செம்மணி படுகொலை குறித்த ஐ.நா அதிகாரியின் அறிக்கை ஆரோக்கியமற்றது – அப்துல்லா மஹ்ரூப்

ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைகள் ஆணையாளர் வருகையின் போது நீண்டகாலமாக புரையோடி போய்க்கிடக்கின்ற செம்மணி படுகொலை சம்பந்தமாக தமிழ் தலைமைகள் விரிவாக பேசிய போதும் அவர் நாட்டை விட்டு செல்கின்ற போது சொல்லியிருக்கின்ற அறிக்கை அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை என முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “இஸ்ரேலிய கொடும் கோலர்களால் சிறு குழந்தைகளும், பெண்களும் மருத்துவமனை தாக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கின்ற போதும் அது தொடர்பில் எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுக்காத ஒரு ஆணையாளரால் செம்மணி தொடர்பான தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை.

ஏற்கனவே நவநீதன் பிள்ளை, செம்மணி தொடர்பாக நட்ட ஈடு வழங்குவது தொடர்பாக அதன் உண்மை தன்மை தொடர்பாக மிக விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலியர்களால் காசா மக்கள் கொல்லப்படுவதை இவர்களால் கண்டிக்கவோ அறிக்கை விடவோ முடியாத போது எவ்வாறு செம்மணிக்கு தீர்வு கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *