Category: உலக செய்திகள்

  • பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்

    பிரிட்டனின் ஆளும் தொழிலாளர் கட்சியின் (Labour Party) புதிய தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பிரிட்டனின் அடுத்த பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்க உள்ளார். பிரிட்டனின் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் ஜூலை 17, வெள்ளிக்கிழமை அன்று முறைப்படி அறிவிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் வரவிருக்கும் திங்கட்கிழமை (ஜூலை 20) பிரிட்டனின் புதிய பிரதமராக முறைப்படி பதவியேற்கவுள்ளார்.…

  • 2026 FIFA இறுதிப்போட்டியில் பங்கேற்கிறார் அமரிக்க அதிபர்: வெள்ளை மாளிகை

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூஜெர்சியில் உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில்(MetLife Stadium)  நடைபெறும் 2026 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேரில் பங்கேற்கிறார். சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைவர் கியானி இன்ஃபான்டினோவுடன் இணைந்து, அவர் உலகக் கோப்பை கோப்பையை வெற்றிபெறும் அணியிடம் வழங்குவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட், அமெரிக்க வரலாற்றிலேயே மிக வெற்றிகரமான மற்றும் பாதுகாப்பான உலகக் கோப்பைத் தொடரின் நிறைவாக அதிபர் டிரம்ப்…

  • கனடா மீது புதிய வரிகளை விதிப்பதாக டிரம்ப் மிரட்டல்

    கனடாவில் (Canada) பரவும் காட்டு தீ காரணமாக அமெரிக்காவின் சில நகரங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். நச்சு புகை பரவலை தடுக்க தவறிய கனடா மீது கூடுதல் வரி விதிக்க போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவிட்டுள்ள டிரம்ப், கனடா தனது காடுகளையும் அவற்றில் உள்ள புதர்ச் செடிகளையும் முறையாகப் பராமரிக்காததால், அமெரிக்காவுக்குள் அசுத்தமான, மாசுபட்ட மற்றும் ஆரோக்கியத்திற்குத்…

  • 7ஆவது நாளாகவும் ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!

    தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ‘முடிவுக்கு வந்துவிட்டது’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக ஏழாவது நாளாக தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் படைகள் ஈரானின் ‘கண்காணிப்பு தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் திறன்களை’ தாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இத்தாக்குதல்களுக்குப் பதிலடியாக, குவைத் உள்ளிட்ட பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை…

  • புற்றுநோய்க்கு எதிராக தன்னையே ஆய்வகமாக மாற்றிய விஞ்ஞானி!

    புற்றுநோய்க்கு எதிராகத் தன்னையே ஒரு நடமாடும் ஆய்வகமாக மாற்றிக்கொண்டு, மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்லைப் பதித்த உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்கோல்யர் (Professor Richard Scolyer) ஆவார். உலகப் புகழ்பெற்ற புற்றுநோய் ஆராய்ச்சியாளரான பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்கோல்யர், தனது உயிருக்கு ஆபத்தான மூளைக் கட்டிக்கு (Glioblastoma) பரிசோதனை நோய் எதிர்ப்பு சிகிச்சையை (Experimental Immunotherapy) முதலில் தன் உடலிலேயே சோதித்த விஞ்ஞானியாக அறியப்பட்டவர். அவர் தனது 59-வது வயதில் காலமானார். 2023-ஆம் ஆண்டு, குணப்படுத்த…

  • நியூசிலாந்தில் உள்நாட்டுப் பறவைக்கு H5N1 பறவைக் காய்ச்சல்

    நியூசிலாந்தில் முதன்முறையாக அந்தநாட்டின் பூர்வீகப் பறவை இனத்தைச் சேர்ந்த ‘சுவாம்ப் ஹாரியர்’ (Swamp Harrier) வகை கழுகுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வட தீவின் வைராபா பிராந்தியத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கழுகுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, அந்தநாட்டின் உயிரியல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்ட்ரூ ஹொகார்ட் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் கடந்த புதன்கிழமை அன்று, வெலிங்டன் அருகே கண்டெடுக்கப்பட்ட ‘ப்ரவுன் ஸ்குவா’ (Brown Skua) எனும் கடல் பறவைக்கு முதன்முதலில் இந்த நோய் பாதிப்பு உறுதி…

  • ஜப்பானில் குழந்தைகள் பெறுவதில் ஆர்வம் காட்டாத மக்கள்

    ஜப்பானில் பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் இளம் தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. 2026-ஆம் ஆண்டின் புதிய புள்ளிவிவரங்களின்படி, ஜப்பானில் 30 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களுக்குக் குழந்தைகள் வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் அந்நாட்டில் பிறப்பு விகிதம் மிக வேகமாகச் சரிந்து, மக்கள் தொகை வீழ்ச்சி ஒரு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது. குறைந்த ஊதியம், அதிகமான வாடகை, குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவு போன்ற காரணங்களால் ஜப்பான் நாட்டு இளைஞர்களிடம் திருமணம் செய்யும்…

  • பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் கடும் எச்சரிக்கை

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ, காட்டின் 10 சதவிகித பரப்பை அழித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காட்டில் தீவைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதியான மேக்ரான் எச்சரித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ 35,000 ஹெக்டேர் சதவிகித காட்டை அழித்து விட்ட நிலையில், வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ தீயை வைத்த பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர்…

  • பிரிட்டன் வானை மூடும் சகாரா புழுதி; ஆய்வில் எச்சரிக்கை

    ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தில் இருந்து கிளம்பும் பிரம்மாண்ட புழுதிப் புயல் (Saharan Dust Plume) தீவிரமடைந்து, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய வான்பகுதியை மூடி வருவதாகப் புதிய அறிவியல் ஆய்வுகள் எச்சரித்துள்ளன. சுவீடனின் Lund University மற்றும் இங்கிலாந்தின் Manchester University இணைந்து நடத்திய புதிய ஆய்வின்மூலம் இத்தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பிரிட்டனின் வான்பகுதி முற்றிலும் மங்கலான ஆரஞ்சு நிறமாக மாறுவதுடன், அங்கு ‘இரத்த மழை’ (Blood Rain)  எனப்படும் செம்பழுப்பு நிற மழை பொழிவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக…

  • கடும் வெப்பம் காரணமாக ஐரோப்பாவில் சீன தயாரிப்பு குளிரூட்டிகளுக்கு கடும் தட்டுப்பாடு

    ஐரோப்பிய நாடுகளில் நிலவும் வழக்கத்திற்கு மாறான கடும் வெப்ப அலை காரணமாக, சீன தயாரிப்பு குளிரூட்டிகளுக்கு (Air Conditioners) சந்தையில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, சீனாவின் ‘மீடியா’ (Midea) நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ‘போர்ட்டா-ஸ்பிலிட்’ (PortaSplit) வகை குளிரூட்டிகளுக்கு ஐரோப்பிய நுகர்வோர் மத்தியில் மிக அதிக தேவை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவின் பல முக்கிய நகரங்களில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோடை வெப்பநிலை 40 பாகை செல்சியஸைத் தாண்டிப் பதிவாகியுள்ளது.ஐரோப்பிய நகரங்களில் உள்ள பல பாரம்பரிய, பழமையான மற்றும்…