Category: முக்கிய செய்தி
-
17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை
இந்திய தலைநகர் டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் பாகத்தை நாய்கள் கடித்துத் தின்ற அவலமும் நிகழ்ந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கொடூர குற்ற சம்பவம் டெல்லியில் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்வரூப் நகரில் நடந்துள்ளது. பொலிஸார் உடலை கைப்பற்றிய போது இறந்தவரின் பாலினத்தை தடயவியல் நிபுணர்கள் அறிவதில் சிக்கல் இருந்தது. இந்த சூழலில் இந்த குற்ற பின்னணியை பொலிஸார்…
-
ட்ரம்பின் மகன்களுடன் தொடர்புடைய நிறுவனத்துக்கு பாகிஸ்தான் இராணுவத்தின் ட்ரோன் ஒப்பந்தம்
அமெரிக்க ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான Powerus, பாகிஸ்தான் இராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, ட்ரோன் தொடர்பான ஆரம்பகட்ட ஓர்டரையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் மதிப்பு மற்றும் ட்ரோன்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. Powerus, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகன்களான டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் ட்ரம்ப் முதலீடு செய்துள்ள Aureus Greenway Holdings நிறுவனத்துடன் அக்டோபரில் இணையத் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானில் ட்ரோன் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும் எதிர்காலத்தில் உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் வாய்ப்புகளை ஆராய்ந்து…
-
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு வீட்டுக் காவல் அனுமதி
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு, மீதமுள்ள சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் வகையில் மன்னிப்பு வழங்க மலேசிய மன்னர் சுல்தான் இப்ராகிம் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமரின் சட்டத் துறை அறிவித்துள்ளது. 1MDB நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நஜீப் ரசாக்கிற்கு, முன்பு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை 2024ஆம் ஆண்டு ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. புதிய முடிவின்படி, அவரது தண்டனைக் காலம் 2028 ஓகஸ்ட் 23ஆம் திகதி வரை தொடரும்.…
-
தெற்கு பிலிப்பைன்ஸிலுள்ள பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – பலர் காயம்
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் இன்று (18) துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட மேலதிக விவரங்களை அதிகாரிகள் தற்போது சரிபார்த்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
உலகளாவிய பொருளாதார அழுத்தம்: அதிரடி முடிவெடுத்த ஜப்பான் வங்கி!
ஜப்பான் மத்திய வங்கி, தனது கொள்கை வட்டி விகிதத்தை 0.25 சதவீத புள்ளிகளால் அதிகரித்து, 1.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதன்படி, ஜப்பானில் கடன் பெறுவதற்கான செலவு கடந்த 31 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மட்டத்தை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டில் நிலவும் பணவீக்கம், ஊதிய உயர்வு மற்றும் அமெரிக்காவிடமிருந்து ஏற்படும் பொருளாதார அழுத்தம் உள்ளிட்ட காரணிகள் வட்டி விகித உயர்வுக்கான பின்னணியாகக் குறிப்பிடப்படுகின்றன. ஜப்பான் மத்திய வங்கி இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதம்…
-
வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை- அதிரடி நடவடிக்கைகள்
கேகாலையின் -புலத்கோஹுபிட்டிய (Bulathkohupitiya) பகுதியிலுள்ள டெடுகல (Dedugala) கிராமத்தின் வீடு ஒன்றுக்குள் நுழைந்த முழு வளர்ச்சியடைந்த சிறுத்தை ஒன்று, எவ்விதப் பாதிப்புமின்றி மீட்கப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். புலத்கோஹுபிட்டிய அலுவலகத்தைச் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, கால்நடை மருத்துவ வழிகாட்டுதலின் கீழ் அந்த சிறுத்தையை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அந்த இடத்திலிருந்து சிறுத்தையை மீட்ட பிறகு, அதனை அதன் தாயுடன் மீண்டும் இணைக்க வனவிலங்கு அதிகாரிகள் முயற்சித்த போதிலும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. இதனைத்…
-
நாமல் ராஜபக்ச இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (18) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்தி கொள்வளவு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 4 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையானபோது நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், கையூட்டலாக 1.4 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகை சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றில் வரவு…
-
சுவிட்சர்லாந்தில் விமான விபத்து ; 3 பேர் பலி
சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ரோனே வேலி பகுதியில் அமைக்கப்பட்ட சியான் விமான நிலையத்தில் இருந்து சிர்ரஸ் எஸ்.ஆர்.22டி என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அது புறப்பட்ட 10 நிமிடங்களில் திடீரென ஸ்விஸ் மலைப்பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விமான விபத்தில், இங்கிலாந்து நாட்டினர் 2 பேர் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.…
-
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்.
கனடாவைத் தனது முதல் இணை உறுப்பினராக ஆக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்ததைத் தொடர்ந்து, கடுமையான இறக்குமதி வரிகளை விதிக்கப்போவதாகவும் வர்த்தகத்தை நிறுத்த இருப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் அந்த ஒன்றியத்தை அச்சுறுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் அந்தத் திட்டத்துடன் முன்னோக்கிச் சென்றால், அமெரிக்கா மிகக் கடுமையான வரிகளை விதிக்கலாம் அல்லது ஐரோப்பாவுடனான வர்த்தகத்தை நிறுத்திக்கொள்ளலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும், அது நல்ல நோக்கத்துடன் இருந்தால் சரி; ஆனால் அது தவறான நோக்கத்துடன் இருந்தால், ஐரோப்பாவின் மீது மிக…
-
பங்களாதேஷில் தட்டம்மை பரவல் – 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு
பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள கடுமையான தட்டம்மை நோய்த் தொற்றால் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், அவசர தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏற்கனவே 19.8 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனினும், நாளாந்தம் சுமார் 1,000 புதிய சந்தேகத்திற்கிடமான நோய்த்தொற்று வழக்குகள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளைச் சென்றடையும் வகையில், தடுப்பூசி திட்டத்தின் தீவிர கட்டத்தை செப்டெம்பர் 26ஆம் திகதி ஆரம்பிக்க பங்களாதேஷ்…