Category: இலங்கை செய்திகள்
-
நாமலால் நிராகரிக்கபட்ட மகிந்தவின் அழைப்பு!
மொட்டுக் கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் இணைந்து செயற்பட மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்த நிலையில், அது தொடர்பில் நாமல் ராஜபக்ச மறுப்புத் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவுப் போசண விருந்தொன்று நடைபெற்றிருந்தது. இந்த வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியின் முக்கிய அரசியல்வாதிகள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மொட்டுக் கட்சியில் இருந்து விலகி,கடந்த காலங்களில்…
-
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்-பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு-கனிய மணல் அகழ்வுக்கு பொது அமைப்புகள் கடும் எதிர்ப்பு
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் பிரதியமைச்சரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன்,காதர் மஸ்தான், து.ரவிகரன், பா. சத்தியலிங்கம்.,மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன், முத்து முஹமட் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பிரதேச செயலாளர்கள்,அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள், பொலிஸ்…
-
மிக மோசமான இடத்தைப் பிடித்துள்ள இலங்கை ரூபா
இலங்கை ரூபாய் மிகவும் மோசமாகச் செயற்படும் வளர்ந்து வரும் சந்தை நாணயமாகக் காணப்பட்டதாக ப்ளூம்பெர்க் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டில் முதலிடத்தைப் பெற்ற பின்னர், ஜனவரி மாதம் நான்காவது வாரத்தின் இறுதியில் இந்த நிலைமை பதிவாகியுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதியின் இறுதியில் ரூபாய் 1.72% எதிர்மறை நிலையை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், அடுத்த மோசமான செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக அர்ஜென்டினாவின் பெசோ…
-
அநுர அரசினால் ஏற்படும் நெருக்கடி! மந்திராலோசனையில் மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சிலிண்டர் சின்னத்தில் ஆதரித்த உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர். கலந்துரையாடலுக்கு முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல் நலனுக்காக பிரித் ஓதும் நிகழ்வும்…
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. 5 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் விரிவுரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர்களின் ஒழுக்கக்கேடான செயல்களைத் தடுக்க பல்கலைக்கழக நிர்வாகம் முறையாகத் தலையிடத் தவறியதே இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
-
யோஷிதவின் விசாரணையில் அம்பலமான தகவல்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பல தனிப்பட்ட தகவல்கள் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது வெளிப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரத்மலானை சிறிமல் உயன பகுதியில் 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வாங்கியது தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். ஜனவரி 25 ஆம் திகதி பெலியத்த பகுதியில் கைது செய்யப்பட்ட பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மேலும்,…
-
யோஷிதவை துரத்திச் சென்ற பொலிஸார்! நீதிமன்ற வாயிலில் வைத்து நாமல் கடும் சீற்றம்
தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் நாமல் ராஜபக்சவின் சகோதரர் யோஷித ராஜபக்ச அண்மையில் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்னும் இரண்டு வாரத்தில் நாமல் கைது! வெளியான மகிந்த தரப்பு தகவல் இன்னும் இரண்டு வாரத்தில் நாமல் கைது! வெளியான மகிந்த தரப்பு தகவல் பழிவாங்க முயற்சிக்கும் அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம்…
-
அடுத்த கைது நடவடிக்கைக்கு தயாராகும் அநுர தரப்பு
எதிர்வரும் வாரம் இரண்டு பேர் கைது செய்யப்படுவார்கள் என அரசாங்கம் கூறியுள்ளதாகவும், தற்போது கைதுகள் தொடர்பில் அரசாங்கமே தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார் டி. வி.சானக குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், தேசிய மக்கள் சக்தி தரப்பில் இருந்த இரண்டு பேர் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பொலிஸில் பணியாற்றும்போது, நியாயமான விசாரணையை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்சவின் நலனை விசாரிக்க சி.ஐ.டி வளாகத்திற்குச் சென்றபோது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு…
-
யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியின் அதிரடி முடிவு : அதிர்ச்சியில் பலர்
யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியின் அதிரடி முடிவு : அதிர்ச்சியில் பலர் யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று (25) நடைபெற்ற பேரவைக் கூட்டத்தினை தொடர்ந்து கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் தன்னுடைய பதவி விலகியுள்ளார். மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைகளால் யாழ்.பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகளை தட்டிக் கேட்டமை, மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சீரிய முடிவுகளை எடுப்பதற்கு பல்கலைக்கழக பேரவை ஒத்துழைப்பு வழங்காமை போன்ற காரணங்களால் அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில்…
-
அர்ச்சுனாவைப் பார்த்து அஞ்சுகிறதா அநுர அரசு! மறுத்துப் பேச ஏன் தாமதம்
அர்ச்சுனாவைப் பார்த்து அஞ்சுகிறதா அநுர அரசு! மறுத்துப் பேச ஏன் தாமதம் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் சரியானதா பிழையானதா என தெரியவில்லை ஆனால் தைரியமாக முன்வந்து பேசுகின்றார். கேள்வி கேட்கின்றார். அவரது கேள்விக்கு முதலில் பதில் வழங்க முடியாமல் ஆட்சியாளர்கள் திணறுகிறார்கள் என சிவில் சமூக செயற்பாட்டாளர் ஷிராஸ் யூனுஸ் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களில்…