Category: இலங்கை செய்திகள்

  • அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்தல் நிறுத்தப்படும்! தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

    ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்த்தல் முடிவுகள் அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது வாக்களிப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாக இருந்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகளை சூனியமாக்கப்படும். அந்தத் தொகுதிகளில் மீண்டும் வாக்கெடுப்பை நடத்தும் வரையில் நாடாளவிய ரீதியிலான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடவடிக்கைக்கு பாதிப்பை…

  • ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு!

    நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் பிரசாரங்கள் நேற்று (18) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்ததோடு, தேர்தல் நடைபெறும் நேரம் வரையான காலப்பகுதி அமைதி காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் எவ்விதமான பிரச்சார…

  • தேர்தல் முடிவுகளை நேரடி ஒளிபரப்பு தடை!

    வாக்கு எண்ணிக்கை இடம்பெறும் போது அந்த முடிவுகளை தொலைக்காட்சிகள் அல்லது பெரிய திரைகளை பயன்படுத்தி வீதிகளின் அருகில் ஒன்று கூடி பார்ப்பது சட்டவிரோதம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதுபோன்ற கூட்டங்களை பாதுகாப்பு தரப்பினர் கலைக்கவோ அல்லது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவோ வாய்ப்பு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று (19) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக்…

  • கிளிநொச்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 400 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் நியமனம்

    கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகளுக்காக 400 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(19.09.2024) பிற்பகல் வாக்கெண்ணும் அலுவலர்களுக்கான அறிவுறுத்தல் தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றதையடுத்து ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், “கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு லட்சத்து தொள்ளாயிரத்து ஏழு வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்களாக உள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்களும்…

  • தமிழ் மக்களே தனது பாதுகாப்பு என்கிறார் அரியநேத்திரன்

    நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்த்லில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் முன்மொழியப்பட்டவுடன் பல்வேறு சேறுபூசல் விடயங்கள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.பிரதி பொலிஸ்மா அதிபரால் பாதுகாப்பு அசச்சுருத்தல் தொடர்பில் தனக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு பதில் வாங்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் எனக்கான பாதுகாப்பு என்பது தமிழ் மக்களே எனவும் பகிரங்கமாக அறிவித்துள்ளார். தான் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியதில் இருந்து சமூக ஊடகங்களில் முறையாற்றவிதமான கருத்துக்களை கொண்டு தனது பெயரை…

  • குற்றவியல் சட்டத்தை திருத்த அனுமதி

    குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எந்தவொரு முறையிலும் உடல் ரீதியிலான தண்டனையை தடை செய்யும் வகையில், தண்டனைச் சட்டம் திருத்தப்பட்டு, அதற்கு உரிய சட்டத்தை உருவாக்குவதற்காக கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, வரைவு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது. சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அதனை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால்…

  • மன்னார் ஈச்சளவக்கை அ த க மாகாண மட்ட மெய் வல்லுனர் போட்டியில் மாணவன் 2தங்க 1வெங்கல பதக்கம் வென்று சாதனை

    மன்னார் ஈச்சளவக்கை அ த க மாகாண மட்ட மெய் வல்லுனர் போட்டியில் மாணவன் 2தங்க 1வெங்கல பதக்கம் வென்று சாதனை மன்னார் மடு கல்வி வலயத்தின் ஈச்சளவக்கை அ.த.க பாடசாலையின் பதினாறு வயது பிரிவில் சு சுபோஜன் 300 மீற்றர் சட்ட வேலி ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் அத்தோடு 400 மீற்றர் ஓட்டத்திலும் தங்கப் பதக்கம் மற்றும் 200 மீற்றர் ஓட்டத்திலும் வெண்கலம் வென்று சாதனை இவரின் சாதனைக்கு உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கு…

  • புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு

    புலமைப் பரிசில் பரீட்சை நிறைவடைந்தவுடன் மாணவர்களை சுதந்திரமாக நடமாட விடுமாறு விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன், பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாளைய தினம் நடைபெறவுள்ளது. மேலும், புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் தங்களது பிள்ளைகளை ஏனைய பிள்ளைகளுடன் ஒப்பிடுவதை தவிர்க்குமாறும் வைத்தியர் பெற்றோர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாரான மாணவர்கள் அதிக மன…

  • திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இடைநிறுத்தம்

    திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதம் நேரடியாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது ஒழுக்கக்கேடான நடத்தை ஒன்று தொடர்பாக விசாரணையை ஆரம்பத்துள்ள நீதிச் சேவை ஆணைக்குழு அவரின் விளக்கத்தைப் கோரி பெற்றதன் பின்னர் அவரைச் சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளது. அவரது இடத்துக்குத் திருகோணமலை பிரதம நீதிவான் பயஸ் ரஸாக் பதில் கடமையாற்றுவார் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

  • புதிய கருத்து கணிப்பின் பிரகாரம் முன்னணி வகிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்!

    ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான புதிய கருத்து கணிப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் முன்னணி கருத்து கணிப்பு நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. நம்பர்கள் டொட் எல்.கே (numbers.lk/)என்ற நிறுவனம் இந்தக் கருத்துக் கணிப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு 34.5 வீத ஆதரவு காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. 32.4 வீத ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார…