Author: yalarasan canada
-

மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் வெப்ப சுட்டெண் தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த அறிவிப்பானது நாளை( 03) முதல் நடைமுறைக்கு வரும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சில இடங்களில் வெப்ப சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘அதிக எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-

இலங்கையில் மக்களுக்கு மத்திய வங்கி மீண்டும் விடுத்துள்ள எச்சரிக்கை!
பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய வங்கி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி 9 நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட திட்டங்களை நடத்துவதாக மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.தடை செய்யப்பட்ட வகையான பிரமிட் திட்டமொன்றினை நேரடியாக அல்லது நேரடியற்று தொடங்குகின்ற, வழங்குகின்ற, ஊக்குவிக்கின்ற, விளம்பரப்படுத்துகின்ற, கொண்டு நடத்துகின்ற, நிதியளிக்கின்ற முகாமைத்துவம் செய்கின்ற அல்லது பணிக்கின்ற எவரேனும் ஆள் தண்டனைக்குரிய தவறொன்றிற்கான குற்றவாளியாதல் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-

வாகன இறக்குமதிக்கான அனுமதி! முதலில் இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்கள்!
வாகன இறக்குமதிக்கு அனுமதியளிக்கும் போது முதலாவது பொது போக்குவரத்து வாகனங்களுக்கே அனுமதியளிப்போம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், இலங்கையின் வாகன தேவைகளை நான்கு வகைகளாக பிரித்திருக்கின்றோம். முதலாவதாக பொது போக்குவரத்துக்கான வாகனங்கள், பேருந்து, லொறி போன்றவையைக் குறிக்கும். இரண்டாவது பொது தேவைக்காக மக்களினால் பயன்பபடுத்தப்படுகின்ற வாகனங்கள். உதாரணமாக மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி போன்றவற்றை குறிப்பிடலாம்.
-

எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – நாளை முதல் புதிய விலை!
லிற்றோ எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த குறைப்பு ஏற்படவுள்ளது. அதற்கமைய, புதிய விலைகள் நாளை காலை அறிவிக்கப்படும் லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,000 ரூபாவாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-

வவுனியாவில் பல லட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
வவுனியா(Vavuniya) உக்குளாங்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரிஸ்வி தலைமையிலான பொலிஸ் பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கையினை உக்குளாங்குளம் பகுதியில் முன்னெடுத்திருந்தனர். இதன் போது 50கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் செட்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 36வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
-

பொலிஸார் முன்னிலையில் பொது மக்களை அச்சுறுத்திய பிள்ளையான் கும்பல்!
மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட பண்ணையாளர்களிடம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தினப் பேரணி மோட்டார் சைக்கிள் அணியினர் அச்சுறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாதவனையில் நடைபெற்ற வீதியால் வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தினப் பேரணியில் வந்த ஆதரவாளர்களே இவ்வாறு நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதேவேளை பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த பொலிஸார், விசேட அதிரடிப் படையினருக்கு முன்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மோட்டார் சைக்கிள் அணியினர் நடந்து…
-

உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சைக்கு மொத்தம் 346,976 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 281445 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65531 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இதேவேளை சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கமைய,…
-

கனேடிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!
கனேடிய பொருளாதாரத்தில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த தகவலின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 வீதமாக அதிகரித்திருந்தது. மேலும், கடந்த பெப்ரவரி மாதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.2 வீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரியளவு மாற்றங்கள் பதிவாகாது என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் மொத்தமாக 20 துறைகளில் 12 துறைகளில் வளர்ச்சி பதிவாகியுள்ளதாக…
-

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்(Bandaranaike International Airport) கடமையில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கியொன்று செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று (30) காலை 10.25 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தில் விமானப்படை வீரரின் கையிலிருந்த T-56 ரக துப்பாக்கியே தவறுதலாக செயற்பட்டுள்ளதாகவும் இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
-

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அறிமுகமாகும் புதிய வசதி!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் தங்கக் கடையொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. விமான நிலையத்தில் தங்க வணிகத்தை புதிய வர்த்தக வாய்ப்பாக அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான முன்மொழிவுகளை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் ஸ்ரீலங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சமர்ப்பித்துள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.