Category: இலங்கை செய்திகள்
-

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா இயற்கை எய்தினார்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று(27) காலை இயற்கை எய்தினார். அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்று(28)காலை அஞ்சலிக்காக கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் அன்னாரின் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு மாலை 4 மணிக்கு மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் தகனக்கிரியைகள் இடம்பெறவுள்ளது. வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு…
-

தென் அதிவேக வீதியில் கோர விபத்து: இரண்டு பெண்கள் பலி
தென் அதிவேக நெடுஞ்சாலையில் இன்று(26) பிற்பகல் நடந்த வாகன விபத்தில் இரண்டு பெண்கள் பலியாகியுள்ளதுடன் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்தளயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வானின் டயர், அங்குணகொலபெலஸ்ஸ பகுதியின்; 175வது கிலோமீட்டர் தூண் பகுதியில் வைத்து வெடித்தபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதனையடுத்து வாகனம் கவிழ்ந்து விபத்துள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் குறித்த சிற்றூர்தியில் ஆறு பேர் இருந்ததுள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இதுபோன்ற துயரங்களைத் தடுக்க…
-

சர்ச்சைக்குள்ளான ரணிலின் தீர்மானத்தை வரவேற்கும் அரசியல்வாதி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் சரியான தீர்மானமாகும். அரசியல்வாதியென்ற வகையில் நான் அதை ஏற்றுக்கொள்கின்றேன் என முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அன்றைய காலகட்டத்தில் நாடு ஸ்தம்பிதமடைந்திருந்தது. நாடாளுமன்றத்தை கைப்பற்றும் நோக்கில் போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்திருந்தனர். ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் விநியோகம் முழுவதும் தடைப்பட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் அத்தியாவசிய…
-

நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
பதில் பொலிஸ் மா அதிபரின் பெயரை குறிப்பிட்டு போலியான PDF கோப்பு தற்போது பரப்பப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மற்றும் வட்ஸ்அப் ஊடாக இந்த போலி கோப்பு அனுப்பப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த போலி மின்னஞ்சல்கள் judicial.gov-srilanka@execs.com polcermp@gmail.com andrep.atricia885@gmail.com ecowastaxs@gmail.com ccybermp@gmail.com vinicarvalh08@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. எனினும், அத்தகைய மின்னஞ்சல் முகவரிகள் மூலம் அனுப்பப்படும் செய்திகள் இலங்கை பொலிஸ் அல்லது பதில் பொலிஸ் மா அதிபர் அனுப்பும் செய்திகள்…
-

இளைஞர்களுக்கு பேராபத்தாக மாறியுள்ள கிறீம்கள் : வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் எட்டுக்கும் மேற்பட்ட வகையான சருமத்தை வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்கள் கிடைப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனை பாவிக்கும் பல இளைஞர்கள் புற்றுநோயிற்கு முகங்கொடுக்க வேண்டிய ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை முறையாக ஒழுங்குபடுத்த மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தவறியமையே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட தரத்திற்கமைய, பொருட்களில் அதிகபட்ச பாதரச அளவு ஒரு மில்லியனுக்கு ஒரு பங்கு என்றாலும், சந்தையில்…
-

நாடளாவிய ரீதியில் அதிரடி சோதனை நடவடிக்கை – ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒரே இரவில் கைது
நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் மற்றுமொரு விசேட சுற்றிவளைப்பு நேற்று மேற்கொள்ளப்பட்டது. தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார், சிறப்பு அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தினர் உட்பட 6500இற்கு மேற்பட்ட பாதுபாப்பு தரப்பினர் ஈடுபட்டனர். தேடுதல் நடவடிக்கையின் போது, 24,281 நபர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 10,175 வாகனங்கள் மற்றும்…
-

யாழில் கிறிஸ்தவ தேவாலயத்தில் அடாவடி.. NPP தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 8 பேர் அதிரடி கைது!
யாழ். மெரிஞ்சிமுனை – நாரயம்பதி மாதா கோயிலின் சுருவத்தை மதுபோதையில் உடைத்து சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் வேலணையை சேர்ந்த 8 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உள்ளடங்கலாக 8 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மெரிஞ்சிமுனை – நாரயம்பதி மாதா கோயிலின் மாதா சுருவத்தை மதுபோதையில் இருந்த 20 பேரடங்கிய கும்பல் ஒன்று உடைத்து சேதப்படுத்தியதாக ஊர்காவற்றுறை…
-

கனடாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டிற்குள் நுழைய முயன்றபோது, விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கனடாவின் ஒன்ராறியோவை சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. அவர் கனடாவிலிருந்து கட்டார், தோஹாவிற்கு போதைப்பொருள் கொண்டு வந்துள்ளார். அங்கிருந்து, அவர் கட்டார், எயபர்வேஸ் விமானமான QR-662 மூலம் கட்டுநாயக்க…
-

40 நாடுகளுக்கான விசா கட்டணங்கள் தொடர்பில் அரசாங்கம் அதிரடி தீர்மானம்
40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். நாட்டின் சுற்றுலாத் துறையை வளர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 91ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு 96வது இடத்தில் இருந்த இலங்கை கடவுச்சீட்டு 5 இடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளமை சிறம்பம்சமாகும். இவ்வாறானதொரு நிலையில், 40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி…
-

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்
அரசியல் கைதிகளின் விடுதலையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கணநாதன் உஷாந்தனால் கொண்டுவரப்பட்ட பிரேரணையானது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தனது பிரேரணை தொடர்பாக உறுப்பினர் சபையில் கருத்து தெரிவிக்கையில், மிக மோசமான துன்பியல்கள் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கறுப்பு ஜூலையை நினைவேந்தி வருகின்றோம். இவ் வலிமிகு காலத்தில் மிக நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் பிரேரணை ஒன்றை சபையில் சமர்ப்பிக்கிறேன். பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு…