மக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சி – சவூதிக்கு ஆதரவாக பாகிஸ்தான் உறுதி

இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து, சவூதி அரேபியா மற்றும் துருக்கி உடன் கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தக் கடமையை நிறைவேற்ற தயார் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீது நேற்று (16) தாக்குதல் நடத்த ஏவப்பட்ட ட்ரோன்களை இடைமறித்து தகர்த்ததாகவும், இதற்கு யேமனின் ஹௌதி அமைப்பினர்கள்தான் காரணம் எனவும் சவூதி பாதுகாப்புப் படை குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஹௌதி படை மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மோதல்கள் பரவுவதைத் தடுப்பதற்கும், மக்கா பாதுகாப்பு ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பாகிஸ்தான் அரசு தயார்நிலையில் இருப்பதாக, பாகிஸ்தானிய பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் இன்று கூறியுள்ளார்.

இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

“ஒருவேளை மக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதைப் பாதுகாப்பதற்கு எந்தவொரு ஒப்பந்தமும் தேவையில்லை. மக்கா ஒப்பந்தம் எங்களுக்கும் பொருந்தும் அந்தக் கடமையை நாங்கள் நிறைவேற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈரான் மீதான போரில், அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படும் சவூதி அரேபியாவுக்கு எதிராக ஹௌதி படை நடவடிக்கைகள் மேற்கொண்டு யேமனின் முக்கிய தளங்களைக் கைப்பற்றி வருகின்றது.

இத்துடன், கடந்த ஓகஸ்ட் 7 ஆம் திகதி சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன்படி, ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்பதால் ஹௌதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *