Author: Six Side Media

  • கொழும்பில் இரவு விடுதியில் ஏற்பட்ட குழப்ப நிலை – வெளிநாட்டவர் கைது

    கொழும்பில் இரவு விடுதியில் ஏற்பட்ட குழப்ப நிலை – வெளிநாட்டவர் கைது

    கொழும்பு கோட்டையில் உள்ள டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள ஒரு இரவு விடுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதன் போது அங்கு ஒருவரை தாக்கியதற்காக இந்திய பிரஜை ஒருவரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​பாதிக்கப்பட்டவருக்கும் இந்தியருக்கும் இடையே ஏற்பட்ட பண விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய பிரஜை தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியரின் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் வத்தளையை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பாக கோட்டை பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட…

  • இணையவழி குற்றங்களில் ஈடுபட்ட 60 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    இணையவழி குற்றங்களில் ஈடுபட்ட 60 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    ”இரண்டு ஆண்டுகளில், இணைய வழி குற்றங்களில் ஈடுபட்ட, 60 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்,” என, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: தமிழகம் முழுதும் இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க, இரண்டு கட்டங்களாக, ‘ஆப்பரேஷன் திரை நீக்கு’ என்ற நடவடிக்கை வாயிலாக, 212 பேர் கைது செய்யப்ப ட்டனர். அதன்பின், தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு, வெளி மாநிலத்தவர்கள் மீது…

  • மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு: இலங்கை வெளிநாட்டு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு

    மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு: இலங்கை வெளிநாட்டு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு

    மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் குறித்த தகவல்களை, தமது சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு வழங்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்தகைய தகவல்களை சிறப்பு புலனாய்வுப் பிரிவில் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுக்கு 0112 882228 என்ற தொலைபேசி எண் மூலம் தெரிவிக்கலாம் என்று பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக பொலிஸ் பிரிவுக்கு ஏற்கனவே ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய புலனாய்வு அதிகாரிகள் விரிவான…

  • அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்

    அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்

    அமெரிக்காவில் கொரோனா வைரஸை போன்று புதிய உருமாறிய வடிவமான ‘ஸ்ட்ரேடஸ்’ வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கு, மருத்துவ ரீதியிலான பெயராக எக்ஸ்.எப்.ஜி, என கொடுக்கப்பட்டுள்ளதுடன் இது, ஒரு கலப்பின வைரஸ் ஆகும். உலக சுகாதார நிறுவனம் இதை, ‘ கண்காணிக்கப்பட வேண்டிய உருமாறிய வைரஸ்’ என வகைப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் முதன் முதலில் இவ்வகை வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் குறைவான நோய் பாதிப்பையே ஏற்படுத்தும் என்றும், ஒட்டுமொத்தமாக…

  • பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி

    பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்தியோர் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 8 பேர் பலியாகினர். பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் ஒரு பகுதியை மீட்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களும், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, அவாமி அதிரடி குழு என்ற அமைப்பின் தலைமையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாதில் மிகப்பெரிய…

  • ஆசிரிய சேவைக்கு ஆட்சேர்ப்பு குறித்து வெளியான தகவல்

    ஆசிரிய சேவைக்கு ஆட்சேர்ப்பு குறித்து வெளியான தகவல்

    பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவிருந்த பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகள் உள்ளிட்ட அரசுப் பணியில் உள்ள பட்டதாரி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் பல வழக்கு நடவடிக்கைகள்…

  • மீண்டும் கனடாவை சீண்டிய டொனால்ட் ட்ரம்ப்

    கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பேசியுள்ளார். கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டிய விடயத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பேசியுள்ளார். நேற்று அமெரிக்க இராணுவத் தலைவர்கள் முன் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அப்போது, அமெரிக்காவின் Golden Dome ஏவுகணை பாதுகாப்பு திட்டம்…

  • ஜப்பான் பாதுகாப்பு அமைச்சருடன் அநுர சந்திப்பு!

    ஜப்பான் பாதுகாப்பு அமைச்சருடன் அநுர சந்திப்பு!

    ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் டி.எம். நகதானியை சந்தித்துக் கலந்துரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. பாதுகாப்பு விடயங்களில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து வெகுவாக ஆராயப்பட்டது. இந்தச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட இலங்கைத் தூதுக் குழுவினர் கலந்துகொண்டனர்.

  • வரிகள் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

    வரிகள் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

    அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 வீத வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் இட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், குறித்த வரிக்கட்டணங்கள் எப்போது அல்லது எப்படி விதிக்கப்படும் என்பது குறிப்பிடப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ட்ரம்ப், இந்த வரிகளை விதித்தால், இவ்வாறான வரிகள் விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்படுகின்றது.

  • விஜய் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு

    விஜய் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு

    கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில் நடந்தது ஈடு செய்ய முடியாத இழப்பு என அக்கட்சியின் தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் சற்று முன்னர் எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில், “கரூரில் நேற்று நடந்ததை நினைத்துப் பார்க்கும்போது, ​​என் இதயமும் மனமும் ஆழ்ந்த கனத்தால் மூழ்கடிக்கப்படுகின்றன. நம் அன்புக்குரியவர்களை இழந்த மிகுந்த துயரத்தின் மத்தியில், என் இதயம் தாங்கும் வலியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன். என் கண்களும் மனமும் துக்கத்தால் மேகமூட்டமாக…