Category: உலக செய்திகள்
-
ஜோர்தானில் அமெரிக்கப் பிரஜைகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை!
ஜோர்தானின் அக்கபா சர்வதேச வானூர்தி நிலையம் மற்றும் துறைமுகப் பகுதிகளில் ‘குறிப்பிட்ட மற்றும் நம்பகமான பாதுகாப்பு அச்சுறுத்தல்’ இருப்பதாகக் கூறி, தமது நாட்டுப் பிரஜைகளை, அந்த பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், குறிப்பிட்ட நம்பகமான பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அக்கபா வானூர்தி நிலையத்திலும் துறைமுகத்திலும் இருந்த மக்களை ஜோர்தான் அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், ஜோர்தானில் உள்ள இராணுவத் தளங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகளுக்கு ஏற்கனவே…
-
வரலாறு படைத்து விட்டோம்: மெஸ்ஸி
உலகக்கோப்பை இறுதி போட்டியில் என்ன நடந்தாலும் சரி, அர்ஜென்டினா அணி யாராலும் மறக்க முடியாத, அழிக்க முடியாத வரலாறு படைத்து விட்டது” என அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் இன்றிரவு இலங்கை நேரப்படி 12.30 மணிக்கு மோத உள்ளன. இந்த சூழலில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி தனது அணியில் குழு படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…
-
இலங்கைத் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் -சிட்னியில் த்ரிஷா.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகை த்ரிஷா தனக்கு இலங்கைத்தமிழ் மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். சிட்னியின் மார்ஸ்டன் பார்க் (Marsden Park) பகுதியில் அமைந்துள்ள ‘KST Spice Corner” என்ற கடையின் 15ஆம் ஆண்டு நிறைவு மற்றும் புதிய கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகை த்ரிஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஏராளமான இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்கள் கலந்து கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு…
-
சமூக ஊடக வலைத்தளங்கள் திடீர் முடக்கம்
உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான பேஸ்புக் (Facebook), மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் இன்று திடீர் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், பல பயனர்கள் தங்களது கணக்குகளை அணுக முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, மெட்டா (Meta) நிறுவனத்தின் பேஸ்புக் தளத்தின் டெஸ்க்டொப் (Desktop) பதிப்பே இந்தச் சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயனர்கள் உள்நுழைய முயன்றபோது, ‘தளச் சிக்கல் காரணமாக உங்கள் கணக்கு தற்போது கிடைக்கவில்லை. இது விரைவில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். தயவுசெய்து சில நிமிடங்களில் மீண்டும்…
-
ஈரானின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா
ஜோர்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததற்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இந்தத் தாக்குதலில் மேலும் ஒரு அமெரிக்க வீரர் காணாமல் போனதை அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) உறுதி செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில், இந்த தொடர் எதிர் தாக்குதல்கள் நேற்று இரவு (18) தொடங்கப்பட்டன. ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதையும், அமெரிக்கப்…
-
ஐபோன் விலையை உயர்த்தியது அப்பிள் நிறுவனம்
ஜப்பானில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களின் விலையை அப்பிள் நிறுவனம் சுமார் 11.3 சதவீதத்தால் உயர்த்தியுள்ளது. உலகளாவிய அளவில் நிலவி வரும் சிப் (Chip) பற்றாக்குறையே இந்த விலையேற்றத்திற்கான முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதன் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விலை உயர்வு, ஜப்பானைத் தொடர்ந்து விரைவில் பிற நாடுகளிலும் அமுல்படுத்தப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
-
3,000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணியுடன் ஹாலிவுட் நடிகை ஜெண்டயா
ஹாலிவுட் நடிகை ஜெண்டயா (The Odyssey) லண்டனில் நடைபெற்ற தனது ‘தி ஒடிஸி’ திரைப்பட விழாவில் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான ஈரானிய தங்கக் காதணிகளை அணிந்து பங்கேற்றது தற்போது உலகளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்காலப் பொருட்களை, பிரபலங்கள் தங்களின் ஆடை விபரங்களுக்காக பயன்படுத்துவது கலாச்சாரச் சுரண்டல் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தச் சம்பவம், கடந்த காலங்களில் கிம் கர்தாஷியன் புகழ்பெற்ற…
-
இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது ஈரான்!
அமெரிக்கா தனது கடப்பாடுகளை மீறியதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் தான் மேற்கொண்டிருந்த அனைத்து கடப்பாடுகளையும் இடைநிறுத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் வெளியுறவு பிரதி அமைச்சர் காசெம் கரிபாபாடி இதனை அறிவித்துள்ளதாக ஈரானின் பார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கட்டமைப்பின் கீழ் அமெரிக்கா தனது அனைத்து கடப்பாடுகளையும் மீறி அவற்றைச் செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளதாக காசெம் கரிபாபாடி குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதல் நடவடிக்கைகள் காரணமாகவே, இந்த ஒப்பந்தத்தின்…
-
வியட்நாமில் திடீர் வெள்ளப்பெருக்கு
வியட்நாமின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள லாய் சாவ் (Lai Chau) மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதோடு 4 பேர் காணாமல் போயுள்ளனர் என அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, முவோங் தான் (Muong Than) மலைக் கிராமத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். மழையுடனான வானிலைக்கு மத்தியில் காணாமல் போன 4 பேரைத்…
-
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக, குவைத்தின் உத்தியோகபூர்வ விமானச் சேவையான ‘குவைத் எயார்வேஸ்’ தங்களது பெரும்பாலான விமானப் பயணங்களின் நேரங்களை மாற்றியமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பயணிகள் தங்களது விமானப் பயணங்களின் புதிய நேரங்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அந்த விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.