Category: இந்திய செய்திகள்

  • நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு – இந்தியப் பிரதமர் மோடி

    நீட் (Neet) வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்காக சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்தை விட முக்கியமானது எதுவுமில்லை என வலியுறுத்திய அவர், மாணவர்களின் நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும், வினாத்தாள் கசிவு போன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த பிரதமர் மோடி, இளைஞர்களின்…

  • போராட்டத்தின்போது பர்கர் சாப்பிட்ட பேச்சாளர் நீக்கம் – கரப்பான் பூச்சி கட்சி அதிரடி!

    டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற போராட்டத்தின் போது, அதில் பங்கேற்காமல் உணவகத்தில் பர்கர் சாப்பிட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பேச்சாளர் அந்தப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். சி.ஜே.பி சார்பில் டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மற்றும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையைப் பிரயோகித்த நேரத்தில், கட்சியின் பேச்சாளர் அருகிலுள்ள உணவகத்தில் பர்கர் சாப்பிட்டபடி, விமர்சிப்பவர்களைக் கேலி செய்யும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இதுகுறித்து…

  • இந்திய ரெப் பாடகர் அறிவு கைது

    பிரபல தமிழ் ரெப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நீட் (Neet) தேர்வுக்கு எதிராக திடீர் போராட்டம் நடத்தியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடகர் அறிவு தனது ஆதரவாளர்கள் 4 பேருடன் சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழைந்து, ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என முழக்கமிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து கோஷமிட்டதால், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி,…

  • ராகுல் காந்தி கைது: டெல்லியில் பரபரப்பு

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் இன்று (ஜூலை 21, 2026) காவல் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் (Neet) வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்து, பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே இளைஞர்களுக்கு எதிராகச் செயல்படும் ஒரே பிரதமர் நரேந்திர மோடிதான் என்று ராகுல் காந்தி…

  • பிரதமர் இல்லம் முன் ராகுல் காந்தி அமைதிப் போராட்டம்

    நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியதைக் கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், இளைஞர்கள் மீதான தாக்குதலுக்குப் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராட்டக்காரர்கள்…

  • டெல்லியில் நாடாளுமன்றம் முற்றுகை – பிரதமர் மோடி அவசரமாக வெளியேற்றம்

    டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி ‘ காக்ரோச் ஜனதா கட்சி’  நடத்திய பிரம்மாண்ட போராட்டப் பேரணி காரணமாக, பிரதமர் நரேந்திர மோடியின் வாகன அணிவகுப்பு நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், நீட் (Neet) தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.  நாடாளுமன்றத்திற்கு மிக அருகில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு முழக்கங்களை எழுப்பியதை அடுத்து, பலத்த பாதுகாப்புடன் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தை விட்டுப் புறப்பட்டார். அசம்பாவிதங்களைத்…

  • ஈரானில் திடீரென மோசமான நிலைமை: இந்தியர்களிற்கு எச்சரிக்கை

    ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்திய மத்திய அரசு இந்திய மக்களுக்கு இன்று முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளது. இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம். ஈரானில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அவசர வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் – அமெரிக்கா இடையே தற்போது நாளுக்கு நாள் மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில…

  • இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல்!

    இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியான ‘கியூடெங்கா’வுக்கு (QDENGA) இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம், சந்தைப்படுத்தல் ஒப்புதலை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தத் தடுப்பூசியை, 4 முதல் 60 வயதுடையவர்களுக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்படாதவர்களுக்கும் இந்தத் தடுப்பூசியைச் செலுத்த முடியும் என்பதால், தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னர் பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது 3 மாத இடைவெளியில் 0.5 மில்லிலீற்றர் அளவு கொண்ட…

  • இரண்டு தேசிய விருதுகள் : நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி

    நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனுஷிற்கு இயக்குநராகக் கிடைக்கும் முதல் தேசிய விருது ஆகும். அதே நேரத்தில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக அவருக்குச் சிறந்த நடிகருக்கான  தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை வெற்றி குறித்து நடிகர் தனுஷ் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட உருக்கமான அறிக்கையில்,’ராயன்’ படத்திற்காகச் சிறந்த தமிழ்த் திரைப்பட விருதையும், ‘கேப்டன்…

  • விண்ணில் பாய்ந்த இந்தியாவின் விக்ரம்-1 ராக்கெட்

    இந்தியாவின் முதல் தனியார் வணிக ரீதியிலான ஆர்பிட்டல் ராக்கெட்டான ‘விக்ரம்-1’, ஜூலை 18இ 2026 அன்று நண்பகல் 12:05 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ராக்கெட்டை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்துள்ளது. இந்த ஏவுதல் திட்டத்திற்கு ‘மிஷன் ஆகமன்’ (Mission Aagaman) என்று பெயரிடப்பட்டிருந்தது. இதன் மூலம், அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு சொந்தமாக தனியார் நிறுவனம்…