Author: Yalarasan
-
உள்ளிருந்து எதிராக செயற்படும் அமைச்சர்கள் தொடர்பில் ரணில் கடுமையான நிலைப்பாடு!
இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காது கட்சியை பெயரளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேறுமாறு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கோரிக்கையை பரிசீலித்ததன் அடிப்படையிலேயே நேற்று (05) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 4 இராஜாங்க அமைச்சர்களை பதவியில் இருந்து வெளியேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த,…
-
மியன்மார் அடிமை முகாமிலிருந்து 20 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் அடிமை முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
-
கனடாவில் 96 மற்று 66 வயது பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்
மிஸ்ஸசாகா பகுதியில் சுமார் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 96 மற்றும் 66 வயதுடைய வயோதிப பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது என்பதுடன் இவை இரண்டும் இரு வேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸாருக்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது. 96 வயதான வயோதிப பெண் வீதியில் நடந்து செல்லும் போது குறித்த நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி…
-
தபால் மூல வாக்குகளிப்புக்கான இரண்டாம் நாள் இன்று
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளிப்பு இன்றும் (05) இடம்பெறவுள்ளது. தபால் மூல வாக்களிப்பு நேற்று (04) ஆரம்பிக்கப்பட்டதுடன், மாவட்ட செயலக அலுவலக அதிகாரிகள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இன்றும் நாளையும் (06) முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களும் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் நேற்று வாக்களிக்க முடியாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நாளை(06)…
-
கொழும்பின் புறநகர் பகுதியில் பணத்திற்காக உயிர் பறிக்கப்பட்ட வயோதிப பெண்
கொழும்பு புறநகர் பகுதி ஒன்றில் பணத்திற்காக வயோதிப் பெண்ணொருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, கொட்டாவ மாலம்பே வீதி இலக்கம் 720 இல் வசிக்கும் டொன லீலா அபேரத்ன என்ற 76 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் குறித்த வயோதிபப் பெண் வீட்டில் தனிமையிலிருந்த போது சந்தேக நபர் வீட்டுக்கு சென்று வயோதிபப் பெண்ணிடம் 10,000 ரூபா பணம் கேட்டுள்ளார். இந்த…
-
மன்னார் ஆயரை சந்தித்த எதிர்கட்சி தலைவர் சஜித்
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் மன்னாரில் நேற்று (03.09.2024) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதற்கு மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே சஜித் பிரேமதாச மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.…
-
மன்னாரில் சஜித்தின். பிரச்சாரக்கூட்டம்
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மன்னார் பஜார் பகுதியில் இன்று (3) செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம் பெற்றது. மன்னாரிற்கு இன்று (3) மதியம் வருகை தந்த ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களை சந்தித்து கலந்துரையாடிய தோடு, ஆயரிடம் ஆசி பெற்றார். அதனைத் தொடர்ந்து மன்னார்…
-
சஜித்தின் பிரசார கூட்டத்தை சர்வதேச கண்காணிப்பு குழு கண்காணிப்பு
வவுனியாவில் இடம்பெற்ற எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார கூட்டத்தின் போது ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வைரவபுளியங்குளத்தில் இன்று (03.09.2024) இடம்பெற்ற பிரசார கூட்டத்தின் போது தேர்தல் பிரசார செயற்பாடுகள் மற்றும் கலந்து கொண்ட மக்களுடைய நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச கண்காணிப்பு குழு அவதானம் செலுத்தியுள்ளது. அத்துடன், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடி கூட்டம் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் புகைப்படங்கள் எடுத்துக்…
-
சஜித் தொடர்பான அறிவிப்பு கட்சியின் முடிவல்ல: மாவை தெரிவித்துள்ளார் சேனாதிராஜா அதிரடி
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையில் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் லங்காசிறி ஊடகத்திற்கு அவர் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறினார். இதன்போது கட்சியின் நிலைஇதுவரை தனக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார் மேலும், இதனை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு என்று ஏற்றுக்கொள்ள…