தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பான விசாரணையை இன்று பிற்பகல் எடுத்துக்கொள்ள செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமன்ற அமர்வு நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டிய விஜய் தரப்பு, வழக்கின் விசாரணையை வேறு ஒரு திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.
எனினும், சங்கீதா காணொளி அழைப்பு ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, வழக்குடன் தொடர்பில்லாத நபர்கள் அனைவரும் நீதிமன்ற அறையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சங்கீதா தரப்பில், வழக்கின் விசாரணையை இன்றே நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
Leave a Reply