ஜனாதிபதி ரணிலின் பதவிக்காலம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – அனுர !

தேர்தல் நடத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் முடிவுக்கு வர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

கனடாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய திஸாநாயக்க, நாட்டை தற்போதைய பாதையில் இருந்து விடுவிப்பதற்கான அரசியல் மாற்றத்தின் அவசியத்தை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஐந்து வருடங்களாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதோடு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக தாமதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் இருக்க முயற்சித்தால் எதிர்பார்த்ததை விட விரைவில் பதவி விலக நேரிடும் என அநுரகுமார தெரிவித்துள்ளார்.