Category: இலங்கை செய்திகள்
-
ஹோமாகம தீ விபத்து – ஐவர் உயிரிழப்பு
ஹோமாகம – கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தீப்பரவலை கட்டுப்படுத்த கோட்டை மற்றும் தெஹிவளை மாநகர சபைகளிலிருந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தன. தீயணைப்பு நடவடிக்கைகளின் பின்னர், குறித்த தொழிற்சாலையிலிருந்து ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்படும் போது 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொழிற்சாலையின் உள்ளே…
-
நாமல் ராஜபக்ஷ மலேசியா மற்றும் சிங்கப்பூரிற்கு பயணம்
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹின் மகளின் திருமண விழா, ஜூலை 2026 இல் மாலைதீவில் உள்ள ஒரு ஆடம்பரமான உல்லாச விடுதியில் நடைபெற்றது. இத்திருமண நிகழ்வில் பல்வேறு சர்வதேச முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, இலங்கையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி லிமினி ராஜபக்ச ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மாலைதீவில் உள்ள ஒரு புகழ்பெற்ற சொகுசு தீவு உல்லாச விடுதியில்…
-
இலங்கையின் புதிய கடற்படைத் தளபதி – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு
இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றமைக்காக, கடற்படைத் தளபதிக்கு ஜனாதிபதியின் செயலாளர் தனது வாழ்த்துகளை இதன்போது தெரிவித்துள்ளார். இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதியினால் ஜனாதிபதியின் செயலாளருக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டுள்ளது.
-
ஐ.ம.சக்திக்கும் ஐ.தே.கட்சிக்கும் சரியான தலைமைத்துவம் தேவை
புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் தலைமைத்துவம் தேவை எனத் தெரிவித்தார். கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவி கருணாநாயக்க இதனைக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றாலும், அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விவசாயிகளையும், நுகர்வோரையும் திருப்திப்படுத்தும் விதம் குறித்து அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தில் சிந்திக்க வேண்டும் என கருணாநாயக்க குறிப்பிட்டார். நாடு ஒரு தீர்க்கமான கட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகக்…
-
மூலிகை விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்ப்பு
திருகோணமலை, கந்தளாய் பகுதியில் ஒருவகை நச்சு விதையை உட்கொண்டமையால் சுகவீனமடைந்த பாடசாலை மாணவர்கள் 22 பேர் வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தரம் 06 இல் கல்வி பயிலும் 22 மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆமணக்கு விதையை குறித்த மாணவர்கள் உட்கொண்டிருக்கலாம் எனவும் ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் குறித்த 22 மாணவர்களையும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான…
-
சி.டி.விக்ரமரத்னவின் மறைவு பெரும் இழப்பு – ஜீவன் எம்.பி.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு இன்று (20) நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் தனது இரங்கல் செய்தியில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார். அவர் பதவியில் இருந்த காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும், அமைதியான, பணிவான, கடமையுணர்வுமிக்க அதிகாரியாக அவர் நாட்டிற்கு கண்ணியத்துடனும் அர்ப்பணிப்புடனும்…
-
இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று (20) சற்று அதிகரித்துக் காணப்படுகின்றது. அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 331.67 ரூபாயில் இருந்து 331.50 ரூபாயாகக் குறைந்துள்ளதுடன், அதன் விற்பனை விலையும் 341.08 ரூபாயில் இருந்து 340.90 ரூபாயாகக் குறைந்து ரூபாயின் மதிப்பு சற்று வலுவடைந்துள்ளது. அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க்…
-
கொழும்பு – பம்பலபிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!
கொழும்பு – பம்பலபிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அளுத்கமவிலிருந்து மருதானை நோக்கி நேற்று (19) மாலை பயணித்த தொடருந்து மோதியதிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பிலியந்தலவைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவரின் உடலம் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பம்பலபிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
-
இலங்கை அதிகாரிகளுக்கு இந்தியப் பாராளுமன்றத்தில் ஆளுமை விருத்தி பயிற்சி
இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் கோரிக்கைக்கு அமைய இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இலங்கைப் பாராளுமன்ற அதிகாரிகளுக்காக கடந்த 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆளுமை விருத்தி நிகழ்ச்சித்திட்டம் புதுடில்லியில் உள்ள இந்தியப் பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. இலங்கைத் தூதுக் குழுவிற்கு பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தலைமைதாங்கினார். இந்திய பாராளுமன்றத்தின் நிறுவனக் கட்டமைப்பு, அதன் நிர்வாகச் செயன்முறைகள் மற்றும் பாராளுமன்ற…
-
இலங்கையில் இதுவரை 20 நீர்வெறுப்பு நோய் மரணங்கள் பதிவு
இலங்கையில் இதுவரை 20 நீர்வெறுப்பு நோய் மரணங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 4 மரணங்கள் புத்தளம் மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர், பேராசிரியர் சந்தன அபயரத்ன குறிப்பிட்டார். ஒரு சமூகமாக நமது சமூகப் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றியிருந்தால், டெங்கு மரணங்களைப் போன்று நீர்வெறுப்பு நோய் மரணங்களையும் தடுத்திருக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். நேற்று (18) கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கையில் பிரதானமாக நாய்கள்…