Category: பிரதான செய்தி
-
உரிமமின்றி மானை வேட்டையாடிய கனேடியருக்கு அபராதம்!
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த மார்க் ஜோடோயின் என்பவர், முறையான உரிமமின்றி ‘மூஸ்’ வகை மானை வேட்டையாடிய குற்றத்திற்காக 5,000 டொலர் அபராதமும், ஒரு ஆண்டு வேட்டையாடத் தடையும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 25, 2024 அன்று மாடாவா பகுதிக்கு அருகில் உள்ள முகாம் ஒன்றில் பாதுகாப்புக் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சட்டவிரோதமாகச் சுடப்பட்டுத் தொங்கவிடப்பட்டிருந்த ஆண் மூஸ் மானின் உடலைக் கண்டறிந்தனர். விசாரணையில் ஜோடோயினைக் கண்டறிந்த அதிகாரிகள், அவரிடம் அந்த மானின் தலை இருப்பதைக் கண்டுபிடித்தனர்.…
-
கனடாவில் விமான விபத்து- இருவர் காயம்
கனடாவின் நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடோரின் தலைநகரான செயின்ட் ஜான்ஸ் நகருக்கு அருகே, நீரில் தரையிறங்க முயன்ற சிறிய விமானம் ஒன்று காட்டுப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. மேர்லின் ஜீ.ரீ. ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், செயின்ட் ஜான்ஸ் நகரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தென்மேற்கில் அமைந்துள்ள பெடிஸ் பொன்ட் ஏரியில் தரையிறங்க முயன்றபோது திடீரென மின்சக்தியை இழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, சனிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் விமானம் ஏரிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் விழுந்துள்ளது. விமானத்தில்…
-
ஜப்பானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. அதிர்ந்த கட்டடங்கள்!
ஜப்பானின் ஹோன்ஷு கிழக்குக் கடற்கரையை ஒட்டிய பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 78 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவான இந்த நிலநடுக்கத்தால், கரையோரப் பகுதிகளில் உள்ள கட்டடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தின்போது, பல்பொருள் அங்காடி ஒன்றில் பொருட்கள் குலுங்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. தலைநகர் டோக்கியோ வரை அதிர்வுகள் உணரப்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
-
செப்டம்பர் 05 முதல் ஜனாதிபதி அநுர தலைமையில் மக்கள் பேரணிகள் ஆரம்பம்!
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் சிறப்பு மக்கள் பேரணித் தொடரொன்று நடத்தப்படவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் . களுத்துறையில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “தேசிய மக்கள் சக்தி என்ற வகையில், கிராம மட்டத்தில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் தேர்தல் குழுக்களை மறுசீரமைக்கும்…
-
அமெரிக்காவில் தயாரிப்பு என விளம்பரம்: ட்ரம்ப் மொபைல் T1 ஸ்மார்ட்போனால் அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகன்மார் அறிமுகப்படுத்திய Trump Mobile T1 ஸ்மார்ட்போன், ஆரம்பத்தில் “அமெரிக்காவில் தயாரிக்கப்படும்” என விளம்பரப்படுத்தப்பட்டது. எனினும், 2025 ஆகஸ்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த தொலைபேசியின் வெளியீடு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நிறுவனத்தின் இணையதளத்தில் ‘Made in the USA’ என்ற வாசகமும் நீக்கப்பட்டு, அமெரிக்க மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட வடிவமைப்பு என மாற்றப்பட்டது. அத்துடன், முன்பதிவுக்காக செலுத்திய 100 டொலர் தொகை , தொலைபேசி வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் அல்ல…
-
ஜப்பான் ஃபூஜி மலையில் 7 வயது மகனைத் தனியாக விட்டுச் சென்ற தந்தை
ஜப்பானின் மிக உயரமான ஃபூஜி மலையேற்றத்தின்போது, களைப்பால் அழத் தொடங்கிய 7 வயது மகனை வழியில் தனியாக விட்டுவிட்டு மலையேறிச் சென்ற தந்தையின் செயல் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜப்பானின் நாகோயா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது 7 வயது மகன் மற்றும் மூத்த மகனுடன் ஃபூஜி மலையில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,490 மீட்டர் உயரத்தில் (6-வது முகாம் அருகே) சென்றுகொண்டிருந்தபோது, 7 வயது சிறுவன் கடும்…
-
யாழில் பல வீடுகளில் பதிவான திருட்டுச் சம்பவங்கள் – மூவர் கைது
யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 9ஆம் திகதி சாவகச்சேரி நகரில் உள்ள நகைக்கடை உரிமையாளரின் வீட்டில் இருந்து 17 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…
-
ஐரோப்பிய பந்தயப் பயிற்சியில் நடிகர் அஜித்தின் சிற்றூந்து விபத்து
ஐரோப்பாவில் நடைபெறும் சர்வதேச சிற்றூந்து பந்தயப் பயிற்சியின் போது நடிகர் அஜித் குமார் ஓட்டிய சிற்றூந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான நிலையில், அவர் காயங்களின்றிப் பாதுகாப்பாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ‘மிச்சலின் லீ மேன்ஸ்’ கிண்ணத்துக்கான சிற்றூந்து பந்தயப் பயிற்சியில் நடிகர் அஜித் ஈடுபட்டிருந்தபோது, அவர் ஓட்டிய சிற்றூந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவருக்கு எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை என்றும், அவர் முழுப் பாதுகாப்புடன் நலமாக உள்ளார் என்றும்…
-
இனப்படுகொலை குற்றச்சாட்டு.. நெதன்யாகு மீது சர்வதேச கைது நடவடிக்கை.. துருக்கி அரசாங்கம் அதிரடி!!
2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் காசா இடையே தொடங்கிய போர் 2025 வரை நீடித்தது. இந்தப் போரில், 73 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உட்பட 76 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டால், எகிப்தில் கையெழுத்தானது. இதன்மூலம் இஸ்ரேல் காசா இடையேயான போர் முடிவுக்கு வந்திருக்கிறது. எனினும், காசா…
-
இனி இஸ்ரோ ராக்கெட் ஏவாது : அது தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.. மத்திய அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி!
இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்திற்காக விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு இஸ்ரோ நிறுவனம் 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவை ஏவியதில் தொடங்கி, சொந்தமாக விண்வெளிக்கு செயற்கைகோள்களை அனுப்பும் ராக்கெட்களை உருவாக்குவது வரை பல்வேறு சாதனைகளை படைத்தது. அதன் உச்சமாக சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவுக்கே விண்கலனை அனுப்பி இஸ்ரோ உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதோடு உலகிலேயே செயற்கைக்கோள்களை மிகவும் குறைந்த கட்டணத்தில் துல்லியமாக விண்ணில் ஏவி, சர்வதேச அளவில்…