Category: பிரதான செய்தி
-

ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள நோய்.. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் வாஸ்குலர் பரிசோதனைக்கு (vascular test) உட்படுத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பரிசோதனைகளுக்கு பின்னர் ட்ரம்புக்கு பொதுவான நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், ட்ரம்ப் காலில் ஏற்பட்ட வீக்கத்தை ஆராய சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன்படி, மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.…
-

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. கன்னட மொழியில் முதன்முதலில் அறிமுகமான சரோஜா தேவி முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார். தொடர்ந்து எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தில் அறிமுகமானார், தொடர்ச்சியாக எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனுடன் ஜோடி சேர்ந்தார். இவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல் பொருந்தக்கூடியவர் சரோஜா தேவி. முக…
-

வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் 10 மாணவிகள் 9ஏ சித்தி பெற்று சாதனை
வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் 10 மாணவிகள் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். 2024ஆம் ஆண்டிற்கான கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ள முன்னனிப் பாடசாலைகளில் ஒன்றான வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில், 10 மாணவிகள் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். பிரசாந்தன் ஹரனி, சிவரூபன் மகிழிசை, சிவனேஸ்வரன் சிபிக்கா, அஜந்தன் வர்ணிகா, அஜித்குமார் ஹரணியா, சுவேந்திரன் தன்சிகா, தவசீலன் கபிஸா, தவபாலன் அர்ச்சனா, வோல்டர் விதுசாலினி, துதர்சன் பேரேழில் ஆகிய…
-

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 10 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 10 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. குறித்த பெறுபேற்றிலேயே விபுலானந்தா கல்லூரி மாணவர்களும் சாதனை படைத்துள்ளனர். அந்தவகையில், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் காண்டீபன் கிருஸ்சிககேசன், ஸ்கந்தராசர்மா கஜானன், குணதரசர்மா சருஜசர்மா, இராமகிருஸ்ணன் வோகித், சிவராசா தட்சாயினி, கந்தராசா டிஜானா, திலகநாதன் ஹரிணி, உதயதாசன் யதுசன், நிலாந்திரன் துபதாசன், யோகேஸ்வரன் ரஜீவ் ஆகிய 10 மாணவர்களும் 9 ஏ…
-

அரசாங்கம் அரசாங்கத்தையே விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் – ஜனாதிபதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பான உண்மையை கண்டறிய, அரசாங்கம் அரசாங்கத்தையே விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாய்கக தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் 50ம் ஆண்டு மத வாழ்வு பூர்த்தியினை குறிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பான உண்மை அம்பலமாக்கப்படும் எனவும், தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். ஈஸ்டர் தாக்குதலுக்கான உண்மையை கண்டுபிடிக்க, அரசாங்கமே தனக்கு எதிராக விசாரணைக்கு…
-

கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் ஒரு பார்சலிலிருந்து துப்பாக்கி
கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு பொதியில் தானியங்கி துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் அடங்கிய பொருட்களை கைப்பற்றியுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் இன்று (01.07.2025) நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் தெரிவித்துள்ளனர். இதற்கமைய டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள மத்திய தபால் நிலையத்தில் வைத்து சந்தேகத்திற்கிடமான பொதியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்படி கடந்த மார்ச் 19 ஆம் திகதி கட்டுநாயக்க விமான…
-

செம்மணி படுகொலை குறித்த ஐ.நா அதிகாரியின் அறிக்கை ஆரோக்கியமற்றது – அப்துல்லா மஹ்ரூப்
ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைகள் ஆணையாளர் வருகையின் போது நீண்டகாலமாக புரையோடி போய்க்கிடக்கின்ற செம்மணி படுகொலை சம்பந்தமாக தமிழ் தலைமைகள் விரிவாக பேசிய போதும் அவர் நாட்டை விட்டு செல்கின்ற போது சொல்லியிருக்கின்ற அறிக்கை அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை என முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “இஸ்ரேலிய கொடும்…
-

146 பயணிகளுடன் புறப்படவிருந்த விமானத்தில் தவிர்க்கப்பட்ட மற்றுமொரு பாரிய விபத்து!
சென்னையில் இருந்து தாய்லாந்து நோக்கிப் புறப்படவிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டதால் குறித்த விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பேங்கொக் நோக்கி 146 பயணிகளுடன், தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் புறப்பட ஆயத்தமாகிய நிலையில் விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையை விமானி கண்டறிந்ததால் குறித்த விமானம் இரத்து செய்யப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சினையை சரி…
-

மாந்திரீக தடை சட்டத்தை அமல்படுத்த ஐகோர்ட்டில் கேரள அரசு மறுப்பு
கொச்சி : ‘கேரளாவில், மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற நடவடிக்கைகளை தடைசெய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்த போவதில்லை’ என, உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில், மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற நடவடிக்கைகளால் தொடர் உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதை தடுக்கும் நோக்கில், ‘மாந்திரீகம், பில்லி, சூனியம் தடுப்பு மற்றும் ஒழிப்பு மசோதா’வை, சட்ட சீர்திருத்த கமிஷன், 2022ல் பரிந்துரைத்தது. இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது என கேரள அரசு பின்வாங்கியது. இது தொடர்பாக, யுக்திவாடி…
-

இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை
இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதல்களின் காரணமாக ஈரானில் சுமார் 610 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் சுகாதார அமைச்சு இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 13ம் திகதி முதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களின் காரணமாக 610 பேர் கொல்லப்பட்டதாகவும் இதில் 49 பெண்களும், 13 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல்களில் 4746 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் இதில் 185 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் தாக்குதல்களில் 5 சுகாதாரப்…