Category: முக்கிய செய்தி
-
சிறார்கள்,பிரான்சில் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை
றார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் முதல் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறவுள்ளது. சிறுவர்களை இணையவழி ஆபத்துகள் மற்றும் மனநலப் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பதற்காக பிரான்ஸ் நாடாளுமன்றம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த இந்தச் சட்டம் தடை விதிக்கிறது. இந்தத் தடை இரண்டு கட்டங்களாக நடைமுறைக்கு வருகிறது :வரவிருக்கும் செப்டம்பர் மாதம் முதல், 15 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் புதிய சமூக ஊடகக்…
-
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,100 ஐக் கடந்தது!
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், நேற்று (21) வரை பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 78,125 ஆகப் உயர்ந்துள்ளது. இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக பாதிப்புள்ள மாவட்டங்கள்: கம்பஹா மாவட்டம்: 16,478 நோயாளர்கள் கொழும்பு மாவட்டம்: 15,540 நோயாளர்கள் மாதாந்த அதிகரிப்பு: ஜனவரி மாதத்திற்குப் பிறகு ஜூலை மாதத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஜூலை மாதம் (இதுவரை): 22,749 பேர் ஜூன் மாதம்: 21,535 பேர் அதி தீவிரமாக டெங்கு…
-
கண்டியில் ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் கற்பாறையிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழப்பு.
கண்டி – பன்வில, நக்ள்ஸ் ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள், கற்பாறையிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். 13 மற்றும் 14 வயதான இரண்டு மாணவர்களே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த 02 மாணவர்களும், கற்பாறையிலிருந்து நிழற்படம் எடுக்க முயற்சித்த போதே, கீழே வீழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே ஒரு மாணவன் உயிரிழந்ததுடன், மற்ற மாணவன் கண்டி மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியில் உயிரிழந்துள்ளார். அதற்கமைய, உயிரிழந்த மாணவர்களின் உடலங்கள், மடுல்கலை மற்றும் கட்டுகஸ்தோட்ட மருத்துவமனைகளில்…
-
இலங்கையின் ஏற்றுமதியில் சாதனை
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 9.012 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. அவற்றில், பொருட்கள் ஏற்றுமதியின் மூலம் 7.073 பில்லியன் அமெரிக்க டொலரும், சேவை ஏற்றுமதியின் மூலம் 1.938 பில்லியன் அமெரிக்க டொலரும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெறுபேறுகள், 2026ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் ஏற்றுமதி துறையின் செயல்திறனை பிரதிபலிப்பதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை குறிப்பிட்டுள்ளது.
-
மடவளையில் 500 பவுண் தங்கத்துடன் 10 பேர் கைது
கண்டி, வத்தேகம, மடவளை பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சுமார் 500 பவுண் தங்கம் மற்றும் 1.7 கோடி ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சோதனையின் போது இரண்டு பெண்களும் 8 ஆண்களுமாக 10 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
-
போராட்டத்தின்போது பர்கர் சாப்பிட்ட பேச்சாளர் நீக்கம் – கரப்பான் பூச்சி கட்சி அதிரடி!
டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற போராட்டத்தின் போது, அதில் பங்கேற்காமல் உணவகத்தில் பர்கர் சாப்பிட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பேச்சாளர் அந்தப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். சி.ஜே.பி சார்பில் டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மற்றும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையைப் பிரயோகித்த நேரத்தில், கட்சியின் பேச்சாளர் அருகிலுள்ள உணவகத்தில் பர்கர் சாப்பிட்டபடி, விமர்சிப்பவர்களைக் கேலி செய்யும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இதுகுறித்து…
-
ஈரானின் உட்கட்டமைப்புகள் தாக்கி அழிக்கப்படும் – ட்ரம்ப்
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் பதில் வழங்கும் நோக்கில், ஈரானின் ஒரு பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்கா தாக்கி அழிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானியத் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை இலக்கு வைக்கவுள்ளதாக அவர் மீண்டும் எச்சரித்துள்ளார். இரு தரப்பிலும் பரஸ்பரத் தாக்குதல்கள் தீவிரமடைந்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இடைக்கால ஒப்பந்தம் சீர்குலைந்துள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இனிமேல்,…
-
ஆட்கடத்தல் வலையுடன் தொடர்புடைய 7 இலங்கையர்கள் கைது.
சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை மலேசியக் குடிவரவுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாங்கூர், ஜெஞ்சாரோம் பகுதியில் உள்ள மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, குறித்த சந்தேகநபர் கைதாகியுள்ளார். தனது முதலாளியால் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதாகக் கருதப்படும் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடு மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அத்திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புலனாய்வுத் தகவல்கள், ஆட்கடத்தல் நடவடிக்கைகளில்…
-
கனடாவில் காணாமல் போன சிறுவர்கள்: தேடுதல் பணி தீவிரம்
கனடாவின் மணிடோபா மாகாணத்தில் உள்ள நூடிமிக் ஏரியில் நீரில் மூழ்கி மாயமான இரு சிறுவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாயமான சிறுவர்கள் இருவரும் வின்னிபெக்கைச் சேர்ந்த சகோதரர்களான ஆரோன் அவ் ராமிரெஸ் (13 வயது) மற்றும் மெக்சிமோ அவ் ராமிரெஸ் (10 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். Whiteshell Provincial Park-இல் உள்ள ஸ்டர்ஜன் பால்ஸ் பகுதியில் உள்ள பாறைகளில் இந்த சகோதரர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.அப்போது 10 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக வழுக்கி தண்ணீரில் விழுந்துள்ளார்.…
-
கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக கடத்தல்
கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக மனிதர்களைக் கடத்திய சர்வதேசக் கும்பலைச் சேர்ந்த மூன்று மெக்சிக்கோ பிரஜைகள், அமெரிக்க நீதிமன்றத்தில் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட தகவல்களின்படி, இந்த மூன்று நபர்களும் கனடா எல்லை வழியாக நூற்றுக்கணக்கான இடம்பெயர்ந்தவர்களை அமெரிக்காவிற்குள் கடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மெக்சிக்கோ, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்களை முதலில் கனடாவிற்கு வரவழைத்து, பின்னர் அங்கிருந்து நியூயார்க் எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் கடத்தியுள்ளனர். சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க,…