திடீரென காணாமல்போன வைத்திய நிபுணர் சடலமாக மீட்பு

காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணரின் மரணம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சிறப்பு மயக்கவியல் வைத்திய நிபுணரான பிரபாத் அனுராத தயரத்ன என்பவரே இன்று காலை (24) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்று (23) காலை காணாமல்போனதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் உடனடியாக விசாரணையை தொடங்கிய நிலையில், மஹியங்கனை வனப்பகுதியில் சுமார் 800 மீட்டர் தொலைவில் பாறையில் இன்று (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது சம்பவ இடத்திலிருந்து 3 வகையான மருந்துகளையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, அந்த மாத்திரைகளை உட்கொண்டு மருத்துவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்திற்காக மருந்து உட்கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *