Category: உலக செய்திகள்

  • ஈரான் போர்| அமெரிக்க பலி எண்ணிக்கை.. வெளியான புதிய தகவலால் பரபரப்பு!

    அமெரிக்கா–ஈரான் போரில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை தொடர்பாக The Washington Post வெளியிட்ட செய்தி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பென்டகன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள எண்ணிக்கையை விட அதிகமான அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த செய்தி கூறிய நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்சத் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். Washington Post வெளியிட்ட தகவலின்படி, ஈரான் போரின் தொடக்கம் முதல் குறைந்தது 22 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

  • 6 லட்சம் பேர்.. கையில் AK-47.. வீதியில் இறங்கிய பெண்கள்! ஈரானில் திடீர் பரபரப்பு!

    அமெரிக்கா–இஸ்ரேல் உடனான போர்ச் சூழல் நீடித்து வரும் நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஆயுதம் ஏந்திய பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றுள்ளது. ‘Janfada-ye Iran’ ‘ஈரானுக்காக தியாகம் செய்பவர்கள் என்ற பெயரில் நடைபெற்ற இந்த அரசாங்க ஆதரவு பேரணி, போர் தொடங்கிய பின்னர் நடைபெற்ற மிகப்பெரிய பேரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த பேரணியில் ராணுவ உடை அணிந்தவர்கள் ஈரான் கொடிகளை ஏந்தியபடி ஈரான் நகரின் முக்கிய சாலைகளில் அணிவகுத்துச் சென்றனர்.…

  • வேல்ஸ் இளவரசி Diana மரணம்.. Charles சொன்ன அதிர்ச்சி வார்த்தை.. 29 ஆண்டுக்குப் பின் சர்ச்சை!

    இளவரசி டயானா… இந்தப் பெயரை உலக நாடுகள் அவ்வளவு எளிதில் மறந்திருக்காது. தனது கருணை பொங்கிய செயல்களாலும், மக்களோடு மக்களாக கலந்து பழகிய பண்பாலும், விழிப்புணர்வு செயல்களுக்காகவும் மட்டுமின்றி, தனது அன்பான அணுகுமுறையால், உலக மக்களின் மனதை வென்றவர் இளவரசி டயானா. பிரிட்டன் இளவரசராக இருந்த சார்லஸை தனது 20-ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டு பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் நுழைந்த டயானா, பின்னர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று அரச குடும்பத்தைவிட்டு வெளியேறினார்.…

  • “எந்த எல்லைக்கும் செல்வோம்..” களத்தில் இறங்கும் பாகிஸ்தான்? தாக்குதலால் பரபரக்கும் வளைகுடா!

    சவூதி அரேபியா என்றாலே இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களான மக்கா, மதீனா, எண்ணெய் வளம், வளைகுடா நாடுகள் எனப் பல விஷயங்கள் நினைவுக்கு வரும். ஆனால், தற்போது சவூதி அரேபியாவைச் சுற்றி அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், “சவூதி அரேபியாவுக்காக… எந்த எல்லைக்கும் செல்வோம்!” என பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிவிப்பு, தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. சவூதி அரேபியாவுக்கும், யேமனில் செயல்பட்டு வரும் ஹவுதி அமைப்புக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து…

  • விஷச்சாராயம் அருந்தி 48 பேர் பரிதாப பலி

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, அரசு அங்கீகாரம் பெற்ற மதுபானங்களை வாங்க முடியாத ஏழை மற்றும் நடுத்தர மக்கள், சட்டவிரோதமாகக் காய்ச்சப்படும் மலிவு விலைச் சாராயங்களை அருந்துவது வழக்கமாக உள்ளது. இவ்வாறான சட்டவிரோதச் சாராயங்களின் வீரியத்தை அதிகரிப்பதற்காக அபாயகரமான வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால், அவை விஷச்சாராயமாக மாறி உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், நைஜீரியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒண்டோ (Ondo) மாநிலத்தில் ஏராளமான பொதுமக்கள் வழக்கம்போல இவ்வாறான சாராயத்தை அருந்தியுள்ளனர்.…

  • நீண்ட நாள் ஆசை சக்சஸ்: “Greenland-ன் ‘நிரந்தர’ கன்ட்ரோல் இனி அமெரிக்காவிற்கே!” – ட்ரம்ப் மகிழ்ச்சி

    அமெரிக்காவின் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், அதன் இருப்பிடத்தின் காரணத்திற்காகவும் எப்போதுமே அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு கிரீன்லாந்து மீது கண் உண்டு. கிரீன்லாந்தை வாங்கவெல்லாம் பிளான் செய்தார் ட்ரம்ப். ஆனால், அது வேலைக்கு ஆகவில்லை.ஆனால், தற்போது டென்மார்க்குடன் ஒப்பந்தம் போட்டு, கிரீன்லாந்தின் ‘நிரந்தர கட்டுப்பாட்டை’ பெற்றிருக்கிறார் ட்ரம்ப். இது குறித்து ட்ரம்பே தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறார்.ட்ரம்ப் தனது பதிவில், “அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதை அறிவிப்பதில்…

  • ‘நான் அதிபரான பின் வரலாற்றிலேயே முதன்முறையாக!’-தன்னை தானே பாராட்டிக்கொள்ளும் ட்ரம்ப்

    2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பொறுப்பை ஏற்றார் ட்ரம்ப். அப்போதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அமெரிக்காவை மட்டுமல்ல… உலக நாடுகளையே அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறார் அவர்.தற்போது தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில், 2025-26 ஆண்டிற்கான சாதனை என்று 25 விஷயங்களை அவரே பட்டியலிட்டிருக்கிறார். அந்தப் பட்டியல் இதோ… 1. வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பான அமெரிக்க எல்லையை உறுதிசெய்துள்ளோம். கடந்த 16 மாதங்களில் ஒரு சட்டவிரோதக் குடியேறி கூட அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படவில்லை.…

  • 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானில் இன்று ஆரம்பம்

    20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானின் ஐச்சி-நகோயா (Aichi-Nagoya) நகரங்களை மையமாகக் கொண்டு இன்று (19) ஆரம்பமாகியுள்ளது. இது அக்டோபர் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு விழாவான இதன் இம்முறை கருப்பொருள் ‘Imagine One Asia’ என பெயரிடப்பட்டுள்ளது. ஆசிய ஒலிம்பிக் பேரவைக்கு உட்பட்ட 45 நாடுகளும் பிராந்தியங்களும், முதன்முறையாக இணையும் ஆசிய அகதிகள் குழுவும் அடங்கலாக மொத்தம் 46 அணிகள் இம்முறை போட்டிகளில் பங்கேற்கின்றன. ஜப்பான் ஆசிய விளையாட்டு விழாவை நடத்தும்…

  • CNN உட்பட 3 முன்னணி ஊடகங்களுக்கு ட்ரம்ப் விதித்த தடை!

    உலகின் முன்னணி ஊடக நிறுவனங்களான CNN, MS NOW மற்றும் Politico ஆகியவற்றுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். தனது ஆட்சிக்காலம் குறித்து குறித்த ஊடக நிறுவனங்கள் பொய்களையும் புனைவுகளையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதாகக் குற்றம் சாட்டி, ஜனாதிபதி தனது ‘Truth Social’ கணக்கில் பதிவொன்றை இட்டு இத்தீர்மானத்தை அறிவித்துள்ளார். எனினும், அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான எவ்வித குறிப்பிட்ட ஆதாரங்களையும் அவர் முன்வைக்க…

  • ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% தீர்வை வரி

    உக்ரைன் மீதான போரைக் கருத்திற் கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசரச் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இந்தச் சட்டமானது ரஷ்யாவின் வலுசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளை இலக்கு வைப்பதுடன், ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் மூத்த அதிகாரிகளையும் குறிவைக்கிறது. மேற்கத்திய நாடுகளின் தடைகளில் இருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரஷ்யாவின் ‘நிழற்படைக் கப்பல்களை’ (shadow fleet) இலக்கு வைக்கும் இச்சட்டம்,…