Category: இலங்கை செய்திகள்
-
மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலையான வைத்திய அர்ச்சுனாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி அமோக வரவேற்பு.
மன்னார் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் புதன் (7) நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ஜுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள் அமோக வரவேற்பை வழங்கினர். கடந்த வெள்ளிக்கிழமை(2) இரவு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுல் அத்து மீறி நுழைந்து கடமைக்கு இடையூரை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் மன்னார் போலீஸ் நிலையத்தில் வைத்தியசாலை தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து வைத்தியர் அர்ச்சுனா மன்னா போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வைத்தியர் சனிக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்…
-
வடக்கு கிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களின் கோரிக்கையை ஜனாதிபதியிடம் வழங்க விடாது தடுத்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு
வடக்கு கிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களின் கோரிக்கையை ஜனாதிபதியிடம் வழங்க விடாது தடுத்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சந்தித்து கலந்துரையாடிய நிகழ்வு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் சில தமது கடுமையான எதிர்ப்பையும் இந்த கலந்துரையாடலை புறக்கணிப்பதாகவும் அறிவித்திருந்தன இதற்கான நியாயமான காரணங்களையும் அவை வெளிப்படுத்தி இருந்தன இந்நிலையில் ஏற்ப்பாட்டாளர்களின் கோரிக்கைக்கு அமைய…
-
இலங்கைக்கு அருகில் இந்து சமுத்திரத்தில் பல கோடி பெறுமதியான பெரும் புதையல்
இந்து சமுத்திர பிராந்திய கடற்படுக்கையில் இலங்கைக்கும் – மாலைத்தீவுக்கும் அருகில் பல கனிமங்கள் நிறைந்த ஒரு மலைத்தொடர் காணப்படுகின்றது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆரூஸ் தெரிவித்தார். இதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் நாடு மிகப்பெரிய செல்வந்த நாடாக மாறக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
-
கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது!
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ. எஸ். பி. லியனகே, சஜித் பிரேமதாச, பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்க, விஜயதாச ராஜபக்ஷ, கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய, அஜந்த டி சொய்சா, கே. ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, வணக்கத்துக்குரிய பத்தரமுல்லே சீலரதன தேரர் மற்றும் அக்மீமன தயாரதன தேரர்…
-
வெளிநாடு செல்ல தயாராக இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு
பலாங்கொடையில் இளைஞர் குழுவொன்று நீரில் மூழ்கியமையால் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனையவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கொரியா நாட்டிற்கு செல்வதற்கான பரீட்சையில் சித்தியடைந்த இளைஞர் குழுவொன்றே தமது சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்றையதினம் பலாங்கொடை பம்பஹின்ன சமனலவெவ வாவியிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய யூ.எம்.கமல் பிரசங்க நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சுமார் ஒன்பது பேர் கொண்ட குழுவொன்று சுற்றுலா சென்றுள்ளது வெளிநாடு செல்ல தயாராக இருந்தவர் பரிதாபமாக உயிரிழப்பு பலாங்கொடையில்…
-
திணறும் ரணில் அரசாங்கம் நாட்டில் உருவாக்கவுள்ள மாபெரும் கூட்டணி!
எதிர்க்கட்சி தலைவரின் வெற்றியை உறுதிப்படுத்தும் கொள்கை அடித்தளத்துடன் எதிர்வரும் 8 ஆம் திகதி மாபெரும் கூட்டணி உருவாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், ”தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் இன்னும் 46 நாட்களில் முடிவடையும். அரசாங்கம் தற்போது தனிப்பெரும்பான்மையை இழந்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் 134 வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தற்போது தமக்கு 92 நாடாளுமன்ற…
-
மன்னாரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம்: தண்டனைக்கு உறுதியளித்த எம். பி
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாயின் மரணத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இந்த மரணம் தொடர்பிலான விசாரணைகள் நீதியான முறையில் இடம்பெறுகின்றதா என்பது பற்றி அறிந்து கொள்வதற்காக நேற்று (3) மாலை மன்னார் பொது வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். குறிப்பாக அண்மையில் வைத்தியசாலையில் இடம்பெற்ற பட்டதாரியான இளம் குடும்பப்…
-
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில். பிரதமர் தினேஷ் குணவர்தன நிலைப்பாட்டை அறிவித்தார்
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மஹாஜன எக்சத் பெரமுன, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது. மஹரகம கட்சியின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இக்கலந்துரையாடலில் மக்கள் ஐக்கிய முன்னணியின் உப தலைவர்கள், இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதாஞ்சன குணவர்தன, பிரதிச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் யதாமணி குணவர்தன, பிரதிச் செயலாளர்…
-
ஜனாதிபதி ரணில் நாட்டு மக்களுக்கு அதிரடியான நடவடிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இலங்கையில் நெருக்கடிகள் ஏற்படலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அச்சம் இருப்பதாக தெரிவித்தார். எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை பெற்றுக்கொள்வதில் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பிரச்சினையைக் கையாள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும. இவ்வாறான நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் 3 விசேட குழுக்களை ஜனாதிபதி நியமிதுள்ளதாகவும். இதன்படி, தேசிய பாதுகாப்பு தொடர்பான விசேட குழுவொன்றும், பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கான குழுவொன்றும்…
-
அதிரடி கைது வியாழேந்திரனின் செயலாளர்
வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் உதவியாளர்கள் இருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்றையதினம் (01.08.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆற்று மணல் அகழ்வுக்கான உரிமத்தினை பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு அவர்களுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.