சவுதி-துருக்கி-பாகிஸ்தான் இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து

சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று முக்கியமான இஸ்லாமிய நாடுகள் இன்று (ஆகஸ்ட் 7) ஜெத்தாவில் கூடி, பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.

சவுதி இராணுவம் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய வட்டாரங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த ஒப்பந்தம் நீண்ட காலமாக ஆலோசனையில் இருந்தாலும், சமீபத்திய பிராந்திய சூழ்நிலைகள் காரணமாக விரைவாக முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்கா-ஈரான் போரின் தாக்கம், ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடலில் கப்பல் போக்குவரத்து பாதிப்பு ஆகியவை இந்த ஒப்பந்தத்தை அவசியமாக்கியுள்ளன.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் ஆகியோர் ஜெத்தாவில் சந்திக்க உள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இராணுவத் தலைவர் அசிம் முனீர் நேற்று சவுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர். துருக்கி ஜனாதிபதி இன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், இந்த விஜயம் ஆகஸ்ட் 6 முதல் 8 வரை நடைபெறும் என்றும், இது உடனடி பிரச்சினைகளைத் தாண்டி நீண்டகால முக்கியத்துவம் பெறும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக 2025-இல் சவுதி-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தான் உலகில் ஒரே அணு ஆயுதம் கொண்ட முஸ்லிம் நாடாக இருப்பதால், இந்த புதிய மூன்று நாடுகள் ஒப்பந்தம் உலக கவனத்தை ஈர்க்கிறது.

இந்த ஒப்பந்தம், பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, மூன்று நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை உறுதிப்படுத்தும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *