Category: உலக செய்திகள்

  • பிரித்தானியாவின் 59ஆவது பிரதமரானார் எண்டி பர்ன்ஹாம்!

    தொழிற்கட்சித் தலைவராக இருந்த சர் கீர் ஸ்டார்மர்  தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்ள்ஸை  சந்தித்த ஆண்டி பர்ன்ஹாம், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான மன்னரின் அழைப்பை ஏற்று நாட்டின் புதிய பிரதமரானார். எண்டி பர்ன்ஹாம் பிரதமராக நியமிக்கப்பட்டதை உறுதிபடுத்தி பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், ‘மன்னர், கௌரவத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் எண்டி பர்ன்ஹாமைச் சந்தித்து, புதிய நிர்வாகத்தை அமைக்குமாறு கோரினார். மன்னரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட எண்டி பர்ன்ஹாம், பிரதமர்…

  • அப்பிள், கூகுள் எடுத்த அதிரடி முடிவு!

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகராட்சி, நிழற்படங்களை டிஜிட்டல் முறையில் மாற்றி நபர்களை நிர்வாணமாகக் காட்டும் திறன் கொண்ட ‘Nudify’ செயலிகளை தங்களது செயலி அங்காடிகளில் (App Store) இருந்து நீக்குமாறு அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. காலிஃபோர்னியா மாநில சட்டத்தின்படி, ஒருவரின் அனுமதியின்றி Deepfake ஆபாச படங்கள் உருவாக்கப்படுவதையோ அல்லது அதனை ஊக்குவிப்பதையோ குற்றமாகக் கருதுகிறது. மேலும், 2025 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் மூன்றாம் தரப்பினருக்கு எதிராக வழக்குத் தொடரும்…

  • வெள்ளை மாளிகை இரகசியத் தகவல்களை அம்பலப்படுத்திய பபிள்மேப்ஸ் நிறுவனம்

    அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில், வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இரகசியத் தகவல் கசிந்துள்ளதாக ‘பபிள்மேப்ஸ்’ நிறுவனம் தொரிவித்துள்ளது. இதைப்பயன்படுத்தி போலி மார்க்கெட்’ போன்ற ஒன்லைன் சூதாட்டத் தளங்களில் 3 அநாமதேயக் கணக்குகள் சரியாகப் பந்தயம் கட்டி, $6,00,000-க்கும் அதிகமாக  இலாபம் ஈட்டியுள்ளதை ‘பபிள்மேப்ஸ்’ நிறுவனம் கண்டறிந்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் டெலிப்ரொம்ப்டர் ஒபரேட்டரான கேப்ரியல் பெரெஸ், ஜனாதிபதியின் உரைகளை முன்கூட்டியே அணுகி தகவல்களைக் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.…

  • கெய்ர் ஸ்டாமர் பதவி விலகினார் – கடிதத்தை மன்னர் சார்ள்ஸ் ஏற்றுக்கொண்டார்!

    பிரித்தானிய பிரதமர் பதவியிலிருந்து கெய்ர் ஸ்டார்மர் உத்தியோகபூர்வமாக விலகியுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் வைத்து உத்தியோகபூர்வமாக தமது பதவி விலகல் கடிதத்தை மன்னரிடம் கையளித்து, பிரதமர் பதவியிலிருந்து கெய்ர் ஸ்டார்மர் விலகியுள்ளார். இந்த நிலையில், அவரும் மன்னர் சார்லஸும் கைகுலுக்கும் படங்களும் வெளியாகியுள்ளன. இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடாளுமன்ற உறுப்பினர் கெய்ர் ஸ்டார்மர் இன்று காலை மன்னர் சார்லஸைச் சந்தித்து, பிரதமர் மற்றும் திறைசேரியின் முதல் பிரபு(First Lord of the Treasury) பதவிகளிலிருந்து…

  • கயானாவில் கப்பல் விபத்து – 66 பேரை காணவில்லை

    தென் அமெரிக்க நாடான கயானாவின் தலைநகர் ஜார்ஜ் டவுனில் இருந்து பரிமா வைனி நகருக்குச் நேற்று முன் தினம் சென்ற சிறிய ரக கப்பல் ஒன்று நடுக்கடலில் திடீரென மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடந்த சமயத்தில் கப்பலில் பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 133 பேர் பயணித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பல் கடலில் மூழ்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் முதற்கட்டமாக பெண்கள், குழந்தைகள் உட்பட…

  • கொங்கோவில் வேகமாகப் பரவும் எபோலா வைரஸினால் உயிரிழப்பு எண்ணிக்கை 930 ஆக உயர்வு

    கொங்கோ ஜனநாயகக் குடியரசில்  தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 930 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு கொங்கோவில் மே மாதம் அறிவிக்கப்பட்ட இந்த தீவிர பரவலின் காரணமாக மொத்தமாக 2,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 37 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. எபோலா பரவல் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் பதிவான மிக அதிகபட்ச இறப்பு எண்ணிக்கை இதுவாகும். கடந்த மே 15 ஆம்…

  • ஈரானியப் புரட்சிகர காவல்துறை இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்

    அமெரிக்கா, ஈரானியப் புரட்சிகர காவல்படையின் (IRGC) இலக்குகள் மீது வான்வழியாக உக்கிரமான பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மற்றும் வட ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தீவிர வான்வழித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஈரான் நடத்திய பிந்திய தாக்குதல் ஒன்றில் வட ஈராக்கில் பணியாற்றும் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம்…

  • உலகக் கோப்பை கால்பந்து: அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை வென்றது ஸ்பெயின்

    2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில், அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில்  நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் ஸ்பெயின் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் ஸ்பெயின் அணி தனது கால்பந்து வரலாற்றில் 2-ஆவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது (முன்னதாக 2010-ல் வென்றிருந்தது).ஆட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும்…

  • டார்கோவின் அணுமின் நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்

    ஈரானின் அஹ்வாஸ் (Ahvaz) நகருக்கு அருகில் கட்டப்பட்டு வரும் டார்கோவ் (Darkhovin / Darquain) அணுமின் நிலையத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அமெரிக்கப் படைகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் நாட்டின் அணுசக்தி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலால் அணுமின் நிலையத்தின் முக்கிய உள்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணுஉலைக்கோ அல்லது கட்டுமானப் பகுதிகளுக்கோ பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றும், கதிர்வீச்சு கசிவு போன்ற ஆபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் முதற்கட்ட…

  • ‘நெருப்பு, மின்சாரத்தை விட AI முக்கியமானது’ : சுந்தர் பிச்சை

    நெருப்பு மற்றும் மின்சாரத்தை விடவும், மனிதகுலம் இதுவரை உருவாக்கிய கண்டுபிடிப்புகளில் மிகவும் முக்கியமானது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமே என கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் நெருப்பும், மின்சாரமும் ஏற்படுத்திய மாற்றங்களை விட, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எதிர்காலத்தில் இன்னும் ஆழமான தாக்கத்தை உலகளவில் ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவின் திறன் மற்றும் அதன் எதிர்கால முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையிலேயே சுந்தர் பிச்சையின்…