Category: பிரதான செய்தி

  • நாமல் ராஜபக்ஷ மலேசியா மற்றும் சிங்கப்பூரிற்கு பயணம்

    மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹின் மகளின் திருமண விழா, ஜூலை 2026 இல் மாலைதீவில் உள்ள ஒரு ஆடம்பரமான உல்லாச விடுதியில்  நடைபெற்றது. இத்திருமண நிகழ்வில் பல்வேறு சர்வதேச முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, இலங்கையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி லிமினி ராஜபக்ச ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மாலைதீவில் உள்ள ஒரு புகழ்பெற்ற சொகுசு தீவு உல்லாச விடுதியில்…

  • பிரித்தானியாவின் 59ஆவது பிரதமரானார் எண்டி பர்ன்ஹாம்!

    தொழிற்கட்சித் தலைவராக இருந்த சர் கீர் ஸ்டார்மர்  தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்ள்ஸை  சந்தித்த ஆண்டி பர்ன்ஹாம், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான மன்னரின் அழைப்பை ஏற்று நாட்டின் புதிய பிரதமரானார். எண்டி பர்ன்ஹாம் பிரதமராக நியமிக்கப்பட்டதை உறுதிபடுத்தி பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், ‘மன்னர், கௌரவத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் எண்டி பர்ன்ஹாமைச் சந்தித்து, புதிய நிர்வாகத்தை அமைக்குமாறு கோரினார். மன்னரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட எண்டி பர்ன்ஹாம், பிரதமர்…

  • இலங்கையின் புதிய கடற்படைத் தளபதி – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு

    இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றமைக்காக, கடற்படைத் தளபதிக்கு ஜனாதிபதியின் செயலாளர் தனது வாழ்த்துகளை இதன்போது தெரிவித்துள்ளார். இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதியினால் ஜனாதிபதியின் செயலாளருக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டுள்ளது.

  • இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு

    அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று (20) சற்று அதிகரித்துக் காணப்படுகின்றது. அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 331.67 ரூபாயில் இருந்து 331.50 ரூபாயாகக் குறைந்துள்ளதுடன், அதன் விற்பனை விலையும் 341.08 ரூபாயில் இருந்து 340.90 ரூபாயாகக் குறைந்து ரூபாயின் மதிப்பு சற்று வலுவடைந்துள்ளது. அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க்…

  • வரலாறு படைத்து விட்டோம்: மெஸ்ஸி

    உலகக்கோப்பை இறுதி போட்டியில் என்ன நடந்தாலும் சரி, அர்ஜென்டினா அணி யாராலும் மறக்க முடியாத, அழிக்க முடியாத வரலாறு படைத்து விட்டது” என அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் இன்றிரவு இலங்கை நேரப்படி 12.30 மணிக்கு மோத உள்ளன. இந்த சூழலில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி தனது அணியில் குழு படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

  • இரண்டு தேசிய விருதுகள் : நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி

    நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனுஷிற்கு இயக்குநராகக் கிடைக்கும் முதல் தேசிய விருது ஆகும். அதே நேரத்தில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக அவருக்குச் சிறந்த நடிகருக்கான  தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை வெற்றி குறித்து நடிகர் தனுஷ் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட உருக்கமான அறிக்கையில்,’ராயன்’ படத்திற்காகச் சிறந்த தமிழ்த் திரைப்பட விருதையும், ‘கேப்டன்…

  • இலங்கைத் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் -சிட்னியில் த்ரிஷா.

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகை த்ரிஷா தனக்கு இலங்கைத்தமிழ் மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். சிட்னியின் மார்ஸ்டன் பார்க் (Marsden Park) பகுதியில் அமைந்துள்ள ‘KST Spice Corner” என்ற கடையின் 15ஆம் ஆண்டு நிறைவு மற்றும் புதிய கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகை த்ரிஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஏராளமான இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்கள் கலந்து கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு…

  • படுகொலைகள் தற்கொலையாக மாறும் கலாசாரம் தற்போது காணப்படுகிறது – மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடக பேச்சாளர் மனோஜ் கமகே!

    முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது. மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதற்கு முன்னரே அவர் தற்கொலை செய்துக் கொண்டார் என்று யார் உறுதிப்படுத்தியது. படுகொலைகள் தற்கொலையாக மாறும் கலாசாரம் தற்போது காணப்படுகிறது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, சர்ச்சைக்குரிய வழக்குகளின்…

  • இலங்கையில் வீடுகளுக்களிற்குள்ளேயே நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

    இலங்கையில் நுளம்பு குடம்பிகள் தற்போது அதிகளவில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கும் இடங்களிலேயே கண்டறியப்படுவதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வெளிப்புற சுற்றாடலுடன் ஒப்பிடும்போது வீடுகளுக்குள் வைக்கப்பட்டுள்ள பூச்சாடிகளிலும் குளிரூட்டிகளில் நீர் தேங்கும் இடங்களிலும் அதிகளவிலான நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் பதிவாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்தார். அதற்கமைய வீட்டு உரிமையாளர்கள் தமது வீடுகளை தொடர்ச்சியாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.நுளம்பு குடம்பிகள் பெருகக்கூடிய சூழலை வைத்திருக்கும் வீடுகள் மற்றும் வளாகங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கைகளும்…

  • ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகையான ஆடிப்பிறப்பு இன்று

    ஆடிப்பிறப்பு என்பது தமிழ் ஆடி மாதத்தின் முதல் நாளைக் குறிக்கும் ஒரு விசேட பண்டிகையாகும் (பொதுவாக ஜூலை 16 அல்லது 17 ஆம் திகதிகளில் இது கொண்டாடப்படும்). இப்பண்டிகை குறிப்பாக ஈழத்துத் தமிழர்களின் (இலங்கைத் தமிழர்கள்) வாழ்வியலோடும் பண்பாட்டோடும் மிகவும் நெருங்கிய தொடர்புடைய ஒரு முக்கிய திருநாளாகும். சித்திரை முதல் ஆனி வரை நீடிக்கும் கோடை காலத்தின் வெப்பம் தணிந்து, குளுமையான காற்றுடன் கூடிய தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கும் காலமே ஆடி மாதமாகும். ஆடி மாதத்தில்…