Category: இலங்கை செய்திகள்

  • மழையை பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் பரீட்சைக்கு சென்ற மாணவர்கள்

    இந்த ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், மத்திய மலைநாட்டில் மோசமான காலநிலை நிலவி வருகின்ற போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு செல்வதை அவதானிக்க முடிந்தது. தமது பிள்ளைகளை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், அவர்களுக்கு உற்சாகமளித்து பரீட்சைக்கு அனுப்பி வைத்ததையும் காணக்கூடியதாக இருந்தது. இதேவேளை, பரீட்சை நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விசேட பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

  • “எங்கள் பூர்வீக காணிகள் எங்களுக்கே வேண்டும்” – பலாலி மக்கள் போராட்டம்

    வலிகாமம் வடக்கு, பலாலி பகுதியில் தமது பூர்வீக காணிகளில் மீள்குடியேற அனுமதிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று (09) 8ஆவது வாரமாகவும் தொடர் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பலாலி சந்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், நீண்டகாலமாக தமது காணிகள் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சொந்த நிலங்களுக்குத் திரும்ப முடியாத நிலை தொடர்வதாக மக்கள் தெரிவித்தனர். “எங்கள் காணிகள் எங்களுக்கே வேண்டும்”, “பூர்வீக நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும்”, “மக்களின் நிலங்களை சுரண்டுவதை நிறுத்த வேண்டும்” உள்ளிட்ட…

  • இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!

    தமிழர்களின் தொன்மைமிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் நோக்குடன், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா’ இடைநிறுத்தப்பட்டுள்ளது. பிரமாண்டமானமுறையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த உணவுத் திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நாளையும், நாளை மறுதினமும் நடைபெற இருந்த நிகழ்வுகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது. “உணவே மருந்து – மருந்தே உணவு” என்ற ஆரோக்கிய தத்துவத்தின்படி, 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகளுடன் இந்த மாபெரும் திருவிழா அண்மையில் கோலாகலமாகத்…

  • நாளை இடம்பெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

    இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (9) நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இம்முறை பரீட்சையில் மொத்தம் 294,089 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் 220,366 பேர் சிங்கள மொழியிலும், 73,723 பேர் தமிழ் மொழியிலும் தோற்றவுள்ளனர். குறித்த பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் கடந்த 5ஆம் திகதி நள்ளிரவுடன் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்,பரீட்சை முடியும் வரை அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்கள்…

  • மல்லிகைப்பூ தோட்ட அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை வைக்க முயற்சி!

    வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட மல்லிகைப்பூ தோட்டப் பகுதியில், மக்கள் நீண்டகாலமாக வழிபட்டு வரும் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு வெளியாட்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு சுமார் 10 மணியளவில், இவ்வாறு புத்தர் சிலையை வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தை கிராம மக்கள் அவதானித்ததையடுத்து, உடனடியாக ராகலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரின் உதவியுடன், புத்தர் சிலையை அங்கு நிறுவுவதற்காக…

  • சத்துருக்கொண்டான் படுகொலை முறைப்பாட்டாளரை சிஐடி அழைப்பது நியாயமற்றது: சாணக்கியன் எம்பி சாடல்!

    சத்துருக்கொண்டான் பகுதியில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடளித்த நபர் சி.ஐ.டி பிரிவின் 4 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்த படுகொலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் நியமிக்கப்பட்ட குழுவில் பெயர் குறிப்பிடப்பட்ட மூன்று இராணுவ தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் இதுவரையில் விசாரிக்கப்படவில்லை. முறைப்பாடளித்த நபரை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் விசாரணைக்கு அழைப்பது நியாயமற்றது. வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற பல படுகொலைகள் தொடர்பில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் என்னவென்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

  • யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவி நிரோஷினி மரணம்

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (06) இரவு உயிரிழந்துள்ளார். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது: குறித்த மாணவி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்தார். இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இம்மாணவி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அனைவர்…

  • மெகசின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதி ‘கொஸ் மல்லி’யின் பிரதான பாதாள உலக துப்பாக்கிதாரி ‘ஷெரஃப்தீன்’ என அடையாளம்

    மெகசின் சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த கைதி, பாதாள உலகக் குழுவின் முக்கிய நபரான ‘கொஸ் மல்லி’ என்பவரின் பிரதான ஒப்பந்த துப்பாக்கிதாரி  என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த கைதி ஹோமாகம, ரத்தொளுகம – கட்டுவன வீதியைச் சேர்ந்த மொஹமட் அஸ்மான் ஷெரஃப்தீன் எனப் பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு எல்லை மீறிச் சென்றதாலேயே இம்மோதல் வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த…

  • ஷானி அபேசேகர, பிரதிக் காவல்துறை மா அதிபராக தரமுயர்வு!

    குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பிரதி காவல்துறை மா அதிபராக தரமுயர்த்தப்பட்டுள்ளார். இந்தத் தரமுயர்வு 2020 ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. தொடர்புடைய தரமுயர்வு நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு, ஷானி அபேசேகரவை பிரதி காவல்துறை மா அதிபர் பதவிக்கு உயர்த்த தேசிய காவல்துறை ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் அபேசேகர, தனது சேவைக் காலத்தில்…

  • இலங்கை:வத்தளை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – துப்பாக்கிதாரி உள்ளிட்ட மூவர் கைது

    வத்தளை, கதிரான பகுதியில் கடந்த ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்ற பிறந்தநாள் விழாவின்போது ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், துப்பாக்கித்தாரி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு காவல்துறையினர் முன்னெடுத்து…