Tag: #breakingnews
-

முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருவர் கைது!
முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநாகல் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள கூலி இராணுவப் படை முகாம்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்களை கடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசேட அறிவிப்பு!
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி தேர்தல் குறித்த வேட்பு மனுக்கள் உரிய காலப்பகுதியில் அழைக்கப்படும் என அந்த ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
-

இந்தாண்டில் மாத்திரம் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் – 27 பேர் உயிரிழப்பு!
2024ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும், 12 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கி சூட்டுகளில் பெரும்பாலானவை பாதாள…
-

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அவதூறு பரப்பியதாக இளைஞனுக்கு எதிராக முறைப்பாடு!
சமூக வலைத்தளங்களில் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் அவதூறு பரப்பிய நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் ஒருவர் நோயாளிகளிடம் மனிதாபிமானம் இல்லாதது நடந்து கொண்டதாக சில நாட்களுக்கு முன்பாக பேஸ்புக், ரிக்ரோக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நபர் ஒருவரின் காணொளி பகிரப்பட்டு வந்தது. காணொளியில், போதனா வைத்தியசாலை தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்த நபர் சுகாதார அமைச்சின்…
-

மகாவலி எல் வலயம் என்பது தமிழர்களுக்கான மரண பொறி!
மகாவலி எல் வலய திட்டமானது தமிழர்களுக்கான மரண பொறி ஆகும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். முல்லைத்தீவு சிலாவத்துறை தெற்கு, தியகு நகர் கிராம மக்கள் தங்கள் பிரச்சனைகள் தொடர்பில் ஆளுநரிடம் இன்றைய தினம் மகஜர் கையளித்தனர். அப்பகுதி மக்களை குடியேற்றம் செய்து 50 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.தற்போது அது பெருத்த கிரம்மாக மாறியுள்ளது. அந்த காணி ஒரு…
-

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை யாழ்ப்பாணத்தில் ஈடு வைத்த நபர் விளக்கமறியலில்!
வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியான முறையில் உள்நாட்டில் ஈடு வைத்து பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விலகம்மாறியலில் வைக்கப்பட்டுள்ளார். புலம்பெயர் நாட்டில் வாழும் நபர் ஒருவர் , யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியின் உறுதியை பதிவு ஒன்றுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரிடம் கையளித்துள்ளனர். குறித்த நபர் அக்காணி உறுதி பத்திரத்தை உள்ளூரில் நபர் ஒருவரிடம் 12 இலட்ச ரூபாய்க்கு ஈடு வைத்து பணம் பெற்றுள்ளார். இது தொடர்பில் வெளிநாட்டில் வசிக்கும்…
-

யாழில். வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா செடி வளர்த்த நபரொருவர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
-

மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய வேட்பாளர் இங்கு இல்லை!
69 லட்சம் மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய வேட்பாளர் எவரும் இங்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 69 இலட்சம் மக்களின் வாக்குப் பெரும்பான்மையில் கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானார். நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகவே 69 லட்சம் வாக்குகள் கிடைத்தது. இன்று இந்த நாட்டில் நல்லாட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ரணில் – சஜித்- அநுர ஆகிய மூவர் களமிறங்க காத்திருக்கின்றனர். 69 லட்சம் மக்களின் வாக்குப்பெரும்பான்மையில் ஆட்சிபீடமேறிய…
-

இளைஞனை பொலிஸார் உதைந்து விழுத்தியதில் இளைஞன் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை பொலிஸார் உதைந்து விழுத்தியதில், இளைஞன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த 41 வயதுடைய செல்வநாயகம் பிரதீபன் என்பவரே உயிரிழந்துள்ளார். பலாலி வீதியில் கடமையில் இருந்த பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை மறித்த போது, இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது பயணித்துள்ளார். அதனை அடுத்து, பொலிஸ் உத்தியோகஸ்தரும் இளைஞனை தமது மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று, சுன்னாகம்…
-

ஒரே நாளில் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 11 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட 20 குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஒரே நாளில் குறித்த குழுக்களைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை நேற்று (08.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் குழுக்களோடு தொடர்புகளைப் பேணினர் என்று கூறப்படும் மேலும் 16 சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி கைது செய்யப்பட்டுள்ள 11 பேரில் மேல் மாகாணத்தின் (Western Province) தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்…