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் சவூதி அரேபியாவில் அமெரிக்க தொழில்நுட்பத்துடன் கூடிய அணு உலைகளைக் கட்டுவதற்கும், யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கும் வழிவகை செய்கிறது. அமெரிக்க எரிசக்தி திணைக்கள செயலாளர் கிறிஸ் ரய்ட் மற்றும் சவூதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் ஆகியோர் அமைதியான முறையில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும், அதனுடன் இணைந்த இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க எரிசக்தி…
-
சிறார்கள்,பிரான்சில் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை
றார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் முதல் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறவுள்ளது. சிறுவர்களை இணையவழி ஆபத்துகள் மற்றும் மனநலப் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பதற்காக பிரான்ஸ் நாடாளுமன்றம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த இந்தச் சட்டம் தடை விதிக்கிறது. இந்தத் தடை இரண்டு கட்டங்களாக நடைமுறைக்கு வருகிறது :வரவிருக்கும் செப்டம்பர் மாதம் முதல், 15 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் புதிய சமூக ஊடகக்…
-
ஈரானின் உட்கட்டமைப்புகள் தாக்கி அழிக்கப்படும் – ட்ரம்ப்
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் பதில் வழங்கும் நோக்கில், ஈரானின் ஒரு பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்கா தாக்கி அழிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானியத் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை இலக்கு வைக்கவுள்ளதாக அவர் மீண்டும் எச்சரித்துள்ளார். இரு தரப்பிலும் பரஸ்பரத் தாக்குதல்கள் தீவிரமடைந்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இடைக்கால ஒப்பந்தம் சீர்குலைந்துள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இனிமேல்,…
-
ஆட்கடத்தல் வலையுடன் தொடர்புடைய 7 இலங்கையர்கள் கைது.
சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை மலேசியக் குடிவரவுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாங்கூர், ஜெஞ்சாரோம் பகுதியில் உள்ள மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, குறித்த சந்தேகநபர் கைதாகியுள்ளார். தனது முதலாளியால் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதாகக் கருதப்படும் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடு மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அத்திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புலனாய்வுத் தகவல்கள், ஆட்கடத்தல் நடவடிக்கைகளில்…
-
பிரிட்டனின் முதல் AI துறை அமைச்சராக இந்திய வம்சாவளி ஒருவர் நியமனம்
பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள என்டி பர்ன்ஹாம் தனது புதிய அமைச்சரவையை அமைத்துள்ள நிலையில், நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி கனிஷ்க நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமராக இருந்த கீர் ஸ்டார்மர் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற ஆன்டி பர்ன்ஹாம் தனது புதிய அமைச்சு சேவையை ஆரம்பித்துள்ளார். தற்போது பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி வரும் இவர், பிரிட்டன் அரசாங்கத்தின் முதல் AI அமைச்சராகப்…
-
சிங்கப்பூர் நகைக் கடையில் வைரம் திருட்டு- இரண்டு இந்தியர்கள் கைது
சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல நகைக் கடையில், 4.95 கெரட் மதிப்புள்ள வைரத்தை திருடிவிட்டு, அதற்குப் பதிலாக போலி வைரத்தை மாற்றி வைத்துவிட்டுத் தப்பியோடிய இரு இந்திய சுற்றுலாப் பயணிகளை சிங்கப்பூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த இருவரும் இந்தியாவுக்குச் செல்ல முயன்றபோது,சிங்கப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தேக நபரொருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.…
-
ஈரான் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்கா இன்று (21) தொடர்ந்து 10ஆவது நாளாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கூட்டுத் தாக்குதலை மேற்கொண்டபோது, இதற்குப் பதிலடியாக, உலகின் மிக முக்கிய கடல்வழி வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. மேலும், அவ்வழியாகச் சென்ற மசகு எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்கள் மீதும், மத்திய கிழக்கில் உள்ள…
-
ஆப்கானிஸ்தானில் கனமழை 20 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நூரிஸ்தான் மாகாணத்தில் பெய்த கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளதுடன்,100 பேர் காணாமல் போயுள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்திசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காணாமல் போனவரகளை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
-
பெருவில் இரட்டை நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த ஜூலை 18 சனிக்கிழமை இரவு அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். பெருவின் தலைநகரான லிமாவிற்கு கிழக்கே அமைந்துள்ள ஜுனின் பிராந்தியத்தின் சுபாகா மாகாணத்தில் இந்த நிலநடுக்கங்கள் மையம்கொண்டிருந்தன.குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவானது. இது பூமியின் அடியில் சுமார் 24 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. சில மணி நேர இடைவெளியில் இரண்டாவது நிலநடுக்கமானது ரிக்டர்…
-
உக்ரைன் சரக்குக் கப்பல் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்- 10 பேர் உயிரிழப்பு
உக்ரைன் சரக்குக் கப்பல் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 4 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து சோளம் ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. கோல்டன் லியோ வணிகக் கப்பல் மீது ரஷ்யா 3 ‘க்ரூஸ்’ ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதேவேளை, கப்பலில் இருந்த 17 மாலுமிகளுள் 8 பேர் மீட்கப்பட்டதுடன், படுகாயமடைந்த மற்றொரு இந்தியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள்…