Category: கனடா செய்திகள்
-
கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை
கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படும் என எதிர்க் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் கனடிய நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என பொலியேவ் தெரிவித்துள்ளார். லிபரல் கட்சிக்கு ஆதரவு வழங்கி வந்த என்.டி.பி கட்சி ஆதரவு வழங்குவதை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் லிபரல் அரசாங்கம்…
-
கனடா வறுமை நிலைக்கு செல்கிறதா?
கனடா வறுமை நிலைக்கு செல்கிறதா? கனடாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செல்வந்த நிலை தொடர்பான இடைவெளி தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சனத்தொகை வளர்ச்சியுடன் ஒப்பீடு செய்யும் போது கனடாவின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக செல்வந்த நாடுகளில் கனடாவின் பொருளாதார வளர்ச்சி நிலைமை போதுமானது அல்ல என தெரிவிக்கப்படுகிறது.
-
ஏகலைவன் சொல்வதென்ன
மேற்காணப்படும் வாட்ஸ்ப் செய்திமூலம் வெளிக் கொண்டுவரப்பட்ட செய்தியை தற்செயலாக நான் பார்க்க நேரிட்டது. இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை என்னைப் பெரிதும் தாக்கத்திற்கு உள்ளாக்கியது. இதனால் கனடா வாழ் தமிழ் மக்களுக்கு ,சில உண்மை சம்பவங்களை தெரியப்படுத்துவது என் தேசியக் கடமையாகும். கனடாவில் ஆரம்பிக்கப்பட்ட எல்லாச் சங்கங்களையும் ஒருங்கிணைத்து தமிழர் சங்கங்களின் கூட்டமைப்பு தான் (Federation of Tamil sangam)கனடாவில் உலகத் தமிழர் இயக்கத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கிக் கொண்டு இருந்தது. உலக ஒழுங்குக் அமைய கனடாத்…
-
கனடாவில் மோசமான வேலையில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் அதிரடி கைது!
கனடாவில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த இலங்கைத் தமிழர் ஒருவர் கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றாரியோவில் விட்சர்ச்-ஸ்டௌஃப்வில்லே பகுதியை சேர்ந்த 31 வயதான கபிலரசு கருணாநிதி என்ற இலங்கைத் தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் மோசமான வேலையில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் அதிரடி கைது! கனடாவில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த இலங்கைத் தமிழர் ஒருவர் கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றாரியோவில் விட்சர்ச்-ஸ்டௌஃப்வில்லே பகுதியை சேர்ந்த 31 வயதான கபிலரசு கருணாநிதி என்ற இலங்கைத் தமிழரே…
-
கனடாவில் அதிகரிக்கும் உரிமை கோரப்படாத சடலங்கள்
கனடாவின் நியூ ஃபவுண்ட்லான்ட் பகுதியில் உரிமை கோரப்படாத சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மரண சடங்குகளை மேற்கொள்வதற்கு பொருளாதார இயலுமை இல்லாதவர்கள் சடலங்களை கைவிட்டு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் போதிய அளவு உதவியின்றி சிலரால் தங்களது நேசத்திற்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தின் மிகப்பெரிய வைத்தியசாலையில் பிணவறைகளில் உரிமை கூறப்படாத பல சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தின் அரசாங்கம் மக்களுக்கு போதிய அளவு வசதிகளை வழங்க தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுகிறது உயிரிழந்தவர்கள்…
-
கனடாவின் முக்கிய அமைச்சர் ஒருவர் ராஜினாமா
கனடிய லிபரல் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான சீமோஸ் ஓரீகன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ரீகன் தொழில் அமைச்சராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தாம் அடுத்த பொது தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். சமூக ஊடக பதிவு ஒன்றின் மூலம் தனது ராஜினாமா குறித்து அவர் அறிவித்துள்ளார். நீண்ட காலமாக லிபரல் கட்சியின் உறுப்பினராக ரீகன் கடமையாற்றி வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தான் அரசியலில் இருந்து விலகுவதாக…
-
வைர மோதிரம் கொள்வனவு செய்த கனடிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மெக்சிகோவில் கொள்வனவு செய்த வைர மோதிரம் போலியானது என தெரியவந்துள்ளது. இந்த மோதிரத்தை குறித்த பெண்ணும் அவரது காதலரும் 4176 டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளனர். எனினும் நாடு திரும்பியதன் பின்னர் இந்த வைர மோதிரத்தின் பெறுமதி வெறும் 50 டாலர்கள் என தெரிய வந்துள்ளது. தாம் ஏமாற்றப்பட்டது பெரும் வருத்தமளிப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். போலியான முறையில் மெக்சிகோவில் வைர மோதிரம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த…
-
கனடாவில் நபர் ஒருவரின் மோசமான செயல்
கனடாவின் ஹமில்டன் பகுதியில் நபர் ஒருவர் வாகனங்களை சேதப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பிலான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். சுமார் 36 வாகனங்களை குறித்த நபர் வாள் ஒன்றின் மூலம் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளன. வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியதுடன் மக்களை தம்முடன் சண்டைக்கு வருமாறு இந்த நபர் அழைத்ததாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
ஒன்றாரியோவில் காணாமல் போன பெண் தொடர்பில் வெளியான புதிய தகவல்!
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் காணாமல் போன பெண் ஒருவர் ஐந்து நாட்களின் பின் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளார். ஜெனிதா டா சில்வா என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயிருந்தார். ஒன்றாரியோவின் வுட்ஸ்டொக் பகுதியைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு காணாமல் போயிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் ஐந்து நாட்களுக்கு முன்னதாக பணி முடிந்து வீடு திரும்ப வில்லை என அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் போலீசில் முறைப்பாடு செய்திருந்தனர். சில்வா கடந்த வெள்ளிக்கிழமை ஐந்து மணிக்கு, குட் ஸ்ட்ரோக்…
-
கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த விளையாட்டு வீரருக்கு இறுதி நொடியில் நற்செய்தி
கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த விளையாட்டு வீரர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓராண்டு காலம் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜமெய்க்காவைச் சேர்ந்த தமாரி லிண்டோ மற்றும் அவரது குடும்பத்தினரே இவ்வாறு நாடு கடத்தப்படவிருந்தனர். தாமரி யோர்க் பல்கலைக்கழக மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமாரி மிகச் சிறந்த தடைதாண்டி ஓட்டவீரர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகளில் பங்குபற்றி பல்வேறு வெற்றிகளை தமாரி ஈட்டியுள்ளார் என்பது தெரிவிக்க வேண்டியவிடயம் கடந்த மாதம் மொன்றியலில் நடைபெற்ற கனடிய தடகளப் போட்டியில் 110 மீற்றர் தடை…