சர்வதேசத்தை அதிரவைத்த இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் பேச்சு!

காசாவில் தினமும் 30 முதல் 40 பேரைக் கொல்ல வேண்டும் என்றும், அங்கு மீண்டும் யூதக் குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என்றும் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்வீர் கூறியுள்ள கருத்து சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இணையவழி உரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் இடாமர் பென்-க்வீர், “குஷ் கட்டிஃப் (Gush Katif) பகுதி மட்டுமல்லாது காசா முழுவதிலும் மீண்டும் குடியிருப்புகளை அமைக்க வேண்டும்.

பாலஸ்தீன மக்கள் அதிக அளவில் வெளியேறுவதை ஊக்குவிக்க வேண்டும். தீவிரவாதிகள் எவரும் வெளியேற அனுமதிக்கப்படக்கூடாது. அவர்களை ஒவ்வொருவராகக் கொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அங்கு வாழத் தகுதியற்ற சிலர் இருக்கிறார்கள். அவர்கள் வாழவே கூடாது, அவர்கள் மனிதர்களே அல்ல. காசாவில் உடனடி அச்சுறுத்தலாக இல்லாதவர்களையும் சேர்த்து, தினமும் இரவில் 30 முதல் 40 பேரைக் இலக்கு வைத்து அழிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் மற்றும் பாலஸ்தீன மக்களின் இடம்பெயர்வு தொடர்பான தீவிரவாதக் கருத்துகளை இவர் தொடர்ச்சியாகத் தெரிவித்து வரும் நிலையில், தற்போதைய பேச்சு, மனித உரிமை அமைப்புகள் மற்றும் உலக நாடுகளிடையே கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *