Category: இலங்கை செய்திகள்
-
கொழும்பில் வீடொன்றுக்குள் சிறைப்பிடிக்கப்பட்ட நபர் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
கொழும்பில் வீடொன்றுக்குள் சிறைப்பிடிக்கப்பட்ட நபர் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் மாத்தறை சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிகாரிகள் சந்தேக நபருடன் தொலைபேசியில் உரையாடி, அவர் போலி மாவட்ட நீதிபதி மற்றும் போலி சட்டத்தரணி என காட்டிக் கொள்ளும் நபர் என பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் 20 வருடங்களுக்கு முன்னர் பொரளை பிரதேசத்தில் உள்ள இடமொன்றில் இருந்து இவர் இந்த போலி அடையாள அட்டையை தயாரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. சட்டத்தரணி போல் காட்டிக்கொண்டு ஹோமாகம, பதுளை,…
-
உலகின் மிக நீளமான முத்திரை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
கண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகை பெரஹராவை குறிக்கும் வகையில் தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உலகில் மிக நீளமான முத்திரையான 205 மி.மீ நீளமான நினைவு முத்திரை சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
-
தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி!
தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் நேற்று (18) தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 9 மணியளவில் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன், சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
-
22 பேரால் தவறான செயற்பாட்டிற்கு உள்ளான மாணவிக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு
22 பேரால் தவறான செயற்பாட்டிற்கு உள்ளான மாணவிக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு மொனராகல, தனமல்வில பிரதேசத்தில் தகாத முறைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 16 வயது மாணவிக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் அத்தியட்சகர் தாம் என கூறி மாணவியை அழைத்து வாக்குமூலம் பெற முயற்சிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவரது பெற்றோர் செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.…
-
கிபிர் தாக்குதலில் பலியான மாணவர்களுக்கு வள்ளிபுனத்தில் அஞ்சலி செய்யப்பட்டது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் இலங்கை இராணுவம் நடாத்திய கிபிர் விமான குண்டு தாக்குதலில் பலியான மாணவர்களுக்கு இன்று அஞ்சலி செய்யப்பட்டது
-
நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய நாமல் ராஜபக்ஷ சார்பில், கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்று (14) முற்பகல் கட்டுப்பணம் செலுத்தினார். ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி வேட்பாளர்…
-
மன்னாரில் உண்ணாவிரதத்தில் குதித்த வைத்தியர்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்றைய தினம் (13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர் செந்தூரன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(13) காலை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். சிந்துஜாவின் மரணத்துடன்…
-
இணைந்த 22 மாணவர்கள் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த விபரீதம்
தனமல்வில பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 22 மாணவர்களினால் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஒரு வருடமாக குழுவாக இணைந்து, தன்னை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுத்தியதாக தனமல்வில பொலிஸ் நிலையத்தில் குறித்த மாணவி வாக்குமூலம் வழங்கியுள்ளார். தனமல்வில பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய 22 மாணவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அனைவரையும் கைது…
-
மன்னார் சதோச மனித புதை குழி பகுதியை Scan பரிசோதனை செய்ய தீர்மானம்.
மன்னார் சதோச மனித புதை குழி பகுதியை Scan பரிசோதனை செய்ய தீர்மானம். (08/08/2024) மன்னார் “சதோச” மனித புதை குழி தொடர்பிலான வழக்கு நேற்றய தினம் புதன் கிழமை (7)மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் கலந்துரையாடல் வடிவில் குறித்த வழக்கு விவாதிக்கப்பட்டது. இதன் போது அகழ்வுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ,பேராசிரியர் ராஜ்சோம தேவ்,காணாமல் போனோர் சங்க பிரதிநிதிகள்,OMP அலுவளக பிரதிநிதிகள் உள்ளடங்கியோர் கலந்து கொண்டனர். இதன் போது…
-
சீதுவை பொலிஸ் பிரிவில் துப்பாக்கி வெடித்தது ஒருவர் பலி
சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடுகொட பொலிஸ் வீதி சோதனை சாவடியில் காரை சோதனையிடச் சென்று போது நபர் ஒருவர் பொலிஸ் சார்ஜன்ட்டின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளார். சீதுவை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சீதுவை திசையிலிருந்து வந்த காரை சோதனையிட முற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அப்போது, காரின் இடது ஆசனத்தில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் சார்ஜன்ட்டின் கடமை துப்பாக்கியை பறிக்க முற்பட்ட போது, துப்பாக்கி வெடித்ததில் அந்த அதிகாரியின் காலிலும், பறிக்க முற்பட்ட நபரின் வயிற்றிலும்…