Category: இலங்கை செய்திகள்

  • தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.. பிரபு எம்பி தெரிவிப்பு

    தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.. பிரபு எம்பி தெரிவிப்பு

    தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக தீர்வு வெகு விரைவில் எட்டப்படும் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற இருக்கும் வீதி அபிவிருத்தி தொடர்பாக நேற்று (19) நேரில் சென்று வீதிகளை பார்வையிடும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர், “தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை பொறுப்பேற்றதன் பின்னர் மிகவும் நேர்த்தியாகவும் நீதியான முறையில் சட்ட ஆட்சியை நடைமுறைப்படுத்தும்…

  • முல்லைத்தீவில் நெற்செய்கைக்கு இடையூறு இல்லை – ரவிகரன் எம்.பி உறுதி

    முல்லைத்தீவில் நெற்செய்கைக்கு இடையூறு இல்லை – ரவிகரன் எம்.பி உறுதி

    முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நெற்செய்கை நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தக் கூடாதென மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். குறித்த எல்லைக்கிராம மக்களின் அழைப்பை ஏற்று அங்கு கள விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த தமிழ்மக்களின்…

  • தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு

    தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு

    தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக அரசாங்கம் “தொடர்ச்சியான பழிவாங்கல்” செய்வதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து தொழில்துறையினரிடையே கோபம் அதிகரித்து வருவதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரத்தின் போது தனியார் பேருந்துகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், பிரச்சாரத்தை ஆதரிப்பதற்காக குறிப்பிடத்தக்க நிதி பங்களிப்புகள் வழங்கப்பட்டதாகவும் கூறினார். “நாட்டிலிருந்து தனியார் பேருந்து கலாச்சாரத்தை அகற்ற முயற்சிப்பது நெருப்புடன் விளையாடுவது போன்றது”…

  • 2025 முதல் பாதியில் 18 பில்லியன் இலாபம் ஈட்டிய பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

    2025 முதல் பாதியில் 18 பில்லியன் இலாபம் ஈட்டிய பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

    2025ஆம் ஆண்டின் முதல் பாதியில், 18 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. பெட்ரோலியத் துறையை மேலும் மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை ஆரம்பிக்க இந்த இலாபம் பயன்படுத்தப்படுகிறது என்று கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமார கூறியுள்ளார். எரிபொருள் கட்டமைப்புக்களை மேம்படுத்துதல் மற்றும் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை மையப்படுத்தி, முத்துராஜவெல முனையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வரை மேற்கொள்ளப்படும் விமான எரிபொருள் குழாய் அமைக்கும் திட்டங்களையும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

  • காசா இனப்படுகொலையாளிகளுடன் எங்களுக்கு தொடர்பில்லை.. சஜித் திட்டவட்டம்

    காசா இனப்படுகொலையாளிகளுடன் எங்களுக்கு தொடர்பில்லை.. சஜித் திட்டவட்டம்

    காசாவில் இனப்படுகொலையில் ஈடுபடும் தரப்புடன் எங்களுக்கு நட்புறவு கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – இலங்கை நட்புறவு சங்கத்தைக் கட்டியெழுப்புவதற்குரிய அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்ஹ விடுத்திருந்தார். இது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியது. பின்னர் அவர் மன்னிப்புக் கோரி, அதற்குரிய முயற்சியை கைவிட்டார். இந்நிலையிலேயே சஜித் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக நாம் முன்னிற்கின்றோம். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் என்பன…

  • இலங்கையில் மனித உரிமை குறித்து கவலை எழுப்ப அவசியம் இல்லை: ரஷ்யா தெரிவிப்பு

    இலங்கையில் மனித உரிமை குறித்து கவலை எழுப்ப அவசியம் இல்லை: ரஷ்யா தெரிவிப்பு

    இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்து கவலைகளை எழுப்ப எந்த காரணமும் இல்லை என்று ரஷ்யா கூறியுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் பரஸ்பர மரியாதைக்குரிய ஒத்துழைப்பைக் கட்டியெழுப்ப இலங்கை அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இலங்கை குறித்த ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்யா இந்தக்கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர், இலங்கைக்கு அண்மையில் வந்து சென்றமை, இதற்கான தெளிவான உதாரணம் என்றும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.…

  • மன்னார் பொது மருத்துவமனைக்கு 600 மில்லியன் மானியம் வழங்கும் இந்தியா

    மன்னார் பொது மருத்துவமனைக்கு 600 மில்லியன் மானியம் வழங்கும் இந்தியா

    மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்காக இந்தியா, இலங்கை ரூபாயில் 600 மில்லியன்களை மானியமாக வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செப்டம்பர் 9 ஆம் திகதி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர்; அனில் ஜாசிங்க ஆகியோரால் கையெழுத்தானது. இந்த கையெழுத்து நிகழ்வில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கலந்து கொண்டார். இந்த உதவியின் ஊடாக இரண்டு மாடி யுஸ்ருன் பிரிவின்…

  • வெளிவிவகார அமைச்சர் ஜெனீவா பயணம்

    வெளிவிவகார அமைச்சர் ஜெனீவா பயணம்

    ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று(07) காலை ஜெனீவாவுக்கு விமானம் மூலம் பயணமாகின்றார். அமைச்சருடன் ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தயானி மெண்டிஸும் செல்கின்றார். ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதில், மதியம் ஒரு மணியளவில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றுவார் என்றும் தெரிய வந்துள்ளது.

  • எல்ல பேருந்து சாரதியின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு

    எல்ல பேருந்து சாரதியின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு

    எல்ல பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்து ஓட்டுனரின் இரத்த மாதிரிகள், பரிசோதனைக்காக அரசு பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, குறித்த இரத்த மாதிரிகள் இன்றையதினம்(07.09.2025) மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட உள்ளது. விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநர், போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தாரா என்பதை கண்டுபிடிப்பதற்காகவே இந்த இரத்தப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இராவண எல்ல வனப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை(04) ஆயிரம் அடி பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்தில் இருந்த 34 பேரில்15 பேர் உயிரிழந்திருந்தனர். மேலும், 18 பேர் காயமடைந்ததாகவும்…

  • எல்ல விபத்தின் எதிரொலி.. நாளை முதல் கடுமையான சட்டம் நடைமுறைக்கு!

    எல்ல விபத்தின் எதிரொலி.. நாளை முதல் கடுமையான சட்டம் நடைமுறைக்கு!

    ஆபத்தான வகையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரியந்த குணசேன தெரிவித்துள்ளார். பல்வேறு ஒலிகளுடன், பல வண்ணங்களில் நின்று நின்று ஒளிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன தமது பேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வியாழக்கிழமை எல்ல – வெல்லவாய வீதியின் 24ஆவது மைல்கல் அருகே எதிரே வந்த சொகுசு ஜீப்பின்…