இத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த அகில பெர்னாண்டோ என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டவர் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் கார் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த நிலையில், மீண்டும் இத்தாலிக்கு சென்ற சில நாட்களில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
Leave a Reply