முருகன், பயஸ், ஜெயக்குமார் நாளை இலங்கை வருகின்றனர் !

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு  விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இவர்கள் மூவரும் நாளை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார்கள் என முருகன் சார்பில் வழக்காடிய சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில்  சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் நளினி உள்ளிட்ட ஆறுபேரும் உயர் நீதிமன்றத்தால் 2022 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.

 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *