ஈஸ்டர் ஞாயிறு மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்குமாறும் தேவாலயத்திற்கு வரும் யாத்திரிகர்கள் மற்றும் அவர்களின் பயணப்பொதிகளை பரிசோதிக்கும் வகையில் தேவாலயங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடி விசேட வேலைத்திட்டத்தை அமுல்படுத்துமாறும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, பொலிஸ் குழுக்கள் மற்றும் அந்தந்த தேவாலயங்களின் பாதிரியார்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் இணைந்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாளை மற்றும் நாளை மறுதினம் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் தலைமையக பரிசோதகர்கள் மற்றும் நிலையத் தளபதிகள் தமது பொலிஸ் எல்லைக்குட்பட்ட அனைத்து கத்தோலிக்க, கிறிஸ்தவ மற்றும் ஏனைய தேவாலயங்களுக்கும் நேரில் சென்று அருட் தந்தையரையும் நிர்வாக அதிகாரிகளையும் சந்திக்குமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.மேலும், பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான மாவட்ட அலுவலர்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் தங்கள் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் பகுதியிலும் உள்ள தேவாலயங்களுக்கு சென்று பாதுகாப்பு பணிகளை சரிபார்க்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது
Leave a Reply