Category: இலங்கை செய்திகள்
-
வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெறப்போகும் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி
இலங்கை வரலாற்று அதிகபடியான வாக்குகளை பெற்று வெற்றிபெறப்போகும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே இருப்பார் என முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், முழு நாடும் அனுரவுக்கு என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மறுமுனையில் சஜித் இப்போதே ஜனாதிபதியாகிவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார். சஜித் மற்றும் அநுர உள்ளிட்ட இவர்கள் அனைவரும் வேடிக்கை பாத்திரங்கள்.…
-
யாழில் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரசார நடவடிக்கை
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேத்திரனை ஆதரித்து இன்று (09) யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் அதிக வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஊர்காவற்துறை – தம்பாட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகள் முன்னெடுத்து தேங்காய் உடைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஆலய பிரதமகுருவிற்கு சம்பிரதாய பூர்வமாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு பின்னர் ஊர்காவற்துறை நகர பகுதியில் பிரசார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேவேளை, வடக்கு மாகாண கடற்றொழிலாளர்…
-
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வெளியிட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வெளியிட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இலங்கைத் தீவில் சிறிலங்காவின் அரசுத் தலைவர் தேர்தலை மையப்படுத்தி, தமிழர் தேசத்தினால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. விடுதலை அரசியலின் முனைப்பாக தேசமாக, தேசிய இனத்தின் திரட்சியாக, சங்கு சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்குமாறு இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களை, மற்றும் வாக்களிக்க தகுதியுள்ள புலம்பெயர் தமிழர்களை உரிமையோடு வேண்டுகின்றோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்…
-
முன்னாள் போராளி ஒருவர் மரணம்
முன்னாள் போராளி ஒருவர் மரணம் மன்னார் ஈச்சளவக்கை கிராமத்தில் வசித்து வரும் சின்னப்பர் பாக்கியநாதன் (பாக்கியம்)அவர்கள் (07)நேற்றய தினம் நெஞ்சுவலி என மன்னார் பள்ளமடு வைத்திய சாலைக்கு சென்னு அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்துள்ளார் இவர் கடந்த பதின்னாங்கு வருடங்கள் பயங்கர சட்டத்தின் கீழ் தடுப்பு முகாமில் தண்டனை பெற்று கடந்த வருடமளவில் விடுதலையாகி அவரது குடும்பத்தோடு இணைந்து வாழ்தவர் இவ்வாறு தடுப்பு முகாம்களில் இருந்து வந்தவர்கள் திடீர் மரணம் அடைவது குறிப்பிடத்தக்கது
-
பாடசாலைகளுக்கு இடையிலான “band” இசை போட்டி மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி முதலிடம்
பாடசாலைகளுக்கு இடையிலான “band” இசை போட்டி மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி முதலிடம் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இடையிலான band இசை போட்டியானது இரணுவத்தின் 54 காலாட்படையின் ஏற்பாட்டில் மன்னார் பொது விளையாட்டரங்கில் இடம் பெற்றது குறித்த போட்டியில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 15 பாடசாலைகள் கலந்து கொண்ட நிலையில் பல்வேறு தகைமையின் அடிப்படையிலும் பிரிவுகளிலும் போட்டிகள் இடம் பெற்றதோடு போட்டிகளில் மதிப்பெண்களின் அடிப்படையில் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி band அணியினர் மாவட்ட ரீதியாக…
-
வவுனியாவில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்- பிரமுகர் மீது முறைப்பாடு
வவுனியாவில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்- பிரமுகர் மீது முறைப்பாடு99 வவுனியாவில் 14 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு 6 மாதத்திற்கு பின்னரான நிலையில், முன்னாள் போராளி ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (07.09) தெரிவித்துள்ளனர். வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த குறித்த சிறுமியை கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முன்னாள் போராளியும், போராளிகள் நலன்சார்ந்த அமைப்பு ஒன்றின் தலைவருமான அரவிந்தன் செல்வநாயகம் ஆனந்தவர்மன் என்பவரே…
-
உள்ளிருந்து எதிராக செயற்படும் அமைச்சர்கள் தொடர்பில் ரணில் கடுமையான நிலைப்பாடு!
இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காது கட்சியை பெயரளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேறுமாறு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கோரிக்கையை பரிசீலித்ததன் அடிப்படையிலேயே நேற்று (05) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 4 இராஜாங்க அமைச்சர்களை பதவியில் இருந்து வெளியேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த,…
-
மியன்மார் அடிமை முகாமிலிருந்து 20 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் அடிமை முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
-
தபால் மூல வாக்குகளிப்புக்கான இரண்டாம் நாள் இன்று
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளிப்பு இன்றும் (05) இடம்பெறவுள்ளது. தபால் மூல வாக்களிப்பு நேற்று (04) ஆரம்பிக்கப்பட்டதுடன், மாவட்ட செயலக அலுவலக அதிகாரிகள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இன்றும் நாளையும் (06) முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களும் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் நேற்று வாக்களிக்க முடியாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நாளை(06)…
-
கொழும்பின் புறநகர் பகுதியில் பணத்திற்காக உயிர் பறிக்கப்பட்ட வயோதிப பெண்
கொழும்பு புறநகர் பகுதி ஒன்றில் பணத்திற்காக வயோதிப் பெண்ணொருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, கொட்டாவ மாலம்பே வீதி இலக்கம் 720 இல் வசிக்கும் டொன லீலா அபேரத்ன என்ற 76 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் குறித்த வயோதிபப் பெண் வீட்டில் தனிமையிலிருந்த போது சந்தேக நபர் வீட்டுக்கு சென்று வயோதிபப் பெண்ணிடம் 10,000 ரூபா பணம் கேட்டுள்ளார். இந்த…