Category: முக்கிய செய்தி

  • கனடா பிரம்டனில் இலங்கை படுகொலையை பிரதிபலிப்பு நினைவு தூபி

    கனடாவின் பிரம்டனில் இலங்கை தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டமைக்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான கனடா தூதுவரை அழைத்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். நினைவுத்தூபி கட்டுவதை தடுத்துநிறுத்தவேண்டும் கனடாவின் வாக்குவங்கி அரசியலுக்காக தொடர்ந்து பரப்பப்படும் இந்த பொய்யான கதையை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார். பிராம்டன் நகரசபையின் தவறான ஆலோசனையின் அடிப்படையிலான செயற்பாடு இலங்கையில் உள்ள அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும்…

  • இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டெல்லிக்கு சென்ற முக்கிய செய்தி

    இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலானது தற்போது அண்டை நாடுகளின் கவனத்தை ஈர்த்தது இலங்கையில் பொருளாதார முதலீடுகளை செய்துள்ள இந்தியா மற்றும் சீனாவிற்கான எதிர்கால நகர்வுகள் எவ்வாறு அமைய போகும் என்பதை தீர்மானிக்கும் ஒரு தேர்தலாக இது பார்க்கப்படுகின்றது. இந்த தேர்தலில், ரணில், சஜித் மற்றும் அனுர தரப்புக்கள் மும்முரமான போட்டியினை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இங்கு இந்தியாவின் உற்றுநோக்கலானது ரணிலை எதிர்பார்க்கும் ஒரு எதிர்கால அரசியல் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறான அரசியல் நகர்வுகளையும் இந்தியாவின் நோட்டமிடல்கள் தொடர்பிலும் விசேட…

  • இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து கனடாவில் போராட்டம்!

    பங்களாதேசில் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி கனடாவில் போராட்டம் முன்னெடுக்கபப்ட்டது. இந்த போராட்டத்தில் இந்து, யூதர்,கிறிஸ்தவர், புத்த மதத்தினர் இணைந்து பங்கேற்றுள்ளனர். கடந்த வாரத்தில் பங்களாதேசில் மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருந்தார். மாணவர்கள் போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. இந்துக்களின் வீடுகள் குறி வைத்து தாக்கப்பட்டு வரும் நிலையில், பங்களாதேசில் சிறுபான்மை மக்களாக வாழும் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என…

  • கனடாவில் குளிர்பானத்தில் நோய்க்கிருமிகள்: சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ள சமீபத்திய தகவல்

    கனடாவில் பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பானத்தை அருந்திய 2 பேர் உயிரிழந்தார்கள். 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில், அந்த பானத்தை அருந்திய மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளதாக கனேடிய பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது. கனடாவின் ஒன்ராறியோ, கியூபெக், ஆல்பர்ட்டா மற்றும் நோவா ஸ்கொஷியா ஆகிய நான்கு மாகாணங்களில் தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட பானம் ஒன்றில் லிஸ்டீரியா என்னும் நோய்க்கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பானத்தை…

  • மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலையான வைத்திய அர்ச்சுனாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி அமோக வரவேற்பு.

    மன்னார் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் புதன் (7) நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ஜுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள் அமோக வரவேற்பை வழங்கினர். கடந்த வெள்ளிக்கிழமை(2) இரவு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுல் அத்து மீறி நுழைந்து கடமைக்கு இடையூரை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் மன்னார் போலீஸ் நிலையத்தில் வைத்தியசாலை தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து வைத்தியர் அர்ச்சுனா மன்னா போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வைத்தியர் சனிக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்…

  • வடக்கு கிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களின் கோரிக்கையை ஜனாதிபதியிடம் வழங்க விடாது தடுத்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு

    வடக்கு கிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களின் கோரிக்கையை ஜனாதிபதியிடம் வழங்க விடாது தடுத்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சந்தித்து கலந்துரையாடிய நிகழ்வு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் சில தமது கடுமையான எதிர்ப்பையும் இந்த கலந்துரையாடலை புறக்கணிப்பதாகவும் அறிவித்திருந்தன இதற்கான நியாயமான காரணங்களையும் அவை வெளிப்படுத்தி இருந்தன இந்நிலையில் ஏற்ப்பாட்டாளர்களின் கோரிக்கைக்கு அமைய…

  • இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகள் ஒரு பில்லியன் வருகை

    இந்த வருடம் ஜூலை 15 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு 1,095,675 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இந்நிலை தொடருமானால், போருக்குப் பின்னர் இலங்கையில் சுற்றுலாத்துறையின் உச்ச நிலையை பதிவான 2018 ஆம் ஆண்டை விடவும் நல்ல நிலையை அடைய முடியும் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல், கொவிட் – 19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் சுற்றுலா வர்த்தகம் வீழ்ச்சியடைந்தது எனவும் ஆனால்…

  • அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு – 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

    அதுருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 05 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்குமூலங்களை அதுருகிரிய பொலிஸார் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற அத்துரிகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் உட்பட 05 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதுருகிரிய பிரதேசத்தில் நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் “கிளப்…

  • கொழும்பில் உயிரிழந்த மாணவர்கள் தொடர்பில் மர்மமான திடுக்கிடும் தகவல்கள்

    அண்மையில் கொழும்பில் உயிரிழந்த சர்வதேச பாடசாலை மாணவர்கள், இருவர் தொடர்பில் பல்வேறுபட்ட, முன்பின்னான முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் தற்போதைய தகவல்களின்படி உயிரிழந்த மாணவனின் தந்தை மிகப்பெரும் பணக்காரர் என்பது தெரியவந்துள்ளது. உலகளாவிய ரீதியில் செயற்படும் சிகையலங்கார தொழில்துறையில் தந்தை ஈடுபட்டு வரும் நிலையில் அவருக்கு உலகின் பல நாடுகளில் அதற்கான கிளைகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் டெல்லியை தளமாக கொண்டு செயற்படும் குறித்த சலூன் இலங்கையிலும் மிகவும் பிரபல்யம் அடைந்த ஒன்றாகும். அத்துடன்…

  • வெளிநாட்டவர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம்

    வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. நாட்டில் தங்கியிருக்கும் குறுகிய காலத்திற்காக இந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது. இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிபத்திரங்களை பெறுவதற்கு இதுவரை வெரஹெர வரை செல்ல வேண்டியிருந்தது. இது தொடர்பாக சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினரும், சுற்றுலாப் பயணிகளும் அவ்வப்போது விழிப்புணர்வு…