Category: இலங்கை செய்திகள்
-
65 கோடி மோசடியில் நடக்கப்போகும் அதிரடி கைது
65 கோடி மோசடியில் நடக்கப்போகும் அதிரடி கைது அநுரவின் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில் ஊழல் தொடர்பான கைது நடவடிக்கைகளை மத்திய வங்கி விடயத்தில் இருந்து ஆரம்பிக்க போகின்றாரா அல்லது மகிந்தவில் இருந்து ஆரம்பிக்க போகின்றாரா என்பது தெரியவில்லை என புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார் ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஆனால், முன்னாள் ஜனாதிபதிகள் என்ற விடயத்தைக் கொண்டு ரணில், மகிந்த, கோட்டாபயவை தவிர்த்து அதற்கு அடுத்து…
-
புதிய பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமனம்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். முதலாம் இணைப்பு ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது புதிய பாதுகாப்பு செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி இந்த பதவிக்கு எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துயகொண்டா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம்
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அவர் தனது விசேட உரையை நிகழ்த்தியுள்ளார். இந்த நிலையில் அநுரகுமார திசாநாயக்கவின் ஆதரவாளர்கள் பலர் காலிமுகத்திடல் பகுதியில் திரண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அநுரகுமார திசாநாயக்க இன்னும் சில நிமிடங்களில் இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட…