Category: பிரதான செய்தி
-
நியூயோர்க்கில் 10 நிமிட கெடுவுடன் கூடிய அதிநவீன இலவச பொதுக் கழிப்பறைகள் அறிமுகம்!
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பொதுமக்களின் வசதிக்காக 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 அதிநவீன இலவச பொதுக் கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் இந்த கழிப்பறைகளை யார் வேண்டுமானாலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் எளிதாகக் கண்டறியும் வகையில் பிரத்யேக மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே நேர வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் உள்ளே சென்றதும் ‘கவுண்ட் டவுன்’ நேரக் கணிப்பு…
-
காசாவில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்: கல்வி அமைச்சு அவசர கோரிக்கை
காசாவில் புதிய கல்வி ஆண்டிற்காகப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அங்குள்ள கல்வி நிறுவனங்களையும் கல்விச் சமூகத்தையும் பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் காசா கல்வி அமைச்சு அவசர கோரிக்கை விடுத்துள்ளது. காசா மீதான போரை உடனடியாக நிறுத்துவதற்கும், பாடசாலைகள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு இந்த கோரிக்கையின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் இன்று (19.9) ஆரம்பமாகியுள்ள நிலையில், சுமார் ஐந்து இலட்சம் மாணவர்கள்…
-
பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய ‘இண்டர்போல்’ ஊடாக ‘நீல அறிவித்தல்’ கோரிக்கை!
தற்போது வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கண்டறிவதற்காக ‘இன்டர்போல் நீல அறிவிப்பு’ (Interpol Blue Notice) ஒன்றைப் பிறப்பிக்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மாத்தறை, பிரவுன்ஸ்ஹில் பகுதியில் காணி ஒன்றை கொள்வனவு செய்தமை மற்றும் ஊவா மாகாண சபை தேர்தல் காலத்தில் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் 7.8 மில்லியன் ரூபாய் நிதியைச் செலவிட்டு 12,000 டி-ஷர்ட்டுகளை விநியோகித்தமை ஆகிய சம்பவங்கள் தொடர்பிலான நிதித்தூய்தாக்கல் குற்றச்சாட்டுகள் குறித்தே இந்த…
-
ரஷ்யாவில் சூடுபிடித்த தேர்தல்.. கட்சிகளுக்குத் தடை.. புதின் ஆதிக்கம் தொடருமா?
உக்ரைன் மீதான போர் தொடங்கப்பட்டதற்குப் பிறகு, ரஷ்யாவில் நாடாளுமன்றத் தேர்தல் மூன்று நாட்கள் வாக்குப்பதிவுடன் தொடங்கியுள்ளது. ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாடிமிர் புடின் ஆதரவு பெற்ற ஆளும் ‘யுனைடெட் ரஷ்யா’ (United Russia) கட்சிக்கு வெற்றி வாய்ப்பும் பெரும்பான்மை ஆதரவும் அதிகமாக இருப்பதாகக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. நேட்டோ நாடுகளில் இணையக்கூடாது என்பதற்காக உக்ரைன் மீது ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் போர் தொடுத்தது. அது 4 ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை நடைபெற்று…
-
“எந்த எல்லைக்கும் செல்வோம்..” களத்தில் இறங்கும் பாகிஸ்தான்? தாக்குதலால் பரபரக்கும் வளைகுடா!
