Tag: #canadanews#woldnews#eelamurasu
-
கனடாவில் மற்றுமொரு உணவு பொருள் தொடர்பில் எச்சரிக்கை
கனடாவில் குளிரூட்டப்பட்ட வொபல் உணவு பண்டம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவு பண்டத்தில் லிஸ்திரியா தாக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் குறித்த உணவு பண்டத்தை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட வொபல்ஸ் வகைகள் ஏற்கனவே இவ்வாறு சந்தையில் இருந்து மீள பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒரு பின்னணியில் 365 வோல்புட்ஸ் என்ற பண்டக்குறியை கொண்ட வொபல்ஸ் வகைகளையும் சந்தையிலிருந்து மீள பெற்றுக்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய…
-
கனடாவில் இந்த வாகனங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவில் போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் ஹைபிரிட் ரக வாகனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஹைபிரிட் ரக வாகனங்கள் சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹொண்டா நிறுவனத்திற்கு சொந்தமான ஹைபிரிட்டாக வாகனங்கள் குறித்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 61000 ஹோண்டா ஹைபிரிட் ரக வாகனங்கள் இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ளது உயர் அழுத்தம் காரணமாக எரிபொருள் தாங்கியில் ஏற்பட்ட கோளாரினால் எரிபொருள் கசிவடைந்து தீ பற்றி சொல்லக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால்…
-
கனடாவில் வேலைவாய்ப்பு: பராமரிப்பு பணியாளர்களுக்கு அதிக தேவை
கனடா உலகம் முழுவதிலும் இருந்து பராமரிப்பாளர் (Caregivers) பணிகளுக்கான திறமையான நபர்களை அழைக்கிறது. பராமரிப்பாளர் பணியை சமூகத்திற்கு பயனுள்ள தொழில்முறையாக கருதுமாறு கனடா ஊக்குவிக்கிறது. விசா ஸ்பான்சர் ஜாப்ஸ் இணையதளத்தின் தகவல்படி, கனடாவின் பல பராமரிப்பாளர் வேலைவாய்ப்புகள் விசா ஸ்பான்சர்ஷிப் வாய்ப்புகளுடன் வருகிறது. இதன் மூலம் சர்வதேச விண்ணப்பதாரர்கள் எளிதில் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைகள் தேவையுடையோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கனடா திட்டமிட்டுள்ளது. வயது: 22 வயதிற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம். – கல்வி மற்றும் அனுபவம்: குறிப்பிட்ட…
-
கனடிய விமான பயணிகளுக்கு நற்செய்தி
கனடிய விமான பயணிகளுக்கு சார்பான வகையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விமான பயணங்கள் தாமதமாவது மற்றும் பயண பொதிகள் சேதமடைதல் ஆகியன தொடர்பில் பயணிகள் தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு சாதக தீர்ப்பு வழங்கியுள்ளது. சில விமான சேவை நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தாக்கல் செய்த மேன்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளு கனடிய விமான பயணிகளுக்கு சார்பான வகையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விமான பயணங்கள் தாமதமாவது…
-
கனடாவில் பயங்கர சம்பவம்… பரிதாபமாக உயிரிழந்த பிரான்ஸை சேர்ந்த தாய் – மகள்!
கனடாவின் மொன்றியாலில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவத்தில் தாய் ஒருவரும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸைச் சேர்ந்த பெண்ணும் அவரது ஏழு வயது மகளும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பில் மொன்றியால் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 43 வயதான லெனோர் கிராயாடி மற்றும் பரன் டிரைன் கிராயாடி ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்த தீ விபத்து சம்பவம்…
-
கனடிய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி
கனடாவின் லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. சிறுபான்மை அரசாங்கமான லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக பியே பொலியேவின் தலைமையிலான கான்சர்வேட்டிவ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பித்தது. எனினும் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நிபந்தனை அடிப்படையில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக பிளாக் கியூபிகோ கட்சி அறிவித்துள்ளது. தங்களது நிபந்தனைகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவேற்ற தவறினால் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கப்படும் என பிளாக்…
-
கனடா அமைச்சரவையில் இடம்பிடித்த இரு தமிழர்கள்!
கனடா அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இரு தமிழர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர். அந்தவகையில் , போக்குவரத்து துறை அமைச்சராக அனிதா ஆனந்தும் , போக்குவரத்து துணை அமைச்சராக அருண் தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் நாயகத்தின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் அனிதா ஆனந்த் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார். அதேவேளை அமைச்சரவையில் இருந்து போக்குவரத்து அமைச்சர் Pablo Rodriguez விலகிய நிலையில் புதிய அமைச்சராக அனிதா ஆனந்த் பதவியேற்றுள்ளார். திறைசேரி வாரியத் தலைவராக இருந்த அனிதா ஆனந்திற்கு போக்குவரத்து அமைச்சு…
-
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் நான்காவது இடத்தில் கனடா
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து சறுக்கிய கனடா, இந்த ஆண்டு, நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. Us wold & repport என்னும் அமைப்பு ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுவருகிறது. பட்டியலில் கனடா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஜப்பானும், மூன்றாவது இடத்தை அமெரிக்காவும் பிடித்துள்ளன. விடயம் என்னவென்றால், கனடா இதற்கு முன் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது, தற்போது நான்காவது…
-
கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை
கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படும் என எதிர்க் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் கனடிய நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என பொலியேவ் தெரிவித்துள்ளார். லிபரல் கட்சிக்கு ஆதரவு வழங்கி வந்த என்.டி.பி கட்சி ஆதரவு வழங்குவதை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் லிபரல் அரசாங்கம்…
-
ஜனாதிபதி தேர்தலில் தீவிரமாகும் சர்வதேசத்தின் பார்வை
ஜனாதிபதி தேர்தலில் தீவிரமாகும் சர்வதேசத்தின் பார்வை இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், சர்வதேசத்தின் அவதானம் இலங்கை பக்கம் திரும்பியுள்ளது. இந்நிலையில் சர்வதேச நாடுகள் பல ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தமது ஆதவினை வெளியிட்டு வருவதுடன், இந்தியா நேரடியாக களமிறங்கியுள்ளது. தென்னிலங்கை அரசியல் இவ்வாறு சூடுபிடித்துள்ள நிலையில் மறுபக்கம் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளை…