Category: இலங்கை செய்திகள்
-
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,100 ஐக் கடந்தது!
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், நேற்று (21) வரை பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 78,125 ஆகப் உயர்ந்துள்ளது. இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக பாதிப்புள்ள மாவட்டங்கள்: கம்பஹா மாவட்டம்: 16,478 நோயாளர்கள் கொழும்பு மாவட்டம்: 15,540 நோயாளர்கள் மாதாந்த அதிகரிப்பு: ஜனவரி மாதத்திற்குப் பிறகு ஜூலை மாதத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஜூலை மாதம் (இதுவரை): 22,749 பேர் ஜூன் மாதம்: 21,535 பேர் அதி தீவிரமாக டெங்கு…
-
கண்டியில் ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் கற்பாறையிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழப்பு.
கண்டி – பன்வில, நக்ள்ஸ் ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள், கற்பாறையிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். 13 மற்றும் 14 வயதான இரண்டு மாணவர்களே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த 02 மாணவர்களும், கற்பாறையிலிருந்து நிழற்படம் எடுக்க முயற்சித்த போதே, கீழே வீழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே ஒரு மாணவன் உயிரிழந்ததுடன், மற்ற மாணவன் கண்டி மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியில் உயிரிழந்துள்ளார். அதற்கமைய, உயிரிழந்த மாணவர்களின் உடலங்கள், மடுல்கலை மற்றும் கட்டுகஸ்தோட்ட மருத்துவமனைகளில்…
-
இலங்கையின் ஏற்றுமதியில் சாதனை
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 9.012 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. அவற்றில், பொருட்கள் ஏற்றுமதியின் மூலம் 7.073 பில்லியன் அமெரிக்க டொலரும், சேவை ஏற்றுமதியின் மூலம் 1.938 பில்லியன் அமெரிக்க டொலரும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெறுபேறுகள், 2026ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் ஏற்றுமதி துறையின் செயல்திறனை பிரதிபலிப்பதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை குறிப்பிட்டுள்ளது.
-
மடவளையில் 500 பவுண் தங்கத்துடன் 10 பேர் கைது
கண்டி, வத்தேகம, மடவளை பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சுமார் 500 பவுண் தங்கம் மற்றும் 1.7 கோடி ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சோதனையின் போது இரண்டு பெண்களும் 8 ஆண்களுமாக 10 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
-
எயார்பஸ் கொடுக்கல் – வாங்கல் விசாரணைக்காக CID அதிகாரிகள் அவுஸ்திரேலியாவிற்கு பயணம்
ஸ்ரீலங்கன் எயார்பஸ் விமானக் கொள்வனவு ஊழல் விசாரணைக்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டுப் பொலிஸ் குழுவினர், அவுஸ்திரேலியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சப் பணம் பரிமாற்றப்பட்டதாகக் கூறப்படும் வங்கிச் கணக்குகள் மற்றும் சந்தேகநபர்களைக் கண்டறிவதே இந்த வெளிநாட்டுப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் டபிள்யூ. டி. நிமல் பெரேரா என்பவருக்குச் சொந்தமான வங்கிச் கணக்கில் இந்த இலஞ்சப் பணம் பரிமாறப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவரது…
-
சிறையில் உயிரைமாய்க்க முயன்ற கைதியால் பரபரப்பு
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றக் கைதிகள் கூட்டிற்குள் வைத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர், பிளேடால் தனது கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கடந்த வருடம் கைது செய்யப்பட்ட இவர், நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் வழக்குகளுக்கு ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்தார். இதனையடுத்து நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்குப் அமைய, கடந்த 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்துப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு…
-
வல்வெட்டித்துறையில் குட்டிமணி, தங்கதுரை சிலை திறப்பிற்கு தற்காலிக தடை
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் குட்டிமணி மற்றும் தங்கதுரையின் உருவச்சிலைகள் திறக்கப்படவிருந்த நிகழ்வுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. 1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (Telo) முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் 43ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி வல்வெட்டித்துறை சந்திக்கு அருகில் இந்தச் சிலைகளைத் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிலை திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து…
-
மர்ம மரணங்கள் சர்வதேச விசாரணை அவசியம்: பிரேம்நாத் சி.தொலவத்த
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மர்ம மரணங்கள் குறித்து முறையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக பதிவாகி வரும் சந்தேகத்திற்குரிய மற்றும் மர்மமான மரணங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளுக்கு அப்பால், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சர்வதேச அளவிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய புதிய அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் இவ்வாறான மர்ம மரணங்கள் தொடர்வதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இது குறித்து…
-
செம்மணி புதைகுழி – எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 450 ஆக உயர்வு
செம்மணி மனித புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 450ஆக உயர்வடைந்துள்ளது. 92 நாட்களாக இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் ஊடாக 454 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்ட கால்களை குறுக்காக மடக்கிய நிலையில் காணப்பட்ட மனித எலும்புக்கூடு இன்னும் முழுமையாக மீட்கப்படவில்லையென அவர் சுட்டிக்காட்டினார்.
-
பயங்கரவாதத் தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும் – நீதி அமைச்சர்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விரைவில் நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சற்றுமுன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பல தசாப்த கால பழமையான சட்டத்தை ஒழிப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கையாக, புதிய சட்டமூலம் ஏற்கனவே அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ‘புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒழிக்கப்படும்’ என அமைச்சர் உறுதிப்படுத்தினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் இன்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் சம்பந்தப்பட்ட…