Category: இலங்கை செய்திகள்
-
கொழும்பு – பம்பலபிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!
கொழும்பு – பம்பலபிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அளுத்கமவிலிருந்து மருதானை நோக்கி நேற்று (19) மாலை பயணித்த தொடருந்து மோதியதிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பிலியந்தலவைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவரின் உடலம் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பம்பலபிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
-
இலங்கை அதிகாரிகளுக்கு இந்தியப் பாராளுமன்றத்தில் ஆளுமை விருத்தி பயிற்சி
இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் கோரிக்கைக்கு அமைய இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இலங்கைப் பாராளுமன்ற அதிகாரிகளுக்காக கடந்த 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆளுமை விருத்தி நிகழ்ச்சித்திட்டம் புதுடில்லியில் உள்ள இந்தியப் பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. இலங்கைத் தூதுக் குழுவிற்கு பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தலைமைதாங்கினார். இந்திய பாராளுமன்றத்தின் நிறுவனக் கட்டமைப்பு, அதன் நிர்வாகச் செயன்முறைகள் மற்றும் பாராளுமன்ற…
-
இலங்கையில் இதுவரை 20 நீர்வெறுப்பு நோய் மரணங்கள் பதிவு
இலங்கையில் இதுவரை 20 நீர்வெறுப்பு நோய் மரணங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 4 மரணங்கள் புத்தளம் மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர், பேராசிரியர் சந்தன அபயரத்ன குறிப்பிட்டார். ஒரு சமூகமாக நமது சமூகப் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றியிருந்தால், டெங்கு மரணங்களைப் போன்று நீர்வெறுப்பு நோய் மரணங்களையும் தடுத்திருக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். நேற்று (18) கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கையில் பிரதானமாக நாய்கள்…
-
இலங்கையில் நாளை முதல் முட்டை விலை உயர்வு!
நாளை (20) முதல் முட்டையின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குருநாகல், குளியாப்பிட்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, குறித்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டார். இதன்படி, வெள்ளை முட்டை 41 ரூபாயாகவும், சிவப்பு முட்டை 42 ரூபாயாகவும் நடைமுறைக்கு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
-
ரயிலில் செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து!
ரயில் பயணத்தின் போது செல்பி படம் எடுக்க முற்பட்ட துருக்கி நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். இன்று (19) முற்பகல் நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிய ரயில் பயணித்தின் போது குறித்த யுவதி அம்பேவலை பகுதியில் வைத்து செல்பி எடுக்க முற்பட்ட போதே சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த யுவதி சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
-
தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு!
இலங்கை: தெஹிவளை – கல்கிசை பொதுமயானப் பகுதியில் துப்பாக்கி பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், பொது மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
-
பிலியந்தலயில் துப்பாக்கிச்சூடு!
பிலியந்தல, போகுந்தர பகுதியில் இன்று (19 ஜூலை 2026) காலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ளார். பொரலெஸ்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய கும்பலைச் சேர்ந்தவர்கள் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொரலெஸ்கமுவ, ஓ.பி. பெரேரா மாவத்தையில் உள்ள வீடொன்றுக்குள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் புகுந்த நால்வர், அங்கிருந்தவர்கள் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திவிட்டு பிலியந்தலை நோக்கி தப்பியுள்ளனர். சந்தேகநபர்கள் தப்பி ஓடுவது குறித்த தகவல் கிடைத்ததும்,…
-
போதைப்பொருள் வலையமைப்பின் மீது காவல்துறையினரின் அதிரடி தாக்குதல்
பிலியந்தலை – போகுந்தர, வீரசிங்க மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் முற்றுகை நடவடிக்கையின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்தின் போது மற்றொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
-
செம்மணி விவகாரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் விசாரணைகள்!
யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்று வரும் என்புக்கூட்டுப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு எதிர்வரும் புதன்கிழமை (22) சம்பவ இடத்தைப் பார்வையிடவுள்ளது. செம்மணியில் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழ்வில் இதுவரை 423 மனித என்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு ஒன்று, யாழ்ப்பாணம் செம்மணியின் மிகப்பெரிய என்புக்கூட்டுப் புதைகுழியை எதிர்வரும் புதன்கிழமை அன்று பார்வையிடவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத் தூதர் கார்மென் மொரேனோ தலைமையிலான இத்தூதுக்குழுவில், இத்தாலியத் தூதர் டாமியானோ…
-
டெங்கு பாதிப்பு: பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தல்
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பெண்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தற்போது பதிவாகும் டெங்கு மரணங்களில் சுமார் 70 சதவீதமானோர் பெண்கள் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கரா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளிகளில் 88 சதவீதமானோர், டெங்கு வைரஸின் இரண்டாம் வகையால் பாதிக்கப்பட்டிருந்தனர் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.