சவூதி அரேபியா என்றாலே இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களான மக்கா, மதீனா, எண்ணெய் வளம், வளைகுடா நாடுகள் எனப் பல விஷயங்கள் நினைவுக்கு வரும். ஆனால், தற்போது சவூதி அரேபியாவைச் சுற்றி அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், “சவூதி அரேபியாவுக்காக… எந்த எல்லைக்கும் செல்வோம்!” என பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிவிப்பு, தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. சவூதி அரேபியாவுக்கும், யேமனில் செயல்பட்டு வரும் ஹவுதி அமைப்புக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து…
-
20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானில் இன்று ஆரம்பம்
20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானின் ஐச்சி-நகோயா (Aichi-Nagoya) நகரங்களை மையமாகக் கொண்டு இன்று (19) ஆரம்பமாகியுள்ளது. இது அக்டோபர் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு விழாவான இதன் இம்முறை கருப்பொருள் ‘Imagine One Asia’ என பெயரிடப்பட்டுள்ளது. ஆசிய ஒலிம்பிக் பேரவைக்கு உட்பட்ட 45 நாடுகளும் பிராந்தியங்களும், முதன்முறையாக இணையும் ஆசிய அகதிகள் குழுவும் அடங்கலாக மொத்தம் 46 அணிகள் இம்முறை போட்டிகளில் பங்கேற்கின்றன. ஜப்பான் ஆசிய விளையாட்டு விழாவை நடத்தும்…
-
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% தீர்வை வரி
உக்ரைன் மீதான போரைக் கருத்திற் கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசரச் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இந்தச் சட்டமானது ரஷ்யாவின் வலுசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளை இலக்கு வைப்பதுடன், ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் மூத்த அதிகாரிகளையும் குறிவைக்கிறது. மேற்கத்திய நாடுகளின் தடைகளில் இருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரஷ்யாவின் ‘நிழற்படைக் கப்பல்களை’ (shadow fleet) இலக்கு வைக்கும் இச்சட்டம்,…
-
ஈரான் போர் | இதுவரை ரூ.3.2 லட்சம் கோடி செலவு.. காலியாகும் அமெரிக்காவின் கஜானா!
ஈரானுடன் அமெரிக்கா நடத்திவரும் போர் 7ஆவது மாதத்தைக் கடந்துள்ளது. இந்த, 200 நாட்களில் 3 லட்சத்து 20ஆயிரம் கோடி ரூபாயை அமெரிக்கா செலவிட்டுள்ளது. இதில் செயல்பாட்டுச்செலவுகள், எரிபொருள் செலவுகளுடன் ஏராளமான போர் விமானங்கள், ட்ரோன்கள் இழப்பும் அடங்கும். இது, அமெரிக்காவில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க-ஈரான் மோதல் 200 நாட்களைக் கடந்து 7-ஆவது மாதத்தில் அடிஎடுத்து வைத்துள்ளது. அமெரிக்கா இப்போருக்காகத் தினமும் சராசரியாகப் பல்லாயிரம் கோடிகளைச் செலவிட்டு வரும் நிலையில், இதுவரை…
-
நடிகர் தனுஷ் வெளியிட்ட ஒரேயொரு பதிவு, சமூக வலைதளங்களில் பெரும் பூகம்பத்தையே கிளப்பியிருக்கிறது.
நடிகர்கள் நாடாள முடியுமா என்ற கேள்வி, தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் எப்போதும் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும் கேள்வி தான். ஆனால், இந்த கேள்விக்கு ஆம் என்று பதில் அளித்தவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலிதா, விஜய் ஆகியோர் தான். விஜயகாந்த் மட்டும், எதிர்கட்சி தலைவர் பதவி வரை உயர்ந்தார். மற்றபடி, சிவாஜி, சரத்குமார், பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்றோர் கட்சியை ஆரம்பித்து, பாதியிலேயே கலைத்துவிட்டு அரசியலில் இருந்து காணாமல் போனார்கள். அவ்வளவு ஏன், தமிழகத்தின் மிகுந்த ஆளுமையான நபர் என்று கூறப்பட்ட…
-
35 ஆண்டுகளில் இல்லாத வறட்சி.. ஆபத்தில் பூமியின் நன்னீர்.. உலக ஆறுகள் குறித்து WMO அதிர்ச்சி அறிக்கை!
கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலகின் ஆறுகளில் நீர்வரத்து மிகக் தீவிரமாகக் குறைந்துள்ளதாக, ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் குடிநீர் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ள ‘மாநில உலகளாவிய நீர் வளங்கள் 2025’ (State of Global…