Day: May 10, 2025
-
உக்ரேன் மோதல்: இருளில் தெரியும் ஒளிக்கீற்று
பதவியேற்றதும் 24 மணி நேரத்தில் உக்ரேன் போர் முடிவுக்கு வரும் என அறிவித்த ட்ரம்பினால் 24 நாட்களில் கூட போரை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ரஷ்ய-உக்ரேன் மோதலில் ஒரு திருப்பமாக போர் நிறுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான திடமான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் வாக்குறுதிகளுள் ஒன்றான, ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போர் நிறுத்தமானது தான் எதிர்பார்த்ததைப் போன்று இலகுவான ஒரு விடயமல்ல என்பதை பதவியில்…
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முடிவுகள் குறித்த ஒரு ஆய்வு!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முடிவுகள்,அதிகாரப் பகிர்வு மற்றும் சமரசப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒரு சூழலை உருவாக்கக்கூடும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முடிவுகள் குறித்த ஒரு ஆய்வு! I. 2025 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், நாட்டின் அரசியல் களத்தில் முக்கியமான மாற்றங்களையும் போக்குகளையும் வெளிப்படுத்தியுள்ளன. இத்தேர்தல் முடிவுகள், தமிழ்…
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைவராக வருவாரா?
இலங்கை தமிழ் அரசியல் களத்தில் தலைமைத்துவம் தொடர்பான அக்கறைகள் அண்மைக்காலமாக உத்வேகம் பெறும் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருக்கிறது. தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் யார் எதிர்கால தமிழ் அரசியல் தலைவராக மேன்மைப்படுத்தக்கூடியவராக இருப்பார் என்பது உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு விவாதத்துக்குரிய ஒரு விடயமாக இருக்கும். வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ்வேறு கட்டங்களில் செல்வாக்குமிக்க தலைவர்கள் வெளிக்கிளம்பி ஆதிக்கம் செய்த தோற்றப்பாடு இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றின் எடுத்துக்காட்டான ஒரு அம்சமாகும். பொன்னம்பலம் சகோதரர்கள் இராமநாதனும் அருணாச்சலமும், அருணாச்சலம்…
-
புதிய திருத்தந்தை பதின்நான்காம் லியோ (14ம் சிங்கராயர்).
புதிய திருத்தந்தை பதின்நான்காம் லியோ அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் பிறந்து அகஸ்தீன் சபையில் சேர்ந்து …தென்னமெரிக்க ஆயர்களுடைய தலைமை ஆயராக பணியாற்றி, 2023 செப்டம்பர் மாதம் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக தகுதி உயர்த்தப்பட்ட கருதினால் மேதகு ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் அவர்கள், திருத்தந்தை 14 ஆம் லியோ(14ம் சிங்கராயர்)என்ற பெயர் தேர்வோடு திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார் …புதிய திருத்தந்தைக்காக நாம் ஜெபிப்போம்.
-
டொரண்டோவுக்கு வந்த விமானத்தில் தட்டம்மை நோயாளி
அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உடனடி மருத்துவ ஆலோசனை தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் டொரண்டோவுக்கு வந்த ஏர் கனடா விமானத்தில் ஒரு தட்டம்மை நோயாளி கண்டறியப்பட்டதைக் கருத்தில் கொண்டு, பீல் பொது சுகாதாரத்துறை (PPH) விசாரணை நடத்தி வருகிறது. இதன் மூலம், இந்த ஆண்டில் அந்த பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. கடந்த 3ஆம் திகதி சீடலிலிருந்து டொரண்டோவுக்கு வந்த ஏர் கனடா விமானம் AC540-ல் பயணித்தவர்கள், அல்லது அதே நாளில்…