Category: பிரதான செய்தி

  • பெண்களை குறிவைத்து நடத்தப்பட்ட மோசமான செயல்.. சிக்கிய கோடீஸ்வர வர்த்தகரின் மகன்

    பெண்களை குறிவைத்து நடத்தப்பட்ட மோசமான செயல்.. சிக்கிய கோடீஸ்வர வர்த்தகரின் மகன்

    பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்ளையிட்ட சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் பிலியந்தலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அவுஸ்திரேலியாவில் இருந்து விடுமுறையில் நாடு திரும்பியவர், மற்றவர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரின் மகன் என தெரிய வந்துள்ளது. இருவராலும் திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளில், 5 நவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கிட்டத்தட்ட 15 ஸ்மார்ட் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளைக்கு…

  • இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவுசெய்த சர்வதேச நாணய குழுவின் அறிக்கை

    இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவுசெய்த சர்வதேச நாணய குழுவின் அறிக்கை

    இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவுசெய்த சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம், நாட்டின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சிறப்பான பொருளாதார விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.8% வளர்ச்சியடைந்தது, பணவீக்கம் தணிந்தது, உத்தியோகபூர்வ இருப்புக்கள் 6 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளன. இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம் தற்போதைய நிதி முன்னேற்றங்களைப் பாராட்டியது. எனினும், அதிகரித்து வரும் வெளிப்புற அபாயங்கள் குறித்து எச்சரித்தது. நிலையான மறுசீரமைப்பு முயற்சிகளை,…

  • இலங்கைக்கு கிடைக்கவுள்ள ஒரு பில்லியன் டொலர்

    இலங்கைக்கு கிடைக்கவுள்ள ஒரு பில்லியன் டொலர்

    எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து காரணமாக அரசல்லாத தரப்புக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ஒரு வருடத்தினுள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை ஆரம்ப நட்டஈடாக செலுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நட்டஈட்டு தொகை திறைசேரியின் செயலாளருக்கு செலுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் தமது உத்தரவில் தெரிவித்துள்ளது. பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ, நீதியரசர்களான யசந்த கோதாகொட, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கம்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு, ஓய்வுபெற்ற நீதியரசர் காமினி அமரசேகர…

  • தென்கொரியாவில் கனமழையினால்  17பேர் பலி

    தென்கொரியாவில் கனமழையினால் 17பேர் பலி

    தென்கொரியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்கொரியாவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் அந்நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு சுங்க்சோங் மாகாணம், குவாங்ஜூ நகரம் வெள்ளம், நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கேப்யோங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மற்றும் நிவாரண முகாம்கள் மூழ்கி, கனமழையின் மத்தியில் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 2 பேர்…

  • ஐரோப்பாவில் விமானியானார் ஈழத்தை சேர்ந்த இளைஞர்

    ஐரோப்பாவில் விமானியானார் ஈழத்தை சேர்ந்த இளைஞர்

    மன்னார் – விடத்தல்தீவு கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். விடத்தல்தீவில் வசிக்கும் அருள்வாசகம் பத்திமலர் ஆகியோரின் பேரனும் மொறின் பெல்சியா மற்றும் அன்ரன் ஜெறாட் ஆகியோரின் மகனும் இவர் ஆவார். 9.3.1998ஆம் திகதி பிறந்த அனுஜன், தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கற்றிருந்தார்.  கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி…

  • ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள நோய்.. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

    ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள நோய்.. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் வாஸ்குலர் பரிசோதனைக்கு (vascular test) உட்படுத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பரிசோதனைகளுக்கு பின்னர் ட்ரம்புக்கு பொதுவான நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், ட்ரம்ப் காலில் ஏற்பட்ட வீக்கத்தை ஆராய சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன்படி, மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.…

  • பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

    பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

    பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. கன்னட மொழியில் முதன்முதலில் அறிமுகமான சரோஜா தேவி முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார். தொடர்ந்து எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தில் அறிமுகமானார், தொடர்ச்சியாக எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனுடன் ஜோடி சேர்ந்தார். இவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல் பொருந்தக்கூடியவர் சரோஜா தேவி. முக…

  • வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் 10 மாணவிகள் 9ஏ சித்தி பெற்று சாதனை

    வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் 10 மாணவிகள் 9ஏ சித்தி பெற்று சாதனை

    வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் 10 மாணவிகள் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். 2024ஆம் ஆண்டிற்கான கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ள முன்னனிப் பாடசாலைகளில் ஒன்றான வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில், 10 மாணவிகள் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். பிரசாந்தன் ஹரனி, சிவரூபன் மகிழிசை, சிவனேஸ்வரன் சிபிக்கா, அஜந்தன் வர்ணிகா, அஜித்குமார் ஹரணியா, சுவேந்திரன் தன்சிகா, தவசீலன் கபிஸா, தவபாலன் அர்ச்சனா, வோல்டர் விதுசாலினி, துதர்சன் பேரேழில் ஆகிய…

  • வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 10 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை

    வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 10 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை

    வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 10 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. குறித்த பெறுபேற்றிலேயே விபுலானந்தா கல்லூரி மாணவர்களும் சாதனை படைத்துள்ளனர். அந்தவகையில், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் காண்டீபன் கிருஸ்சிககேசன், ஸ்கந்தராசர்மா கஜானன், குணதரசர்மா சருஜசர்மா, இராமகிருஸ்ணன் வோகித், சிவராசா தட்சாயினி, கந்தராசா டிஜானா, திலகநாதன் ஹரிணி, உதயதாசன் யதுசன், நிலாந்திரன் துபதாசன், யோகேஸ்வரன் ரஜீவ் ஆகிய 10 மாணவர்களும் 9 ஏ…

  • அரசாங்கம் அரசாங்கத்தையே விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

    அரசாங்கம் அரசாங்கத்தையே விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

    உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பான உண்மையை கண்டறிய, அரசாங்கம் அரசாங்கத்தையே விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாய்கக தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் 50ம் ஆண்டு மத வாழ்வு  பூர்த்தியினை குறிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பான உண்மை அம்பலமாக்கப்படும் எனவும், தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். ஈஸ்டர் தாக்குதலுக்கான உண்மையை கண்டுபிடிக்க, அரசாங்கமே தனக்கு எதிராக விசாரணைக்கு…