Category: இலங்கை செய்திகள்
-
கடற்பரப்புகள் கொந்தளிப்பு – விசேட எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்!
இலங்கையில்,ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையும், கல்பிட்டி முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும் உள்ள கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. அறிவிப்பின்படி, குறித்த கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இதனால் அந்தக் கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பான நிலையில் காணப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த…
-
யாழ்ப்பாணம் செம்மணியில் தொடரும் அகழ்வு
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36 ஆவது நாளான இன்று, மேலும் 6 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன. இதில் சிறார் ஒருவரின் என்புக்கூடும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் 56 நாட்கள் அகழ்வுப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 36 நாட்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்றைய தின நிலவரப்படி, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 5 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், மூன்று மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்…
-
ரூ. 4 கோடி கொக்கெய்னை விழுங்கி வந்த வெளிநாட்டுப் பெண் கைது!
ரூபாய் 4 கோடி பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கி, சக்கர நாற்காலியின் உதவியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 54 வயதுடைய அங்கோலா நாட்டு பெண் ஆசிரியை ஒருவர் நேற்று (17) சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தான் ஒரு எச்.ஐ.வி (HIV) தொற்றாளர் என சுங்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ள இந்தச் சந்தேக நபர், அங்கோலாவில் இருந்து எத்தியோப்பியா மற்றும் கட்டார் ஊடாக இலங்கை வந்துள்ளார். சுமார் 50 கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கியிருந்த…
-
டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!
வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈரட்டபெரியகுளம் வீதியில் நேற்று (17) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஈரட்டபெரியகுளம் வீதியின் 16ஆம் கட்டை பகுதிக்கு அருகில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. பணி நிமித்தமான கடமைகளை முடித்துக்கொண்டு வவுனியா ஈரட்டபெரியகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட், டிப்பர் வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்…
-
எஜமானை காப்பாற்றி உயிரை விட்ட வளர்ப்பு நாய்
தமிழகத்தில் எஜமானின் குடும்பத்தினரை காப்பாற்ற உயிரை விட்ட நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியின் தக்கலை அருகே பிரம்மபுரம் பகுதியில் வசித்து வருபவர் விகேஷ்(வயது 35), திருவனந்தபுரத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி, 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுடன் காயத்ரியின் தாயாரும் உடன் இருக்கிறார். இவர்கள் சிஞ்சான் என்ற 2 வயது நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை காயத்ரியின் தாயார் இரவு உணவு சமைப்பதற்காக பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தார், அப்போது அந்த…
-
இலங்கையில் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் மோசடி
கனடா – லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் சுமார் 8 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொலன்னாவ, வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த பாயிஸ் மொஹமட் நப்டிகா என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டி பகுதியில் மறைந்திருந்த நிலையில்…
-
7ஆவது நாளாகவும் ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!
தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ‘முடிவுக்கு வந்துவிட்டது’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக ஏழாவது நாளாக தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் படைகள் ஈரானின் ‘கண்காணிப்பு தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் திறன்களை’ தாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இத்தாக்குதல்களுக்குப் பதிலடியாக, குவைத் உள்ளிட்ட பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை…
-
ஒன்லைன் விளையாட்டுக்காக கடையை உடைத்து திருடிய சிறுவர்கள்
ஆன்லைன் விளையாட்டுக்காக கடையை உடைத்து, 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மொபைல் போன்களைத் திருடிய 14 வயதுடைய இரண்டு மாணவர்கள் இலங்கையின் தம்புத்தேகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 4ஆம் திகதி குறித்த இரு மாணவர்களும், எப்பாவல நகரில் பேருந்து நிலையம் அருகே உள்ள கைபேசிக் கடையை அதிகாலை நேரத்தில் உடைத்து தொலைபேசிகளை திருடிச் சென்றுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், தலவ நபாதவெவ மற்றும் எப்பாவல ரொட்டவெவ பகுதிகளில் வசிக்கும் 14…
-
இலங்கையின் முன்னாள் காவல்துறை மா அதிபரின் மரணம் குறித்த விசாரணைகள் தீவிரம்
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, சம்பவம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கியை, மேலதிக விசாரணைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக, மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் சமந்த விஜேசேகர தெரிவித்தார். நீதிமன்றத்துக்கு விடயங்களை அறிக்கைப்படுத்தியதன் பின்னர், குறித்த துப்பாக்கியை எதிர்வரும் திங்கட்கிழமை பகுப்பாய்வாளரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சி.டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகளை எதிர்வரும்…
-
ஜனாதிபதி மீது தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்: செல்வம் அடைக்கலநாதன்
தமிழ் இனத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் ஆதரவு இருப்பதாக டெலோ (Telo) அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், தமிழ் இனத்தை ஒழிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயற்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவதற்கான ஒரு சாதகமான சூழல் உருவாகி…