Category: இலங்கை செய்திகள்
-
யாழ் போதனா வைத்தியசாலையில் ரமேஷ் பத்திரணவின் கலந்துரையாடலில் ஒருவர் அதிரடியாக கைது
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடலில் குழப்பத்தை ஏற்படுத்திய நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், கைது செய்யப்பட்ட நபர் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரியே வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று(17.07.2024) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு…
-
முகநூல் நேரலைக்கு தடை; ஐந்து வழக்குகளில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள் அதிரடியான உத்தரவு
முகநூல் நேரலைக்கு தடை; ஐந்து வழக்குகளில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடியான உத்தரவு வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஐந்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அலுவலகங்களுக்குள் நுழைய தடை விதித்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், வைத்தியசாலை விடுதியில் தங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, சமூக ஊடகங்களில் ஏனைய வைத்தியர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களிற்கான ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிஸில் முன்னிலையாகி வாக்குமூலம்…
-
யாழில் கோவில் நகைகள் மாயமாம் போராட்டத்தில் குதித்த மக்கள்
யாழில் மாயமான கோவில் நகைகள்: போராட்டத்தில் குதித்த மக்கள் யாழ். ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்தின் சுமார் 60 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புளியங்கூடல் சந்தியில் இருந்து ஆரம்பமான குறித்த மக்கள் பேரணி, பிரதான வழியாக இன்று (12.07.2024) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் முத்து விநாயகர் ஆலயத்தை சென்றடைந்தது. ஆலயத்தின் முகவாயிலில்,…
-
அர்ச்சுனா தொடர்பில் கொழும்பு சென்ற பிழையான தகவல்!
அர்ச்சுனா தொடர்பில் கொழும்பு சென்ற பிழையான தகவல்! யாழ்ப்பாணத்தில் நடைபெறும் விடயங்கள் கொழும்பிலுள்ள மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு பிழையாக திரிபுப் படுத்தப்பட்டு சொல்லப்படுவதாக வைத்தியர் அர்ச்சுனா(Dr.Archuna) தெரிவித்துள்ளார். மேலும், வடக்கு மாகாணத்தில் பணிபுரியும் வைத்தியர்களான வைத்தியர் சமன் பத்திரணவாக இருக்கட்டும், வைத்தியர் கேதீஸ்வரனாக இருக்கட்டும் வடக்கில் தற்போது நடைபெறும் விடயங்களை பிழையாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். எனது பக்கம் உள்ள பிரச்சினை கொழும்பிலுள்ள அதிகாரிகளுக்கு தெரியாது. முக்கியமாக யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சினை தொடர்பாக இவர்களுக்கு தெளிவான விளக்கம் இல்லை.…
-
திருமுறிகண்டியில் கோர விபத்து – ஒருவர் பலி
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியில் திருமுறிகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடு ஒன்றில் இருந்து வருகை தந்தவர்களை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து பயணித்துக்கொண்டிருந்த தனியார் வாகனம் ஒன்று ஏ9 வீதியின் 241 ஆவது கிலோ மீற்றருக்கும் 242 ஆவது கிலோ மீற்றருக்கும் இடைப்பட்ட பகுதியில் முன்னே சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றுடன்…
-
சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படும் வைத்தியர் அர்ச்சுனா! வெளியகிய குடும்பப் பின்னணி
இராமநாதன் அர்ச்சுனா.. அண்மைய நாட்களாக ஊடகங்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் பெயர். ஒரு வைத்தியரான இவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக பொறுப்பேற்ற ஒரு சில நாட்களில் வைத்தியசாலை நிர்வாகத்தில் நடந்த ஊழல்கள், குறைபாடுகள் போன்றவற்றை அம்பலப்படுத்தியதன் காரணமாக ஆதரவானதும், எதிரானதுமான பல விமர்சனங்களை சந்தித்தவர்.தமிழனின் துனிச்சலை நிரூபித்தவர் அர்ச்சுனா வைத்தியர் அர்ச்சுனாவின் வெளிப்படுத்தல்களின் பின்னர் குறித்த வைத்தியசாலை தொடர்பில் பொதுமக்களும் கூட பல குறைபாடுகளை வெளியிட்டிருந்தனர். வைத்தியசாலையில்…
-
சாவகச்சேரி வைத்தியசாலையில் நடக்கும் பகல் கொள்ளை ! சிக்கியது மற்றொரு பெரும் ஆதாரம்
யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குருதி பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ள நிலையில் தன்னை வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலையில் குருதி பரிசோதனை செய்யச் சொன்னதாக பாதிக்கப்பட்ட நோயளியொருவர் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக நேற்று முன்தினம் தென்மராட்சி மக்களால் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் அவர் இதனை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். இதன்போது பாதிக்கப்பட்ட நோயாளி அதிக பணம் செலவளித்து குறித்த பரிசோதனையினை மேற்கொண்டதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
-
சாவகச்சேரி வைத்தியாலை சர்ச்சை தொடர்பில் அமைச்சரவை கலந்துரையாடல்! அதிரடியாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வினைத் திறனுடன் இயங்குவதை விரும்பாத சக்திகளே கடந்த சில தினங்களாக அங்கு நிலவிய அசாதாரண சூழலுக்கும், மக்கள் போராட்டத்திற்கும் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (09.07.2024) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு…
-
நான் இறந்தால் இப்படிச் செய்யுங்கள்! வைத்தியர் அர்ச்சுனாவின் மற்றொரு அதிர்ச்சி தகவல்
நான் இறந்தால் இப்படிச் செய்யுங்கள்! வைத்தியர் அர்ச்சுனாவின் மற்றொரு அதிர்ச்சி தகவல் நான் இறந்தால் கூட வைத்தியசாலையில் எனது விடுதியின் நடுவில் வைத்து எரிக்குமாறு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸார் என்னிடம் யார் உங்களுக்கு பாதுகாப்பு என வினவிய போது, எனது தமிழ் சமூகமும் என்னை…
-
கரையொதுங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (08) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். குறித்த கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொதுமக்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர். எவ்வாறாயினும், சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு…